முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » சைவ சித்தாந்த சாத்திரங்கள் » திருக்களிற்றுப்படியார்
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஆளுடையா னெந்தரமு மாளுடையா னேயறியுந் தாளுடையான் றொண்டர் தலைக்காவல் - நாளுந் திருவியலூ ராளுஞ் சிவயோகி யின்றென் வருவிசையை மாற்றினான் வந்து. |
96 |
தூலத் தடுத்த பளிங்கின் துளக்கமெனத் தூலத்தே நின்று துலங்காமற் - காலத்தால் தாளைத்தந் தென்பிறவித் தாளை யறவிழித்தார்க் காளன்றி யென்மா றதற்கு. |
97 |
இக்கணமே முத்தியினை யெய்திடினு மியானினைந்த அக்கணமே யானந்தந் தந்திடினும் - நற்கணத்தார் நாயகற்கும் நாயகிக்கும் *நானடிமை யெப்பொழுது மாயிருத்த லன்றியிலே னியான். |
98 |
*நந்திக்கும் யானடிமை; நானடிமை நந்திக்கும் |
என்னை யுடையவன்வந் தென்னுடானா யென்னளவில் என்னையுந்தன் னாளாகக் கொள்ளுதலால் - என்னை அறியப்பெற் றேனறிந்த வன்பருக்கே யாளாய்ச் செறியப்பெற் றேன்குழுவிற் சென்று. |
99 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், திருக்களிற்றுப்படியார், சாத்திரங்கள், சித்தாந்த, என்னை, இலக்கியங்கள்