முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 74. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 74. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் தோழிபால் குறியிடத்தெதிர்ப்படுதலை விரும்பினானாக, தலைவியிடம், "நம்மால் விரும்பப்படும் தலைவன் நம்மை விரும்பி மெலிகின்றான்" என்று அவள் கூறியது.)
விட்ட குதிரை விசைப்பி னன்ன விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன் யாம்தற் படர்ந்தமை அறியான் தானும் வேனில் ஆனேறுபோலச் சாயினன் என்பநம் மாணலம் நயந்தே. |
5 |
- விட்டகுதிரையார். |
முடிபு: நாடன் யாம் தற்படர்ந்தமையை அறியானாகி நம் நலம் நயந்து சாயினன்.
கருத்து: தலைவன் கருத்துக்கு உடம்பட வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 72 | 73 | 74 | 75 | 76 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 74. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தலைவன், கூற்று, குறிஞ்சி, குறுந்தொகை, தோழி, சாயினன், யாம், அறியானாகி, தானும், விரும்பி, எட்டுத்தொகை, சங்க, குதிரை, நாடன்