முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » சைவ சித்தாந்த சாத்திரங்கள் » திருக்களிற்றுப்படியார்
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
அஞ்செழுத்து மேயம்மை யப்பர்தமைக் காட்டுதலால் அஞ்செழுத்தை யாறாகப் பெற்றறிந்தே - யஞ்செழுத்தை யோதப்புக் குள்ள மதியுங் கெடிலுமைகோன் கேதமற வந்தளிக்குங் கேள். |
26 |
காண்கின்ற தோர்பொருளைக் காண்கின்ற யோகிகளே காண்கின்றார் காட்சியறக் கண்ணுதலைக் - காண்கின்றார் காண்பானுங் காணப் படும்பொருளும் *இன்றியே காண்கையினாற் கண்டனரே காண். |
27 |
*அன்றியே |
பேசாமை பெற்றதனிற் பேசாமை கண்டனரைப் பேசாமை செய்யும் பெரும்பெருமான் - பேசாதே எண்ணொன்றும் வண்ண மிருக்கின்ற யோகிகள்பா லுண்ணின்றும் போகா னுளன். |
28 |
ஓட்டற்று நின்ற வுணர்வு பதிமுட்டித் தேட்டற்று நின்ற விடஞ்சிவமாம் - நாட்டற்று நாடும் பொருளனைத்து நானா விதமாகத் தேடுமிட மன்று சிவம். |
29 |
பற்றினுட் பற்றைத் துடைப்பதொரு பற்றறிருந்து பற்றைப் பரிந்திருந்து பார்க்கின்ற - பற்றதனைப் பற்றுவிடி லந்நிலையே தானே பரமாகும் *அற்றமிது சொன்னே னறி. |
30 |
*மற்றுமித சொன்னேன் |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், திருக்களிற்றுப்படியார், சாத்திரங்கள், பேசாமை, சித்தாந்த, நின்ற, இலக்கியங்கள், காண்கின்ற, காண்கின்றார்