முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 263. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 263. குறிஞ்சி - தோழி கூற்று
(தாய் வெறியாட்டெடுக்கக் கருதி இருப்பதைத் தோழி தலைவிக்குக்கூறுவாளாகிச் சிறைப்புறத்தானாகிய தலைவனுக்கு உணர்த்தியது.)
மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇச் செல்லாற்றுக் கவலைப் பல்லியங் கறங்கத் தோற்ற மல்லது நோய்க்குமருந் தாகா வேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்திப் பேஎய்க் கொளீஇயள் இவளெனப் படுதல் |
5 |
நோதக் கன்றே தோழி மால்வரை மழைவிளை யாடு நாடனைப் பிழையே மாகிய நாமிதற் படவே. |
|
- பெருஞ்சாத்தனார். |
முடிபு: தோழி, நாம் இதற்பட, அறுத்து இரீஇ வாழ்த்தி எனப்படுதல் நோதக்கன்று.
கருத்து: தாய் வெறியாடக் கருதினாள்; அதனை நாம் தடுக்க வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 261 | 262 | 263 | 264 | 265 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 263. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, நாம், அறுத்து, வாழ்த்தி, சங்க, எட்டுத்தொகை, தாய், பெரிய