முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 309. மருதம் - தோழி கூற்று
குறுந்தொகை - 309. மருதம் - தோழி கூற்று
(பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனை நோக்கி, “நீ எம்மை அகன்றுஎமக்கு இன்னாதன செய்யினும் யாம் நினக்கு அன்புடையேமாகிஒழுகுவேம்” என்று தோழி கூறி வாயில் நேர்ந்தது.)
கைவினை மாக்கடம் செய்வினை முடிமார் சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட நீடின வரம்பின் வாடிய விடினும் கொடியரோ நிலம்பெயர்ந் துறைவே மென்னாது பெயர்த்துங் கடிந்த செறுவிற் பூக்கும் |
5 |
நின்னூர் நெய்த லனையேம் பெரும நீயெமக், கின்னா தனபல செய்யினும் நின்னின் றமைதல் வல்லா மாறே. |
|
- உறையூர்ச் சல்லியன் குமாரனார். |
முடிபு: பெரும, நீ எமக்கு இன்னாதன செய்யினும், வல்லாமாறுநெய்தல் அனையேம்.
கருத்து: நின்னையின்றி அமைந்திருத்தல் எமக்கு இயலாமையின்நீ இன்னாதன செய்யினும் நின்னை ஏற்றுக் கொள்வேம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 307 | 308 | 309 | 310 | 311 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 309. மருதம் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, செய்யினும், மருதம், குறுந்தொகை, கூற்று, இன்னாதன, எமக்கு, பெரும, சங்க, எட்டுத்தொகை, யாம்