முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 42. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 42. குறிஞ்சி - தோழி கூற்று
(இரவில் வந்து தலைவியோடு பழகவேண்டுமென்று விரும்பிய தலைவனை நோக்கி, “நெருங்கிப் பழகாவிடினும் நும் நட்பு அழியாது” என்று குறிப்பால் தோழி மறுத்தது.)
காமம் ஒழிவ தாயினும் யாமத்துக் கருவி மாமழை வீழ்ந்தென அருவி விடரகத் தியம்பு நாடவெம் தொடர்புந் தேயுமோ நின்வயி னானே. |
|
- கபிலர். |
முடிபு: நாட, காமம் ஒழிவதாயினும் நின்வயினான் எம் தொடர்பும் தேயுமோ?
கருத்து: நீ இரவில் வாராவிடினும் தலைவிக்கும் நினக்கும் உள்ள நட்பு அழியாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 40 | 41 | 42 | 43 | 44 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 42. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, தேயுமோ, காமம், அழியாது, சங்க, எட்டுத்தொகை, இரவில், நட்பு