பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
விஷயேந்த்ரியஸம்யோகாத்யத்ததக்ரே அம்ருதோபமம்। பரிணாமே விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்॥ 18.38 ॥ |
பொருட்களும் புலன்களும் தொடர்புகொள்வதன் காரணமாக வருவதும், ஆரம்பத்தில் அமுதம் போன்றும் முடிவில் விஷம் போன்றும் இருப்பதும் ராஜச இன்பம்.
யதக்ரே சாநுபந்தே ச ஸுகம் மோஹநமாத்மந:। நித்ராலஸ்யப்ரமாதோத்தம் தத்தாமஸமுதாஹ்ருதம்॥ 18.39 ॥ |
தாமச இன்பம் ஆரம்பத்திலும் முடிவிலும் மனமயக்கம் தருகிறது. துக்கம், சோம்பல், தடுமாற்றம் ஆகியவற்றிலிருந்து தோன்றுகிறது.
ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி தேவேஷு வா புந:। ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதேபி: ஸ்யாத்த்ரிபிர்குணை:॥ 18.40 ॥ |
இயற்கையிலிருந்து தோன்றிய இந்த மூன்று குணங்களிலிருந்து விடுபட்ட உயிரினங்கள் பூமியிலோ, சொர்க்கதிலோ, தேவலோகத்திலோ இல்லை.
ப்ராஹ்மணக்ஷத்ரியவிஷாம் ஷூத்ராணாம் ச பரம்தப। கர்மாணி ப்ரவிபக்தாநி ஸ்வபாவப்ரபவைர்குணை:॥ 18.41 ॥ |
எதிரிகளை எரிப்பவனே ! மன இயல்பிலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்ப பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களின் வேலைகள் பிரிக்கபட்டிருக்கின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, ஸ்ரீமத், பதினெட்டாவது, யோகம், அத்தியாயம், சன்யாஸ, மோட்ச, இன்பம், போன்றும், bhagavad, gita, இந்து