முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.034.திருப்புகலூர்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.034.திருப்புகலூர்
7.034.திருப்புகலூர்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினியீசுவரர்.
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
340 |
தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ் பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை இம்மை யேதருஞ் சோறுங் கூறையும் அம்மை யேசிவ லோகம் ஆள்வதற் |
7.034.1 |
புலவர்காள், எம் தந்தையாகிய சிவபிரான், தன்னையே பாடுவார்க்கு இம்மையிற்றானே நல்ல உண்டியும், ஆடையும், பிறவும் தந்து புரப்பான்; அதனால், புகழும் மிகும்; துன்பங் கெடுதலும் உண்டாம், இவையன்றி இவ்வுடம்பு நீங்கிய நிலையிற்றானே சிவலோகத்தை ஆளுதல் உளதாம் என்றற்கு, ஐயுறவைத் தருங்காரணம் யாதும் அறுதியாக இல்லை; ஆதலின், தமக்கு அடிமைகளாய்த் தம்மையே புகழ்ந்து, தமக்கு விருப்பமாயவற்றையே சொல்லி, அதன் மேலும் தம்மையே துணையாகச் சார்ந்து நிற்பினும், அங்ஙனம் சார்ந்தவர்க்கு ஒன்றுந் தருங்குணம் இல்லாத பொய்ம்மையை ஆளுதலையுடைய மக்களைப் பாடுதலை அறவே விடுத்து, அவனது திருப்புகலூரைப் பாடுமின்கள்.
341 |
மிடுக்கி லாதானை வீம னேவிறல் கொடுக்கி லாதானைப் பாரி யேயென்று பொடிக்கொள் மேனியெம் புண்ணி யன்புக அடுக்கு மேலம ருலகம் ஆள்வதற் |
7.034.2 |
புலவர்காள், வலியும் வீரமும் இல்லாதவனை, ''இவன் மல்லுக்கு வீமனே போல்வான், வில்லுக்கு வெற்றியையுடைய அருச்சுனனே போல்வான்' என்றும், கொடுத்தற்குணம் இல்லாதவனை, 'இவன் கொடைக்குப் பாரியே போல்வான்' என்றும் இல்லது கூறிப்பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், நீற்றைக்கொண்ட திருமேனியையுடைய எம் புண்ணிய வடிவினனாகிய சிவபிரானது திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், பல உலக அடுக்கிற்கும் மேல் உள்ள அமரரது உலகத்தை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை.
342 |
காணி யேற்பெரி துடைய னேகற்று பேணி யேவிருந் தோம்பு மேயென்று பூணி பூண்டுழப் புட்சி லம்புந்தண் ஆணி யாய்அம ருலகம் ஆள்வதற் |
7.034.3 |
புலவர்காள், நிலம் சிறிதும் இல்லாதவனை, 'காணியோ பெரிதுடையன்' என்றும், கல்வியில்லாத பேதையை, 'கற்று நலம் பெற்றவன்' என்றும், ஒருவரோடும் அளவளாவுதல் இல்லாதவனை, 'நண்பரையும், நல்ல சுற்றத்தாரையும் பேணுதலுடையவன்' என்றும், தானே தமியனாய் உண்டு களித்து ஈர்ங்கை விதிராதவனை, 'விருந்தினரை நன்கு புறந்தருவோன்' என்றும் பொய் சொல்லிப் பாடினும், நீவிர் வேண்டுவதனை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், உழவர் எருதுகளைப் பூட்டி நிலத்தை உழ, வயற் பறவைகள் ஒலிக்கின்ற, தண்ணிய திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், அமரர் உலகமாகிய தேர்க்கு அச்சாணியாய் நின்று அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற்காரணம் யாதும் அறுதியாக இல்லை.
343 |
நரைகள் போந்துமெய் தளர்ந்து மூத்துடல் வரைகள் போல்திரள் தோள னேயென்று புரைவெள் ளேறுடைப் புண்ணி யன்புக அரைய னாய்அம ருலகம் ஆள்வதற் |
7.034.4 |
மெய்ம்முழுதும் நரைகள் வரப்பெற்று, மூப்பெய்தி, உடல் நடுக்கங் கண்டு, கால் தளர்ந்து நிற்கின்ற இத்தன்மையனாகிய கிழவனை, 'மலைகள் போலத்திரண்ட தோள்களையுடைய காளையே' என்று பொய்யாகப் புகழ்ந்து பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், உயர்ந்த வெள்ளிய இடபத்தினையுடைய புண்ணியனாகிய சிவபிரானது திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், அமரர் உலகத்திற்குத் தலைவராய் அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை.
344 |
வஞ்ச நெஞ்சனை மாச ழக்கனைப் பஞ்ச துட்டனைச் சாது வேயென்று பொன்செய் செஞ்சடைப் புண்ணி யன்புக நெஞ்சில் நோயறுத் துஞ்சு போவதற் |
7.034.5 |
புலவர்காள், வஞ்சம் பொருந்திய நெஞ்சை உடையவனும், பெரும்பொய்யனும், பாவத்தொழிலை உடையவனும், நீதி இல்லாதவனும், பஞ்ச மாபாதகங்களையும் செய்பவனும் ஆகியவனை, 'சான்றோனே' என்று உயர்த்திப் பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், பொன்போலும் சிவந்த சடையினையுடைய புண்ணியனாகிய சிவபிரானது திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், மனத்தில் தோன்றும் துன்பங்களையெல்லாம் அறுத்தெறிந்து பிழைத்துப் போதல் உளதாம் என்றற்கு, ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை.
345 |
நலமி லாதானை நல்ல னேயென்று குலமி லாதானைக் குல னேயென்று புலமெ லாம்வெறி கமழும் பூம்புக அலம ராதம ருலக மாள்வதற் |
7.034.6 |
புலவர்காள், அழகில்லாதவனை, 'அழகுடையவனே' என்றும், முழுதும் நரை எய்திய கிழவனை, 'இளையவனே' என்றும் இழிகுலத்தவனை, 'உயர்குலத்தவனே' என்றும் மாறிச் சொல்லிப்பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பவர் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், வயல்களெல்லாம் தாமரை முதலியவற்றின் மணங்கமழ்கின்ற அழகிய திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், அலைவின்றி அமரர் உலகத்தை ஆளுதல் உளதாம் என்றற்கு, ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை.
346 |
நோய னைத்தடந் தோள னேயென்று தாயன் றோபுல வோர்க்கெ லாமென்று போயு ழன்றுகண் குழியா தேயெந்தை ஆய மின்றிப்போய் அண்ட மாள்வதற் |
7.034.7 |
தொழுநோயால் வருந்துகின்றவனை, 'பெரிய தோள்களை யுடைய மல்லனே' என்றும், ஒன்றும் ஈயாத சிறுமைக் குணம் உடையவனை, 'இவன் புலவர்கட்கெல்லாம் பெருமை பொருந்திய தாய்போல்பவன் அன்றோ' என்றும், நுமக்கு வரும் இளிவரல் கருதாதே பலரும் அறியக் கூறிப்பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், உலகரிடத்துச் சென்று அலைந்து கண்குழிய மெலியாமல், எம் தந்தையாகிய சிவபிரானது திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், வருத்தமின்றிச் சென்று வானுலகை ஆளுதல் உளதாம் என்றற்கு, ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை.
347 |
எள்வி ழுந்திடம் பார்க்கு மாகிலும் வள்ள லேஎங்கள் மைந்த னேயென்று புள்ளெ லாஞ்சென்று சேரும் பூம்புக அள்ளற் பட்டழுந் தாது போவதற் |
7.034.8 |
புலவர்காள், எள் விழுந்த இடத்தை, அவ்விழப்பிற்கு வருந்திக் கூர்ந்து நோக்கித் தேடுபவனாயும், ஈக்கும் ஈயாது சிந்தியவற்றைச் சேர்ப்பவனாயும் உள்ளவனை, 'அள்ளி வீசும் வள்ளலே, எங்கட்கு வலிமையாய் உள்ளவனே' என்று சொல்லி வாழ்த்துதலைச் செய்யினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பவர் இவ்வுலகில் இல்லை; ஆதலின், பறவைகளெல்லாம் சென்று சேர்கின்ற அழகிய புகலூரைப் பாடுமின்; பாடினால், உலகியலாகிய சேற்றிற்பட்டு அழுந்தாது பிழைத்துப் போதல் உளதாம் என்றற்கு, ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை.
348 |
கற்றி லாதானைக் கற்று நல்லனே முற்றி லாதானை முற்ற னேயென்று பொத்தி லாந்தைகள் பாட்ட றாப்புக அத்த னாய்அம ருலகம் ஆள்வதற் |
7.034.9 |
புலவர்காள், ஒருஞான்றும் ஒன்றனையும் கற்றறியாதவனை, 'மிகவும் கற்று வல்லனாயினானே' என்றும், அழகு சிறிதும் இல்லாதவனை, 'அழகில் காமதேவனை ஒப்பானே' என்றும், ஆண்டும் அறிவும் முதிராதவனை, அவற்றால் முதிர்ந்தவனே என்றும் புனைந்து கூறிப்பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், மரப்பொந்துகளில் ஆந்தைகளின் ஓசை இடையறாது ஒலிக்கின்ற திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், அமரர் உலகிற்குத் தலைவராய், அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு, ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை.
349 |
தைய லாருக்கொர் காம னேசால கையு லாவிய வேல னேயென்று பொய்கை வாவியின் மேதி பாய்புக ஐய னாய்அம ருலகம் ஆள்வதற் |
7.034.10 |
புலவர்காள், யாவராலும் அருவருக்கப்படும் தோற்றத்தவனை, 'மகளிருள்ளத்திற்குக் காமன் போலத் தோன்றுபவனே, ஆடவர் யாவரினும் மிக இனிய அழகுடைய வியத்தகு தோற்றத்தை யுடையவனே, முருகனுக்கு வேறாய மற்றொரு முருகனே' என்று உறுதியாகச் சொல்லிப்பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், பெரிய பொய்கைகளிலும், சிறிய குளங்களிலும் எருமைகள் வீழந்து உழக்குகின்ற திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், அமரருலகத்திற்குத் தலைவராய், அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை.
350 |
செறுவி னிற்செழுங் கமலம் ஓங்குதென் நறவம் பூம்பொழில் நாவ லூரன் சிறுவன் வன்றொண்டன் ஊரன் பாடிய றவ னாரடி சென்று சேர்வதற் |
7.034.11 |
வயல்களில் செந்தாமரைகள் செழிக்கின்ற அழகிய திருப்புகலூரில் விரும்பி எழுந்தருளியுள்ள செல்வனாய சிவபெருமானை, தேனையுடைய பூஞ்சோலைகளை உடைய திருநாவலூரனும், வனப்பகைக்குத் தந்தையும், சடையனார்க்கு மகனும், வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய பத்துப் பாடல்களாகிய இவைகளைப் பாட வல்லவர்கள், அறவடிவினனாகிய அப்பெருமானது அரிய திருவடிகளில் சென்று சேர்வர் என்றற்கு, ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 32 | 33 | 34 | 35 | 36 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்புகலூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பாடுமின், என்றும், என்றற்கு, வில்லையே, யாதும், கியாதும், அறுதியாக, உளதாம், ஆதலின், புலவீர்காள், பாரிலை, னுங்கொடுப், திருப்புகலூரைப், நீவிர், காரணம், நுமக்குக், இவ்வுலகில், ஐயுறற், ஒருவரும், பாடினால், புலவர்காள், வேண்டுவதை, ஆளுதல், கொடுப்பார், னேயென்று, லூரைப், ஆள்வதற், சென்று, ருலகம், இல்லாதவனை, புகலூர், சிவபிரானது, பாடினும், கிழவனை, னாய்அம, கூறிப்பாடினும், புண்ணி, யன்புக, லாதானை, போல்வான், உடையவனும், மாந்தனை, பொருந்திய, போவதற், லாதானைக், தலைவராய், சொல்லிப்பாடினும், திருமுறை, ஈக்கும், கொடுப்பவர், புண்ணியனாகிய, மாள்வதற், பூம்புக, தேயெந்தை, தம்மையே, சிறிதும், புகழ்ந்து, உலகத்தை, சொல்லி, தமக்கு, ஒலிக்கின்ற, திருப்புகலூர், வாழ்த்தி, தந்தையாகிய, தளர்ந்து, நரைகள், திருச்சிற்றம்பலம்