முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.026.திருக்காளத்தி
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.026.திருக்காளத்தி
7.026.திருக்காளத்தி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காளத்திநாதர்.
தேவியார் - ஞானப்பூங்கோதையம்மை.
259 |
செண்டா டும்விடையாய் சிவ வண்டா ருங்குழலா ளுமை கண்டார் காதலிக்குங் கண அண்டா வுன்னையல்லால் அறிந் |
7.026.1 |
விரைந்து நடக்கும் இடப வாகனத்தை உடையவனே, சிவபெருமானே, செழுமையான ஒளி வடிவினனே, வண்டுகள் நிறையச் சூழும் கூந்தலையுடைய உமையம்மையை ஒரு பாகத்தில் விரும்பிக் கொண்டவனே, உன்னைக் கண்டவர் பின்பு நீங்காது பேரன்பு செய்யப்படுபவனே, பூதக் கூட்டத்திற்கு அரசனே, திருக்காளத்தியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே, பரவெளியில் விளங்குபவனே, அடியேன் உன்னை யல்லது பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன்; ஆதலின், அடியேனுக்கு அருள் பண்ணுதல் வேண்டும்.
260 |
இமையோர் நாயகனே இறை கமையார் கருணையினாய் கரு உமையோர் கூறுடையாய் உரு அமைவே யுன்னையல்லால் அறிந் |
7.026.2 |
தேவர்கட்குத் தலைவனே, கடவுளே, என் துன்பங்களை விலக்குதற்குத் துணையாய் நின்று உதவுபவனே, பொறுமை நிறைந்த அருளையுடையவனே, கரிய பெரிய மேகம் போலும் கண்டத்தை யுடையவனே உமையம்மையை ஒரு பாகத்தில் உடைய அவ்வடிவத்தை உடையவனே, திருக்காளத்தியுள் எழுந்தருளியிருப்பவனே, அடியேன், உன்னை யன்றிப் பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன்; ஆதலின், எனக்கு அருள்பண்ணுதல் வேண்டும்.
261 |
படையார் வெண்மழுவா பக விடையார் வேதியனே விளங் கடையார் மாளிகைசூழ் கண உடையாய் உன்னையல்லால் உகந் |
7.026.3 |
படைக்கலமாகப் பொருந்திய வெள்ளிய மழுவை உடையவனே, சூரியனது பல்லை உதிர்த்தவனே, இடபத்தின்கண் பொருந்தும் அந்தணனே, ஒளிவிடுகின்ற குழையை யணிந்த காதினை உடையவனே, அழகிய வாயில்கள் பொருந்திய மாளிகைகள் சூழ்ந்த திருக்காளத்தியில் எழுந்தருளியிருப்பவனே; பூதகண நாதனே, என்னை உடையவனே, அடியேன், உன்னையல்லது, பிறரை விரும்பிப் போற்றுதலே இலன்; ஆதலின், எனக்கு அருள்பண்ணுதல் வேண்டும்.
262 |
மறிசேர் கையினனே மத குறியே என்னுடைய குரு நெறியே நின்றடியார் நினைக் அறிவே யுன்னையல்லால் அறிந் |
7.026.4 |
மான் கன்று பொருந்திய கையை உடையவனே. மதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்தவனே, யாவராலும் குறிக்கொள்ளப்படும் பொருளே, என்னை மாணாக்கனாக உடைய ஆசிரியனே, அடியவர்கள் நன்னெறிக் கண்ணே நின்று நினைக்கின்ற திருக்காளத்தியுள் எழுந்தருளியிருக்கின்ற அறிவுருவனே, அடியேன் உன்னையல்லது பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன்; உனது சிறு பணி விடைகளையே செய்வேன்; ஆதலின், எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும்.
263 |
செஞ்சே லன்னகண்ணார் திறத் தேகிடந் துற்றலறி நஞ்சேன் நானடியேன் நல மொன்றறி யாமையினால் துஞ்சேன் நானொருகாற் றொழு தேன்றிருக் காளத்தியாய் அஞ்சா துன்னையல்லால் அறிந் தேத்த மாட்டேனே. |
7.026.5 |
திருக்காளத்தியில் எழுந்தருளியிருப்பவனே, உன் அடியவனாகிய நான், நன்மை ஒன்றையே உணர்ந்து நில்லாத காரணத்தால், சிவந்த சேல்போலும் கண்களையுடைய மாதர் கூற்றிலே கிடந்து, மிகக்கதறி வருந்தினேன்; அதனிடையே ஓரொருகால், நான் மடிந்திராது உன்னை வணங்கினேன்; எவ்வாறாயினும் அச்சமின்றி, உன்னையல்லது பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலைச் செய்தலே இலன்; ஆதலின், எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும்.
264 |
பொய்யவ னாயடியேன் புக செய்யவ னாகிவந்திங் கிட மெய்யவ னேதிருவே விளங் ஐயநுன் றன்னையல் லால் அறிந் |
7.026.6 |
நடுவு நிலைமையை உடையவனாகி வந்து, பொய்யை உடையவனும், நாய்போலும் அடியவனும், அழிவில் இன்பத்துள் புகுதற்கு வழி ஒன்றும் அறியாதவனும் ஆகிய எனது துன்பங்களை யெல்லாம் நீக்கி ஆட்கொண்ட பெருமானே, உண்மை வடிவினனே, பேரின்பமானவனே, புகழுடையதாகிய திருக்காளத்தியில் எழுந்தருளியிருப்பவனே, என் தலைவனே, அடியேன், உன்னையன்றிப் பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன்; ஆதலின், எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும்.
265 |
கடியேன் காதன்மையாற் கழற் குடியாக் கோயில்கொண்ட குளிர் முடியால் வானவர்கள் முயங் அடியே னுன்னையல்லால் அறி |
7.026.7 |
வன்கண்மை உடையவனும், அன்போடு உன் திருவடித் தாமரைகளை உணர்தலைச் செய்யாதவனும் ஆகிய என் நெஞ்சம் உனக்கு உறைவிடமாகுமாறு அதனைக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளியிருக்கின்ற குளிர்ந்த நீண்ட சடையை உடைய எங்கள் அழகனே, தேவர்கள் தம் தலையினால் திருவடியைச் சேர்கின்ற திருக்காளத்திப் பெருமானே, அடியேன் உன்னையன்றி மற்றொரு வரைக் கடவுளராக அறிதலே இலன்; ஆதலின், எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும்.
266 |
நீறார் மேனியனே நிம கூறேன் நாவதனாற் கொழுந் பாறார் வெண்டலையிற் பலி ஏறே யுன்னையல்லால் இனி |
7.026.8 |
திருநீறு நிறைந்த திருமேனியை உடையவனே, தூயவனே, தலையாயவனே, எனக்கு அருட்கடலாய் நிற்பவனே, பருந்து சூழும் வெள்ளிய தலையில் பிச்சையேற்றுத் திரியும், திருக்காளத்திப் பெருமானே, ஆண் சிங்கம் போல்பவனே, அடியேன் உன்னையறிந்தபின் உன்னையன்றிப் பிறர் ஒருவரைப் போற்றுதலே இலன்; என் நாவால் ஒன்று செய்வதாயின், உன்னையன்றி மற்றொரு பொருளைச் சொல்லுதல்தானும் இலேன்; ஆதலின், எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும்.
267 |
தளிர்போல் மெல்லடியாள் தனை எளிவாய் வந்தெனுள்ளம் புகு களியார் வண்டறையுந் திருக் ஒளியே யுன்னையல்லால் இனி |
7.026.9 |
தளிர்போலும் மெல்லிய பாதங்களையுடைய உமாதேவியைத் திருமேனியில் விரும்பி வைத்தருளி, எளிமை உண்டாக என் உள்ளத்தில் புகவல்ல எம்பெருமானே, மலர்களில் களிப்புப் பொருந்திய வண்டுகள் ஒலிக்கின்ற திருக்காளத்தியில் எழுந்தருளியிருக்கின்ற அறிவு வடிவனே, அடியேன் உன்னையன்றி மற்றொரு பொருளையும் உணர்தலே இலன்; ஆதலின், எனக்கு அருள்பண்ணுதல் வேண்டும்.
268 | காரூ ரும்பொழில்சூழ் கண ஆரா இன்னமுதை அணி சீரூர் செந்தமிழ்கள் செப்பு போய்ப்பேரா விண்ணுலகம் பெறு |
7.026.10 |
மேகம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்காளத்தியுள் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் சிவபெருமானாகிய தெவிட்டாத இனிய அமுதம் போல்வானை, அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய புகழ் மிக்க இச்செந்தமிழ்ப் பாடல்களைச் சொல்லுகின்றவர்கள், வினையாய் உள்ளன யாவும் நீங்கப்பெற்று, சிவலோகத்தை அடைவார்கள்; குற்றம் யாதும் இலராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்காளத்தி - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - எனக்கு, வேண்டும், ஆதலின், அடியேன், உடையவனே, மாட்டேனே, பண்ணுதல், போற்றுதலே, கடவுளராக, அறிந்து, பிறரைக், திருக்காளத்தியில், பொருந்திய, காளத்தியாய், எழுந்தருளியிருப்பவனே, எழுந்தருளியிருக்கின்ற, யுன்னையல்லால், மற்றொரு, திருக்காளத்தியுள், உன்னையன்றி, பெருமானே, உன்னையல்லது, குந்திருக், நிறைந்த, அருள்பண்ணுதல், காளத்தியுள், நாதனெங், உடையவனும், வடிவினனே, வண்டுகள், உன்னையன்றிப், எங்கள், திருமுறை, திருச்சிற்றம்பலம், திருக்காளத்திப், போர்த்தவனே, சூழும், திருக்காளத்தி, தலைவனே, துன்பங்களை, எம்பெருமானே, பாகத்தில், சூழ்ந்த, வெள்ளிய, உமையம்மையை, நின்று