முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 142. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 142. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தலைவியைப் பால் வயத்தனாகிக் கண்டு அளவளாவி நீங்குந் தலைவன், “என் உள்ளம் தலைவியினிடத்தே உள்ளது; இதனை அவள் அறிந்தனளோ, இலளோ!” எனக் கூறியது.)
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப் புனக்கிளி கடியும் பூங்கட் பேதை தானறிந் தனளோ இலளோ பானாட் பள்ளி யானையி னுயிர்த்தென் உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே. |
5 |
- கபிலர். |
முடிபு: என் உள்ளம் தன்னுழையது; பேதை அறிந்தனளோ! இலளோ!
கருத்து: என் உள்ளம் தலைவியின்பால் உள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 140 | 141 | 142 | 143 | 144 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 142. குறிஞ்சி - தலைவன் கூற்று, உள்ளம், இலக்கியங்கள், தலைவன், கூற்று, குறிஞ்சி, இலளோ, குறுந்தொகை, அறிந்தனளோ, பேதை, இதனை, தலைவியைப், எட்டுத்தொகை, சங்க, உள்ளது