முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 35. வென்றிச் சிறப்பு
பதிற்றுப்பத்து - 35. வென்றிச் சிறப்பு
துறை : வாகைத்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : மெய் ஆடு பறந்தலை
புரை சால் மைந்த! நீ ஓம்பல் மாறே, உரை சான்றனவால், பெருமை நின் வென்றி!- இருங் களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு நெடுந் தேர்த் திகிரி தாய வியன் களத்து, அளகுடைச் சேவல் கிளை புகா ஆர, |
5 |
தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை, அந்தி மாலை விசும்பு கண்டன்ன செஞ் சுடர் கொண்ட குருதி மன்றத்து, பேஎய் ஆடும் வெல்போர் வீயா யாணர் நின்வயினானே. |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 33 | 34 | 35 | 36 | 37 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பறந்தலை, மெய், வண்ணம்