முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 154. இரத்தல் அரிது! பாடல் எளிது!
புறநானூறு - 154. இரத்தல் அரிது! பாடல் எளிது!
பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் துறை.
திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும், அறியுநர்க் காணின், வேட்கை நீக்கும் சின்னீர் வினவுவர், மாந்தர் : அதுபோல், அரசர் உழைய ராகவும், புரைதபு வள்ளியோர்ப் படர்குவர், புலவர் ; அதனால், |
5 |
`யானும்,`பெற்றது ஊதியம்; பேறியாது?` என்னேன்; உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே; `ஈயென இரத்தலோ அரிதே! நீ அது நல்கினும், நல்காய் ஆயினும் வெல்போர் எறிபடைக்கு ஓடா ஆண்மை, அறுவைத் |
10 |
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத் தண்பல இழிதரும் அருவி நின் கொண்டுபெருங்கானம், பாடல் எனக்கு எளிதே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 152 | 153 | 154 | 155 | 156 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 154. இரத்தல் அரிது! பாடல் எளிது!, பாடல், இலக்கியங்கள், இரத்தல், புறநானூறு, அரிது, எளிது, கொள், கொண்கானங்கிழான், அருவி, சங்க, எட்டுத்தொகை, துறை, புலவர்