முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.036.திருப்பைஞ்ஞீலி
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.036.திருப்பைஞ்ஞீலி
7.036.திருப்பைஞ்ஞீலி
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மெய்ஞ்ஞான நீலகண்டேசுவரர்.
தேவியார் - விசாலாட்சியம்மை.
361 |
காரு லாவிய நஞ்சை யுண்டிருள் டூரெ லாந்திரிந் தென்செய் வீர்பலி பாரெ லாம்பணிந் தும்மை யேபர ஆர மாவது நாக மோசொலும் |
7.036.1 |
கருமைநிறம் பொருந்திய நஞ்சினை உண்டமையால் இருண்ட கண்டத்தினையுடையவரே, நிலவுலகமெல்லாம் உம்மையே வணங்கித் துதித்துத் தொண்டுபுரியும் பெருமையுடைய, திருப்பைஞ்ஞீலி இறைவரே, காட்டில்வாழும் அழகரே, நீர் வெண்மையான தலையோட்டினைக் கையிற்கொண்டு ஊரெலாந் திரிந்து என்ன பெறப் போகின்றீர்? இவ் வோரிடத்திற்றானே நீர் வேண்டிய அளவினதாகிய பிச்சையைப் பெற்றுக்கொள்வீர்; அது நிற்க; உமக்கு முத்து வடமாவது, பாம்புதானோ? சொல்லீர்.
362 |
சிலைத்து நோக்கும்வெள் ளேறு செந்தழல் பலிக்கு நீர்வரும் போது நுங்கையிற் மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் அலைக்கும் பைம்புனல் சூழ்பைஞ் ஞீலியில் |
7.036.2 |
இறைவரே, மலையின்கண் பிறந்த, 'சந்தனம், வேங்கை, கோங்கு, மிக்க கரிய அகில், சண்பகம்; என்னும் மரங்களை அலைத்துக்கொண்டு வரும், தண்ணிய நீர் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருக்கின்ற, காட்டில் வாழும் அழகரே, நுமது வெள்விடை முழக்கமிட்டுச் சினந்து பார்க்கின்றது, சிவந்த நெருப்புப் போலும் நஞ்சினைக் கொண்ட வாயினையுடைய பாம்பு, 'மூசு' என்னும் ஓசையுண்டாகச் சீறுகின்றது; ஆதலின், நீர் பிச்சைக்கு வரும் போது கையில் பாம்பையேனும் கொண்டுவருதல் வேண்டா.
363 |
தூய வர்கண்ணும் வாயும் மேனியுந் பேயொ டாடலைத் தவிரும் நீரொரு பாயும் நீர்க்கிடங் கார்க மலமும் ஆய பைம்பொழில் சூழ்பைஞ் ஞீலியில் |
7.036.3 |
எம்பெருமானிரே, பாயுந் தன்மையுடைய நீரைக் கொண்ட அகழியில் நிறைந்துள்ள தாமரைகளும், அதன் கரையில், மாதவியும், புன்னையும் பொருந்திய' சோலைகள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியுள்ள, காட்டில் வாழும் அழகரே, நீர், கண்ணும், வாயும், மேனியும் அழகியராய் இருக்கின்றீர்; ஆயினும், தைத்த கோவணத்தை உடுத்து, சுடலையில் பேயோடு ஆடுதலை ஒழிய மாட்டீர்; நீர் ஒரு பித்தரோ? அவற்றை விட்டொழியும்.
364 |
செந்த மிழ்த்திறம் வல்லி ரோசெங்கண் வந்து நிற்குமி தென்கொ லோபலி பைந்தண் மாமலர் உந்து சோலைகள் அந்தி வானமும் மேனி யோசொலும் |
7.036.4 |
பசிய, தண்ணிய, சிறந்த பூக்களை உதிர்க்கின்ற சோலைகள் நறுமணம் வீசுகின்ற திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளி இருப்பவரே. காட்டில் வாழும் அழகரே, நீர் மகளிர் மனத்தைக் கவர்தற்கு, 'இயல், இசை, நாடகம்' என்னும் முத்தமிழிலும் வல்லிரோ? நும்மேனியும் அந்தி வானம் போல்வதோ? சொல்லீர், அவை நிற்க; நீர், உமது முன்கையில் பாம்பு நின்று படம் எடுத்து ஆடும்படி வந்து நிற்பது என்? இதனால், நாங்கள் கொண்டுவந்த பிச்சையை இடாது போக மாட்டேமும், இடமாட்டேமும் ஆகின்றேம்.
365 |
நீறு நுந்திரு மேனி நித்திலம் கூற ராய்வந்து நிற்றி ராற்கொணர்ந் பாறு வெண்டலை கையி லேந்திப்பைஞ் ஆறு தாங்கிய சடைய ரோசொலும் |
7.036.5 |
தலைவரே, காட்டில் வாழும் அழகரே, நீர், அழிந்த வெண்மையான தலையோட்டினைக் கையில் ஏந்திக் கொண்டு, 'யான் இத் திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சை இடுமின்' என்றீர்; உமது திருமேனியில் உள்ள நீறு முத்துப்போல வெள்ளொளியை வீசுகின்றது. ஆயினும், கரிய நண்ட கண்களையுடைய பெண் ஒருத்தியோடும் கூடிய பாதி உருவத்தை யுடையிராய் வந்து நிற்கின்றீர்; அதன் மேலும் நீர், கங்கையைச் சுமந்த சடையை உடையவரோ? சொல்லீர்; இதனால், உமக்கு நாங்கள் பிச்சையைக் கொணர்ந்தும் இடேமாயினேம்; நடவீர்.
366 |
குரவம் நாறிய குழலி னார்வளை இரவும் இம்மனை அறிதி ரேஇங்கே பரவி நாடொறும் பாடு வார்வினை அரவம் ஆட்டவும் வல்லி ரோசொலும் |
7.036.6 |
நாள்தோறும் பாடிப் பரவுவாரது வினைகளைப் பற்றறச் செய்யும் திருப்பைஞ்ஞீலி இறைவரே, காட்டில் வாழும் அழகரே, நீர், குராமலரின் மணத்தை வீசுகின்ற கூந்தலையுடைய மகளிரது வளைகளைக் கவர்ந்துகொள்வதே தொழிலாய், இங்குள்ள இல்லங்களை இரவிலும் வந்து அறிகின்றீர்; அதனால், நள்ளிரவில் இங்குநின்றும் நடந்துபோகவும் வல்லீரோ? அதுவன்றிப் பாம்பு ஆட்டவும் வல்லீரோ? சொல்லீர்.
367 |
ஏடு லாமலர்க் கொன்றை சூடுதிர் காடு நும்பதி ஓடு கையது பாடல் வண்டிசை யாலுஞ் சோலைப்பைஞ் ஆடல் பாடலும் வல்லி ரோசொலும் |
7.036.7 |
காட்டில் வாழும் அழகரே, நீர், 'யான், பாடுதலையுடைய வண்டுகள் இசையை முழுக்குகின்ற சோலைகளையுடைய திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சையிடுமின்' என்று சொல்லி வந்து நிற்கின்றீர்; நீர், இதழ்கள் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் சூடுகின்றீர்; அதனோடு ஒழியாது, எலும்புகளையெல்லாம் அணிந்து என்ன பெறப்போகின்றீர்? அதுவன்றி, நும் ஊரோ, காடு; நும் கையில் இருப்பதோ, ஓடு; இவ்வாறாயின் உம்மைக் காதலிப்பவர் பெறும் பொருள் யாது? இந்நிலையில் நீர், ஆடல் பாடல்களிலும் வல்லீரோ? சொல்லீர்.
368 |
மத்த மாமலர்க் கொன்றை வன்னியுங் மொய்த்த வெண்டலை கொக்கி றஃகொடு பத்தர் சித்தர்கள் பாடி யாடும்பைஞ் அத்தி யீருரி போர்த்தி ரோசொலும் |
7.036.8 |
காட்டில் வாழும் அழகரே, நீர், 'யான் அடியார்களும், சித்தர்களும் பத்திமிகுதியால் திருப்பாடல்களைப் பாடிக் கொண்டு ஆடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சை இடுமின்' என்று சொல்லிவந்து நிற்கின்றீர்; 'ஊமத்தை, கொன்றை' என்னும் இவற்றின் சிறந்த மலர்களும், வன்னியின் இலையும், கங்கையும், பிறையும், அவற்றொடு நெருங்கிய வெண்டலையும், கொக்கிறகும், வெள்ளெருக்கும் உம் சடையிலே உள்ளன; அவைகளேயன்றி, யானையை உரித்த தோலையும் மேனிமேல் போர்த்துக் கொள்வீரோ? சொல்லீர்.
369 |
தக்கை தண்ணுமை தாளம் வீணை கொக்க ரைகுட முழுவி னோடிசை பக்க மேகுயில் பாடுஞ் சோலைப்பைஞ் அக்கும் ஆமையும் பூண்டி ரோசொலும் |
7.036.9 |
காட்டில் வாழும் அழகரே, நீர், 'யான், எப்பக்கங்களிலும் குயில்கள் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சை இடுமின்' என்று சொல்லி வந்து நிற்கின்றீர். நீர், 'தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, சங்கு குடமுழா' என்னும் இவற்றொடு கூடி, பல இசைகளைப் பாடிக்கொண்டு முன்வந்து நின்று ஆடுவீர்; ஆயினும், அதற்கேற்ப நல்ல அணிகளை அணியாது, எலும்பையும், ஆமையோட்டையும் அணிந்து கொண்டீரோ? சொல்லீர்.
370 |
கையொர் பாம்பரை யார்த்தொர் பாம்பு மெய்யெ லாம்பொடிக் கொண்டு பூசுதிர் பைய வேவிடங் காக நின்றுபைஞ் ஐயம் ஏற்குமி தென்கொ லோசொலும் |
7.036.10 |
தலைவரே, காட்டில் வாழும் அழகரே, உமக்குக்கையில் ஒரு பாம்பு; அரையில், கட்டிய ஒரு பாம்பு; கழுத்தில் ஒரு பாம்பு; அவையெல்லாம் பின்புறமும் ஊர்கின்ற மேனி முழுவதும் நீற்றினால் பூசியுள்ளீர்; அதனோடு வேதம் ஓதுகின்றீர்; இவற்றோடு இசையும் உம்மிடத்தில் மெல்ல அழகியதாய்த் தோன்ற வந்து நின்று, 'யான் திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சை இடுமின்' என்கின்றீர்; பிச்சை எடுக்கும் இக்கோலம் எத்தன்மையதோ? சொல்லீர்.
371 |
அன்னஞ் சேர்வயல் சூழ்பைஞ் ஞீலியில் மின்னு நுண்ணிடை மங்கை மார்பலர் மன்னு தொல்புகழ் நாவ லூரன்வன் துன்னி இன்னிசை பாடு வார்உமை |
7.036.11 |
அன்னங்கள் தங்குகின்ற வயல்கள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியுள்ள, காட்டில் வாழும் அழகராகிய இறைவரை, தோன்றி மறைகின்ற நுண்ணிய இடையினையுடைய மங்கையர் பலர் காதலித்து அக் காதலை வெளிப்படுத்திய சொற்களையுடைய, நிலைபெற்ற பழைய புகழினையுடைய திருநாவலூரில் தோன்றினவனாகிய வன்றொண்டனது வாய்மொழியான இப்பாடல்கள் பத்தினையும், மனத்தில் புகக்கொண்டு, இனிய இசையாற் பாடுபவர், உமாதேவிக்குக் கணவனாகிய சிவபிரானது செவ்விய திருவடியை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 34 | 35 | 36 | 37 | 38 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பைஞ்ஞீலி - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - விடங்கரே, வாழும், காட்டில், திருப்பைஞ்ஞீலியில், பாம்பு, சொல்லீர், ரோசொலும், என்னும், சிறிது, உள்ளேன், பிச்சை, கொன்றை, திருப்பைஞ்ஞீலி, நிற்கின்றீர், இடுமின், நிற்றிரால், கையில், யேனென்று, நின்று, கொண்டு, வல்லீரோ, ஆயினும், சோலைகள், இறைவரே, சூழ்பைஞ், வெண்டலை, சூழ்ந்த, ஞீலியீர், ஞீலியில், பொருந்திய, ஆட்டவும், வெண்மையான, உமக்கு, தலையோட்டினைக், திருச்சிற்றம்பலம், அணிந்து, தண்ணுமை, சல்லரி, அதனோடு, சொல்லி, வேண்டா, திருமுறை, சோலைப்பைஞ், ரடிகள்நீர், புன்னையும், எழுந்தருளியுள்ள, சண்பகம், பைந்தண், சுடலையில், தண்ணிய, வாயும், முன்கையில், தென்கொ, நாங்கள், யேனென்றீ, பிரானிரே, இதனால், வேங்கை, சிறந்த, வீசுகின்ற, தலைவரே