முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 103. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 103. நெய்தல் - தலைவி கூற்று
(கூதிர்ப்பருவம் வந்தபின்பும் தலைவன் வாராமையினால் துன்புற்ற தலைவி தோழியை நோக்கி, “இவ்வாடைக் காலத்திலும் மீண்டு வாராராயினர்; இனி யான் பிரிவாற்றாது உயிர் நீங்குவேன்” என்று கூறியது.)
கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல் கவரிதழ் அன்ன தூவிச் செவ்வாய் இரைதேர் நாரைக் கெவ்வ மாகத் தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும் வாரார் போல்வர்நங் காதலர் |
5 |
வாழேன் போல்வல் தோழி யானே. | |
- வாயிலான் தேவனார். |
முடிபு: தோழி, நம் காதலர் வாடைக்காலத்தும் வாரார்; யான் வாழேன்.
கருத்து: தலைவர் இன்னும் வாராமையின் துன்பம் மிகப் பெற்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 101 | 102 | 103 | 104 | 105 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 103. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, யான், தோழி, குறுந்தொகை, கூற்று, நெய்தல், தலைவர், வாழேன், துன்பம், காலத்திலும், எட்டுத்தொகை, சங்க, வாரார், காதலர்