முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 26. வென்றிச் சிறப்பு
பதிற்றுப்பத்து - 26. வென்றிச் சிறப்பு
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : காடுறு கடு நெறி
தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா; களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா; மத்து உரறிய மனை இன் இயம் இமிழா; ஆங்கு, பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின்- நோகோ யானே-நோதக வருமே! |
5 |
பெயல் மழை புரவு இன்றுஆகி, வெய்துற்று, 'வலம் இன்று அம்ம, காலையது பண்பு!' என, கண் பனி மலிர் நிறை தாங்கி, கைபுடையூ, மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூர, பீர் இவர் வேலிப் பாழ் மனை நெருஞ்சிக் |
10 |
காடுறு கடு நெறி ஆக மன்னிய- முருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர், உரும்பு இல் கூற்றத்து அன்ன, நின் திருந்து தொழில், வயவர் சீறிய நாடே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - புலம், நெறி, காடுறு, வண்ணமும்