முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 25. வென்றிச் சிறப்பு
பதிற்றுப்பத்து - 25. வென்றிச் சிறப்பு
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : கான் உணங்கு கடு நெறி
மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா; கடாஅம் சென்னிய கடுங்கண் யானை இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா; நின் படைஞர், சேர்ந்த மன்றம் கழுதை போகி, நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா; |
5 |
கடுங் கால் ஒற்றலின், சுடர் சிறந்து உருத்து, பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின், ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய- உரும் உறழ்பு இரங்கு முரசின், பெரு மலை |
10 |
வரை இழி அருவியின், ஒளிறு கொடி நுடங்க, கடும் பரிக் கதழ் சிறகு அகைப்ப, நீ நெடுந் தேர் ஓட்டிய, பிறர் அகன் தலை நாடே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - ஆடிய, அகன், நெறி, உணங்கு, கான், வண்ணமும்