பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
யத: ப்ரவ்ருத்திர்பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்। ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ:॥ 18.46 ॥ |
யாரிலிருந்து உயிர்கள் தோன்றியுள்ளனவோ, யாரால் இந்த பிரபஞ்சம் எல்லாம் வியாப்பிக்கபட்டிருக்கிறதோ அவரை தனது கடமையால் அர்ச்சித்து, மனிதன் இறைநிலையை அடைகிறான்.
ஷ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்। ஸ்வபாவநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்॥ 18.47 ॥ |
மன இயல்பிற்கு ஏற்ற வேலை நிறைவானதாக இல்லாமல் போகலாம். பிறர் வேலை நிறைவுடன் செய்ய தக்கதாக இருக்கலாம். இருப்பினும் தனக்குரிய வேலையை செய்வதே சிறந்தது. சொந்த இயல்பிற்கு ஏற்ற செயலை செய்பவன் கேட்டை அடைவதில்லை.
ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜேத்। ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேநாக்நிரிவாவ்ருதா:॥ 18.48 ॥ |
குந்தியின் மகனே ! குறையுடன் கலந்ததாக இருந்தாலும் மன இயல்பிற்கேற்ப வேலையை விடக்கூடாது. ஏனெனில் நெருப்பு புகையால் சூழபட்டிருப்பது போல் எல்லா செயல்களும் குறையால் சூழப்பட்டுள்ளது.
அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ்ப்ருஹ:। நைஷ்கர்ம்யஸித்திம் பரமாம் ஸம்ந்யாஸேநாதிகச்சதி॥ 18.49 ॥ |
( இயல்பிற்கேற்ற வேலையையும் ) முற்றிலும் பற்றற்று மனத்தை வசபடுத்தி, ஆசைகளை விட்டு செய்பவன் துறவின் மூலம் கிடைப்பதான செயலில் செயலின்மை காண்கின்ற மேலான நிலையை அடைகிறான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, பதினெட்டாவது, யோகம், ஸ்ரீமத், சன்யாஸ, அத்தியாயம், மோட்ச, ஏற்ற, செய்பவன், வேலை, வேலையை, இயல்பிற்கு, அடைகிறான், bhagavad, gita, இந்து, கர்ம