முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 37. மன்னன் குணங்களைப் புகழ்ந்து, அவனையும் அவன்
செல்வத்தையும் வாழ்த்துதல்
பதிற்றுப்பத்து - 37. மன்னன் குணங்களைப் புகழ்ந்து, அவனையும் அவன் செல்வத்தையும் வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வலம் படு வென்றி
வாழ்க, நின் வளனே நின்னுடை வாழ்க்கை, வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த!- பகைவர் ஆரப் பழங்கண் அருளி, நகைவர் ஆர நன் கலம் சிதறி, ஆன்று, அவிந்து, அடங்கிய, செயிர் தீர், செம்மால்! |
5 |
வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்ப, துளங்கு குடி திருத்திய வலம் படு வென்றியும்; மா இரும் புடையல், மாக் கழல், புனைந்து, மன் எயில் எறிந்து மறவர்த் தரீஇ, தொல் நிலைச் சிறப்பின் நின் நிழல் வாழ்நர்க்குக் |
10 |
கோடு அற வைத்த கோடாக் கொள்கையும்; நன்று பெரிது உடையையால் நீயே, வெந்திறல் வேந்தே!-இவ் உலகத்தோர்க்கே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 35 | 36 | 37 | 38 | 39 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நின், வலம், வண்ணம்