ஐம்பெருங் காப்பியங்கள் - சிலப்பதிகாரம்
16. கொலைக்களக் காதை
அரும்பெறற் பாவையை அடைக்கலம் பெற்ற இரும்பே ருவகையின் இடைக்குல மடந்தை அளைவிலை யுணவின் ஆய்ச்சியர் தம்மொடு மிளைசூழ் கோவலர் இருக்கை யன்றிப் பூவ லூட்டிய புனைமாண் பந்தர்க் | 5 |
காவற் சிற்றிற் கடிமனைப் படுத்துச் செறிவளை யாய்ச்சியர் சிலருடன் கூடி நறுமலர்க் கோதையை நாணீ ராட்டிக் கூடல் மகளிர் கோலங் கொள்ளும் ஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச் | 10 |
செய்யாக் கோலமொடு வந்தீர்க் கென்மகள் ஐயை காணீ ரடித்தொழி லாட்டி பொன்னிற் பொதிந்தேன் புனைபூங் கோதை என்னுடன் நங்கையீங் கிருக்கெனத் தொழுது மாதவத் தாட்டி வழித்துயர் நீக்கி | 15 |
ஏத மில்லா இடந்தலைப் படுத்தினள் நோதக வுண்டோ நும்மக னார்க்கினிச் சாவக நோன்பிக ளடிக ளாதலின் நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம் அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள் | 20 |
நெடியா தளிமின் நீரெனக் கூற இடைக்குல மடந்தையர் இயல்பிற் குன்றா மடைக்கலந் தன்னொடு மாண்புடை மரபிற் கோளிப் பாகற் கொழுங்கனித் திரள்காய் வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய் | 25 |
மாவின் கனியொடு வாழைத் தீங்கனி சாலி யரிசி தம்பாற் பயனொடு கோல்வளை மாதே கொள்கெனக் கொடுப்ப மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய் கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத் | 30 |
திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன கரிபுற அட்டில் கண்டனள் பெயர வையெரி மூட்டிய ஐயை தன்னொடு கையறி மடைமையிற் காதலற் காக்கித் தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக் | 35 |
கைவன் மகடூஉக் கவின்பெறப் புனைந்த செய்வினைத் தவிசிற் செல்வன் இருந்தபின் கடிமல ரங்கையிற் காதல னடிநீர் சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல் | 40 |
தண்ணீர் தௌித்துத் தன்கையால் தடவிக் குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு அமுத முண்க அடிக ளீங்கென அரசர் பின்னோர்க் கருமறை மருங்கின் உரிய வெல்லாம் ஒருமுறை கழித்தாங்கு | 45 |
ஆயர் பாடியின் அசோதைபெற் றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ நல்லமு துண்ணும் நம்பி யீங்குப் பல்வளைத் தோளியும் பண்டுநங் குலத்துத் தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை | 50 |
விழுமந் தீர்த்த விளக்குக் கொல்லென ஐயையுந் தவ்வையும் விம்மிதம் எய்திக் கண்கொளா நமக் கிவர் காட்சி யீங்கென உண்டினி திருந்த உயர்பே ராளற்கு அம்மென் திரையலோ டடைக்கா யீத்த | 55 |
மையீ ரோதியை வருகெனப் பொருந்திக் கல்லதர் அத்தம் கடக்க யாவதும் வல்லுந கொல்லோ மடந்தைமெல் லடியென வெம்முனை யருஞ்சுரம் போந்ததற் கிரங்கி எம்முது குரவர் என்னுற் றனர்கொல் | 60 |
மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ யானுளங் கலங்கி யாவதும் அறியேன் வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு குறுமொழி கோட்டி நெடுநகை புக்குப் பொச்சாப் புண்டு பொருளுரை யாளர் | 65 |
நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ இருமுது குரவ ரேவலும் பிழைத்தேன் சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன் வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு எழுகென எழுந்தாய் என்செய் தனையென | 70 |
அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும் பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள் மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன் | 75 |
முந்தை நில்லா முனிவிகந் தனனா அற்புளஞ் சிறந்தாங் கருண்மொழி அளைஇ எற்பா ராட்ட யானகத் தொளித்த நோயும் துன்பமும் நொடிவது போலுமென் வாயல் முறுவற்கவர் உள்ளகம் வருந்தப் | 80 |
போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின் ஏற்றெழுந் தனன்யான் என்றவள் கூறக் குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும் அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி | 85 |
நாணமும் மடனும் நல்லோ ரேத்தும் பேணிய கற்பும் பெருந்துணை யாக என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த பொன்னே கொடியே புனைபூங் கோதாய் நாணின் பாவாய் நீணில விளக்கே | 90 |
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி சீறடிச் சிலம்பி னொன்றுகொண் டியான்போய் மாறி வருவன் மயங்கா தொழிகெனக் கருங்கயல் நெடுங்கட் காதலி தன்னை ஒருங்குடன் தழீஇ உழையோ ரில்லா | 95 |
ஒருதனி கண்டுதன் உள்ளகம் வெதும்பி வருபனி கரந்த கண்ண னாகிப் பல்லான் கோவல ரில்லம் நீங்கி வல்லா நடையின் மறுகிற் செல்வோன் இமிலே றெதிர்ந்த திழுக்கென அறியான் | 100 |
தன்குலம் அறியுந் தகுதியன் றாதலின் தாதெரு மன்றந் தானுடன் கழிந்து மாதர் வீதி மறுகிடை நடந்து பீடிகைத் தெருவிற் பெயர்வோன் ஆங்கண் கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய | 105 |
நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின் கைக்கோற் கொல்லனைக் கண்டன னாகித் தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற பொன்வினைக் கொல்லன் இவனெனப் பொருந்திக் | 110 |
காவலன் றேவிக் காவதோர் காற்கணி நீவிலை யிடுதற் காதி யோவென அடியேன் அறியே னாயினும் வேந்தர் முடிமுதற் கலன்கள் சமைப்பேன் யானெனக் கூற்றத் தூதன் கைதொழு தேத்தப் | 115 |
போற்றருஞ் சிலம்பின் பொதிவா யவிழ்த்தனன் மத்தக மணியோடு வயிரம் கட்டிய பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூற் சித்திரச் சிலம்பின் செய்வினை யெல்லாம் பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கிக் | 120 |
கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு யாப்புற வில்லை யெனமுன் போந்து விறல்மிகு வேந்தற்கு விளம்பியான் வரவென் சிறுகுடி லங்கண் இருமின் நீரெனக் கோவலன் சென்றக் குறுமக னிருக்கையோர் | 125 |
தேவ கோட்டச் சிறையகம் புக்கபின் கரந்தியான் கொண்ட காலணி ஈங்குப் பரந்து வௌிப்படா முன்னம் மன்னற்குப் புலம்பெயர் புதுவனிற் போக்குவன் யானெனக் கலங்கா வுள்ளம் கரந்தனன் செல்வோன் | 130 |
கூடன் மகளிர் ஆடல் தோற்றமும் பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும் காவல னுள்ளம் கவர்ந்தன என்றுதன் ஊட லுள்ளம் உள்கரந் தொளித்துத் தலைநோய் வருத்தந் தன்மே லிட்டுக் | 135 |
குலமுதல் தேவி கூடா தேக மந்திரச் சுற்றம் நீங்கி மன்னவன் சிந்தரி நெடுங்கட் சிலதியர் தம்மொடு கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக் காப்புடை வாயிற் கடைகாண் அகவையின் | 140 |
வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்திக் கன்னக மின்றியும் கவைக்கோ லின்றியும் துன்னிய மந்திரந் துணையெனக் கொண்டு வாயி லாளரை மயக்குதுயி லுறுத்துக் கோயிற் சிலம்பு கொண்ட கள்வன் | 145 |
கல்லென் பேரூர்க் காவலர்க் கரந்தென் சில்லைச் சிறுகுடி லகத்திருந் தோனென வினைவிளை கால மாதலின் யாவதும் சினையலர் வேம்பன் தேரான் ஆகி ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கென் | 150 |
தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு கன்றிய கள்வன் கைய தாகில் கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் காவலன் ஏவக் கருந்தொழிற் கொல்லனும் ஏவ லுள்ளத் தெண்ணியது முடித்தெனத் | 155 |
தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த கோவலன் றன்னைக் குறுகின னாகி வலம்படு தானை மன்னவன் ஏவச் சிலம்பு காணிய வந்தோர் இவரெனச் செய்வினைச் சிலம்பின் செய்தி யெல்லாம் | 160 |
பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கிவன் கொலைப்படு மகனலன் என்றுகூறும் அருந்திறல் மாக்களை அகநகைத் துரைத்துக் கருந்தொழிற் கொல்லன் காட்டின னுரைப்போன் | 165 |
மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம் தந்திரம் இடனே காலம் கருவியென்று எட்டுட னன்றே இழுக்குடை மரபிற் கட்டுண் மாக்கள் துணையெனத் திரிவது மருந்திற் பட்டீ ராயின் யாவரும் | 170 |
பெரும்பெயர் மன்னனிற் பெருநவைப் பட்டீர் மந்திர நாவிடை வழுத்துவ ராயின் இந்திர குமரரின் யாங்காண் குவமோ தெய்வத் தோற்றம் தௌிகுவ ராயின் கையகத் துறுபொருள் காட்டியும் பெயர்குவர் | 175 |
மருந்தின் நங்கண் மயக்குவ ராயின் இருந்தோம் பெயரும் இடனுமா ருண்டோ நிமித்தம் வாய்த்திடி னல்ல தியாவதும் புகற்கிலா அரும்பொருள் வந்துகைப் புகுதினும் தந்திர கரணம் எண்ணுவ ராயின் | 180 |
இந்திரன் மார்பத் தாரமும் எய்துவர் இவ்விடம் இப்பொருள் கோடற் கிடமெனின் அவ்விடத் தவரை யார்காண் கிற்பார் காலங் கருதி அவர்பொருள் கையுறின் மேலோ ராயினும் விலக்கலு முண்டோ | 185 |
கருவி கொண்டவர் அரும்பொருள் கையுறின் இருநில மருங்கின் யார்காண் கிற்பார் இரவே பகலே என்றிரண் டில்லை கரவிடங் கேட்பினோர் புகலிட மில்லை தூதர் கோலத்து வாயிலின் இருந்து | 190 |
மாதர் கோலத்து வல்லிருட் புக்கு விளக்கு நிழலில் துளக்கிலன் சென்றாங்கு இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம் வெயிலிடு வயிரத்து மின்னின் வாங்கத் துயில்கண் விழித்தோன் தோளிற் காணான் | 195 |
உடைவாள் உருவ உறைகை வாங்கி எறிதொறுஞ் செறித்த இயல்பிற் காற்றான் மல்லிற் காண மணித்தூண் காட்டிக் கல்வியிற் பெயர்ந்த கள்வன் றன்னைக் கண்டோர் உளரெனிற் காட்டும் ஈங்கிவர்க் | 200 |
குண்டோ வுலகத் தொப்போ ரென்றக் கருந்தொழிற் கொல்லன் சொல்ல ஆங்கோர் திருந்துவேற் றடக்கை இளையோன் கூறும் நிலனகழ் உளியன் நீலத் தானையன் கலன்நசை வேட்கையிற் கடும்புலி போன்று | 205 |
மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து ஊர்மடி கங்குல் ஒருவன் தோன்றக் கைவாள் உருவஎன் கைவாள் வாங்க எவ்வாய் மருங்கினும் யானவற் கண்டிலேன் அரிதிவர் செய்தி அலைக்கும் வேந்தனும் | 210 |
உரிய தொன் றுரைமின் உறுபடை யீரெனக் கல்லாக் களிமக னொருவன் கையில் வெள்வாள் எறிந்தனன் விலங்கூ டறுத்தது புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப மண்ணக மடந்தை வான்றுயர் கூரக் | 215 |
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென். நேரிசை வெண்பா நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே கண்ணகி தன் கேள்வன் காரணத்தான்-மண்ணில் வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை விளைவாகி வந்த வினை. |
17. ஆய்ச்சியர் குரவை
கயலெழுதிய இமயநெற்றியின் அயலெழுதிய புலியும்வில்லும் நாவலந்தண் பொழின்மன்னர் ஏவல்கேட்பப் பாரரசாண்ட மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில் | 5 |
காலை முரசங் கனைகுர லியம்புமாகலின் நெய்ம்முறை நமக்கின் றாமென்று ஐயைதன் மகளைக் கூஉய்க் கடைகயிறு மத்துங் கொண்டு இடைமுதுமகள் வந்துதோன்றுமன்; | 10 |
உரைப்பாட்டு மடை குடப்பால் உறையா குவியிமில் ஏற்றின் | 1 |
மடக்கணீர் சோரும் வருவதொன் றுண்டு; உறிநறு வெண்ணெய் உருகா உருகும் | 2 |
மறிதெறித் தாடா வருவதொன் றுண்டு; நான்முலை யாயம் நடுங்குபு நின்றிரங்கும் | 3 |
மான்மணி வீழும் வருவதொன் றுண்டு; கருப்பம் குடத்துப்பா லுறையாமையும் குவியிமி லேற்றின் மடக்கண்ணீீர் சோர்தலும் உறியில் வெண்ணெ யுருகாமையும் மறி முடங்கியாடாமையும் மான்மணி நிலத்தற்று வீழ்தலும் வருவதோர் துன்பமுண்டென மகளை நோக்கி மனமயங்காதே மண்ணின் மாதர்க்கணியாகிய கண்ணகியுந்தான்காண ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண் பிஞ்ஞையோ டாடிய குரவை யாடுதும் யாமென்றாள் கறவை கன்று துயர் நீங்குகவெனவே; கொளு காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ் | 1 |
வேரி மலர்க் கோதையாள்; கட்டு நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப் | 2 |
பொற்றொடி மாதராள் தோள்; மல்லல் மழவிடை யூர்ந்தாற் குரியளிம் | 3 |
முல்லையம் பூங்குழல் தான்; நுண்பொறி வெள்ளை யடர்த்தாற்கே யாகுமிப் | 4 |
பெண்கொடி மாதர்தன் தோள்; பொற்பொறி வெள்ளை யடர்த்தார்க்கே யாகுமிந் | 5 |
நற்கொடி மென்முலை தான்; வென்றி மழவிடை யூர்ந்தாற் குரியளிக் | 6 |
கொன்றையம் பூங்குழ லாள்; தூநிற வெள்ளை அடர்த்தாற் குரியளிப் | 7 |
பூவைப் புதுமல ராள்; எடுத்துக் காட்டு ஆங்கு, தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் எழுவரிளங் கோதை யார் என்றுதன் மகளை நோக்கித் தொன்றுபடு முறையால் நிறுத்தி இடைமுது மகளிவர்க்குப் படைத்துக்கோட் பெயரிடுவாள் குடமுதல் இடமுறை யாக்குரல் துத்தம் கைக்கிளை உழைஇளி விளரி தாரமென விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே; மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை ஆயவன் என்றாள் இளிதன்னை- ஆய்மகள் பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார் முன்னையாம் என்றாள் முறை; மாயவன் சீருளார் பிஞ்ஞையுந் தாரமும் வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும் கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்துளாள் முத்தைக்கு நல்விளரி தான்; அவருள், வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத் தண்டாக் குரவைதான் உள்படுவாள்-கொண்டசீர் வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப் பெய்வளைக் கையாள்நம் பின்னைதா னாமென்றே ஐயென்றா ளாயர் மகள்; கூத்துள் படுதல் அவர் தாம், செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஒத்து அந்நிலையே யாடற்சீ ராய்ந்துளார்- முன்னைக் குரற்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்புற்ற கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும் முல்லைத்தீம் பாணி யென்றாள்; எனாக், குரன்மந்த மாக இளிசம னாக வரன்முறையே துத்தம் வலியா உரனிலா மந்தம் விளரி பிடிப்பாள் அவள்நட்பின் பின்றையைப் பாட்டெடுப் பாள்; பாட்டு கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் | 1 |
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ; பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் | 2 |
ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ; கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் | 3 |
எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ; தொழுனைத் துறைவனோ டாடிய பின்னை அணிநிறம் பாடுகேம் யாம்; இறுமென் சாயல் நுடங்க நுடங்கி | 1 |
அறுவை யொளித்தான் வடிவென் கோயாம் அறுவை யொளித்தான் அயர அயரும் நறுமென் சாயல் முகமென் கோயாம்; வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள் | 2 |
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம் நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும் வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்; தையல் கலையும் வளையும் இழந்தே | 3 |
கையி லொளித்தாள் முகமென் கோயாம் கையி லொளித்தாள் முகங்கண் டழுங்கி மைய லுழந்தான் வடிவென் கோயாம்; ஒன்றன் பகுதி கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள் | 1 |
மதிபுரையு நறுமேனித் தம்முனோன் வலத்துளாள் பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார் முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்; மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள் | 2 |
பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள் கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார் குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்; ஆடுநர்ப் புகழ்தல் மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும் கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசொதையார் தொழுதேத்தத் தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே; எல்லாநாம், புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும் உள்வரிப் பாணியொன் றுற்று; உள்வரி வாழ்த்து கோவா மலையாரம் கோத்த கடலாரம் | 1 |
தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக் கோகுல மேய்த்துக் குருந்தொசித்தா னென்பரால்; பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் | 2 |
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னன் திகிரிப் பொருபடையா னென்பரால்; முந்நீரி னுள்புக்கு மூவாக் கடம்பெறிந்தான் | 3 |
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் கன்னவில் தோளோச்சிக் கடல்கடைந்தா னென்பரால்; முன்னிலைப் பரவல் வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் | 1 |
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே; அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த | 2 |
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய் வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே; திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல | 3 |
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே; படர்க்கைப் பரவல் மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் | 1 |
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே; பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் | 2 |
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே; மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் | 3 |
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நாராயணா வென்னா நாவென்ன நாவே; என்றியாம், கோத்த குரவையுள் ஏத்திய தெய்வநம் ஆத்தலைப் பட்ட துயர்தீர்க்க வேத்தர் மருள வைகல் வைகல் மாறட்டு வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து இடிப்படை வானவன் முடித்தலை யுடைத்த தொடித்தோட் டென்னவன் கடிப்பிகு முரசே. |
18. துன்ப மாலை
ஆங்கு, ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள் பூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும் நீடுநீர் வையை நெடுமா லடியேத்தத் தூவித் துறைபடியப் போயினாள் மேவிக் | 5 |
குரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு விரைவொடு வந்தாள் உளள்; அவள்தான், சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்அந் நங்கைக்குச் சொல்லாடும் சொல்லாடுந் தான்; | 10 |
எல்லாவோ, காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும் ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சன்றே ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சாயின் ஏதிலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ; | 15 |
நண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும் அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சன்றே அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சாயின் மன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீ; தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன் | 20 |
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சன்றே வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சாயின் எஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ; சொன்னது:- அரைசுறை கோயில் அணியார் ஞெகிழம் | 25 |
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே குரைகழல் மாக்கள் கொலைகுறித் தனரே எனக் கேட்டு, பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த் | 30 |
திங்கள் முகிலொடுஞ் சேண்நிலம் கொண்டெனச் செங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை எங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்; இன்புறு தங்கணவர் இடரெரி யகமூழ்கத் துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல் | 35 |
மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப அன்பனை இழந்தேன்யான் அவலங்கொண் டழிவலோ; நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கித் துறைபல திறமூழ்கித் துயருறு மகளிரைப்போல் மறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்ப | 40 |
அறனென்னும் மடவோய்யான் அவலங் கொண்டழிவலோ; தம்முறு பெருங்கணவன் தழலெரி யகமூழ்கக் கைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய மகளிரைப்போல் செம்மையின் இகந்தகோல் தென்னவன் தவறிழைப்ப இம்மையும் இசையொரீஇ இனைந்தேங்கி அழிவலோ; | 45 |
காணிகா, வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும் ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டீமின் ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டைக்க பாய்திரை வேலிப் படுபொருள் நீயறிதி | 50 |
காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன் கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய் ஒள்ளெரி உண்ணுமிவ் வூரென்ற தொருகுரல். |
19. ஊர்சூழ் வரி
என்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத்தோளி நின்றிலள் நின்ற சிலம்பொன்று கையேந்தி முறையில் அரசன்றன் ஊரிருந்து வாழும் நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈதொன்று பட்டேன் படாத துயரம் படுகாலை | 5 | |
உற்றேன் உறாதது உறுவனே ஈதொன்று கள்வனோ அல்லன் கணவன்என் காற்சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈதொன்று மாதர்த் தகைய மடவார்கண் முன்னரே காதற் கணவனைக் காண்பனே ஈதொன்று | 10 | |
காதற் கணவனைக் கண்டா லவன்வாயில் தீதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று தீதறு நல்லுரை கேளா தொழிவேனேல் நோதக்க செய்தாளென் றெள்ளல் இதுவொன்றென்று அல்லலுற் றாற்றா தழுவாளைக் கண்டேங்கி | 15 | |
மல்லல் மதுரையா ரெல்லாருந் தாமயங்கிக் களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கொல் மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன் தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல் | 20 | |
மண்குளிரச் செய்யும் மறவேல் நெடுந்தகை தண்குடை வெம்மை விளைத்த திதுவென்கொல் செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால் வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல் ஐயரி யுண்கண் அழுதேங்கி யரற்றுவாள் | 25 | |
தெய்வமுற்றாள் போலுந் தகைய ளிதுவென்கொல் என்பன சொல்லி இனைந்தேங்கி யாற்றவும் மன்பழி தூற்றுங் குடியதே மாமதுரைக் கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்டச் செம்பொற் கொடியனையாள் கண்டாளைத் தான்காணான் | 30 | |
மல்லன்மா ஞாலம் இருளூட்டி மாமலைமேற் செவ்வென் கதிர்சுருங்கிச் செங்கதிரோன் சென்றொளிப்பப் புல்லென் மருள்மாலைப் பூங்கொடியாள் பூசலிட ஒல்லென் ஒலிபடைத்த தூர்; வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழன்மேற் | 35 | |
கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய்ப் புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க் கண்டாள் அவன்றன்னைக் காணாக் கடுந்துயரம் என்னுறு துயர்கண்டும் இடருறும் இவள்என்னீர் பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ | 40 | |
மன்னுறு துயர்செய்த மறவினை யறியாதேற்கு என்னுறு வினைகாணா இதுவென உரையாரோ யாருமில் மருள்மாலை இடருறு தமியேன்முன் தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ பார்மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறிழைப்ப | 45 | |
ஈர்வதோர் வினைகாணா இதுவென உரையாரோ கண்பொழி புனல்சோரும் கடுவினை யுடையேன்முன் புண்பொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ மன்பதை பழிதூற்ற மன்னவன் தவறிழைப்ப உண்பதோர் வினைகாணா இதுவென உரையாரோ | 50 | |
பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் கொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம் பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் ஈன்ற குழுவி எடுத்து வளர்க்குறூஉம் | 55 | |
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் என்றிவை சொல்லி அழுவாள் கணவன்றன் | 60 | |
பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள நின்றான் எழுந்து நிறைமதி வாள்முகம் கன்றிய தென்றவள் கண்ணீர்கை யான்மாற்ற அழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன் தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யாற்பற்றப் | 65 | |
பழுதொழிந் தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளான் எழுதெழில் மலருண்கண் இருந்தைக்க எனப்போனான் மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர் தெய்வங்கொல் போயெங்கு நாடுகேன் பொருளுரையோ இதுவன்று காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன் | 70 | |
தீவேந்தன் தனைக்கண்டித் திறங்கேட்பல் யானென்றாள் என்றாள் எழுந்தாள் இடருற்ற தீக்கனா நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர நின்றால் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச் சென்றால் அரசன் செழுங்கோயில் வாயில்முன். | 75 |
20. வழக்குரை காதை
ஆங்குக் குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும் கடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லா திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக் கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா | 5 |
விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும் கடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லா கருப்பம் செங்கோலும் வெண்குடையும் செறிநிலத்து மறிந்துவீழ்தரும் நங்கோன்றன் கொற்றவாயில் | 10 |
மணிநடுங்க நடுங்குமுள்ளம் இரவுவில்லிடும் பகல்மீன்விழும் இருநான்கு திசையும் அதிர்ந்திடும் வருவதோர் துன்பமுண்டு மன்னவற் கியாம் உரைத்துமென ஆடியேந்தினர் கலனேந்தினர் அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர் கோடியேந்தினர் பட்டேந்தினர் கொழுந்திரையலின் செப்பேந்தினர் வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர் | 15 |
மான்மதத்தின் சாந்தேந்தினர் கண்ணியேந்தினர் பிணையலேந்தினர் கவரியேந்தினர் தூபமேந்தினர் கூனுங்குறளும் ஊமுங்கூடிய குறுந்தொழிலிளைஞர் செறிந்துசூழ்தர நரைவிரைஇய நறுங்கூந்தலர் உரைவிரைஇய பலர்வாழ்த்திட ஈண்டுநீர் வையங்காக்கும் பாண்டியன்பெருந் தேவிவாழ்கென ஆயமுங் காவலுஞ்சென் றடியீடு பரசியேத்தக் | 20 |
கோப்பெருந் தேவிசென்றுதன் தீக்கனாத் திறமுரைப்ப அரிமா னேந்திய அமளிமிசை இருந்தனன் திருவீழ் மார்பின் தென்னவர் கோவே; இப்பால், வாயி லோயே வாயி லோயே அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து | 25 |
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத் தாளென்று அறிவிப் பாயே அறிவிப் பாயே; என வாயிலோன், வாழியெங் கொற்கை வேந்தே வாழி | 30 |
தென்னம் பொருப்பின் தலைவ வாழி செழிய வாழி தென்னவ வாழி பழியொடு படராப் பஞ்வ வாழி அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி | 35 |
வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள் அறுவர்க் கிளைய நங்கை இறைவனை ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக் கானகம் உகந்த காளி தாருகன் பேருரங் கிழித்த பெண்ணு மல்லள் | 40 |
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத் தாளே கணவனை இழந்தாள் கடையகத் தாளே; என வருக மற்றவள் தருக ஈங்கென | 45 |
வாயில் வந்து கோயில் காட்டக் கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரை யோநீ மடக்கொடி யோய்எனத் தேரா மன்னா செப்புவ துடையேன் | 50 |
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் | 55 |
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை யாகி வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு | 60 |
என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி கண்ணகி யென்பதென் பெயரேயெனப்; பெண்ணணங்கே கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை | 65 |
நற்றிறம் படராக் கொற்கை வேந்தே என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத் தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே தருகெனத் தந்து தான்முன் வைப்பக் | 70 |
கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன் பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன் யானே கள்வன் | 75 |
மன்பதை காக்குந் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக் கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று | 80 |
இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி. வெண்பா அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும் | 1 |
பல்லவையோர் சொல்லும் பழுதன்றே--பொல்லா வடுவினையே செய்த வயவேந்தன் றேவி கடுவினையேன் செய்வதூஉங் காண். காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும் | 2 |
ஆவி குடிபோன அவ்வடிவும்--பாவியேன் காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக் கூடலான் கூடாயி னான். மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் | 3 |
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்--வையைக்கோன் கண்டளவே தோற்றான்அக் காரிகைதன் சொற்செவியில் உண்டளவே தோற்றான் உயிர். |
21. வஞ்சின மாலை
கோவேந்தன் தேவி கொடுவினை யாட்டியேன் யாவுந் தெரியா இயல்பினே னாயினும் முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண் நற்பகலே வன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக | 5 |
முன்னிறுத்திக் காட்டிய மொய்குழ லாள் பொன்னிக் கரையின் மணற்பாவை நின்கணவ னாமென்று உரைசெய்த மாதரொடும் போகாள் திரைவந்து அழியாது சூழ்போக வாங்குந்தி நின்ற வரியா ரகலல்குல் மாதர் உரைசான்ற | 10 |
மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று கல்நவில் தோளாயோ வென்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள் மன்னி | 15 |
மணல்மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கிக் கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள் இணையாய மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் வேற்றொருவன் நீள்நோக்கங் கண்டு நிறைமதி வாள்முகத்தைத் | 20 |
தானோர் குரக்குமுக மாகென்று போன கொழுநன் வரவே குரக்குமுக நீத்த பழுமணி அல்குற்பூம் பாவை விழுமிய பெண்ணறி வென்பது பேதைமைத்தே என்றுரைத்த நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே எண்ணிலேன் | 25 |
வண்டல் அயர்விடத் தியானோர் மகள்பெற்றால் ஒண்டொடி நீயோர் மகற்பெறில் கொண்ட கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம் கெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால் சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத் | 30 |
தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தியோர் கோடிக் கலிங்கம் உடுத்துக் குழல்கட்டி நீடித் தலையை வணங்கித் தலைசுமந்த ஆடகப்பூம் பாவை அவள்போல்வார் நீடிய மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் | 35 |
பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென் பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும் வானக் கடவளரும் மாதவருங் கேட்டீமின் | 40 |
யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று இடமுலை கையால் திருகி மதுரை வலமுறை மும்முறை வாரா அலமந்து மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து | 45 |
விட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப் பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள் | 50 |
பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர் ஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்னப் பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர் மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய | 55 |
பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே நற்றேரான் கூடல் நகர். வெண்பா பொற்பு வழுதியுந்தன் பூவையரும் மாளிகையும் விற்பொலியுஞ் சேனையுமா வேழமுங்--கற்புண்ணத் தீத்தரு வெங்கூடற் றெய்வக் கடவுளரும் மாத்துவத் தான்மறைந்தார் மற்று. |
22. அழற்படு காதை
ஏவல் தெய்வத் தெரிமுகம் திறந்தது காவல் தெய்வங் கடைமுகம் அடைத்தன அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன் வளைகோல் இழுக்கத் துயிராணி கொடுத்தாங்கு இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப் | 5 |
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர் காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும் | 10 |
ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக் காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர் வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து கோமகன் கோயிற் கொற்ற வாயில் தீமுகங் கண்டு தாமிடை கொள்ள | 15 |
நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளித் தண்கதிர் மதியத் தன்ன மேனியன் ஒண்கதிர் நித்திலம் பூணொடு புனைந்து வெண்ணிறத் தாமரை அறுகை நந்தியென்று இன்னவை முடித்த நன்னிறச் சென்னியன் | 20 |
நுரையென விரிந்த நுண்பூங் கலிங்கம் புலரா துடுத்த உடையினன் மலரா வட்டிகை இளம்பொரி வன்னிகைச் சந்தனம் கொட்டமோ டரைத்துக் கொண்ட மார்பினன் தேனும் பாலும் கட்டியும் பெட்பச் | 25 |
சேர்வன பெறூஉந் தீம்புகை மடையினன் தீர்த்தக் கரையும் தேவர் கோட்டமும் ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று பிற்பகற் பொழுதிற் பேணினன் ஊர்வோன் நன்பகல் வரவடி யூன்றிய காலினன் | 30 |
விரிகுடை தண்டே குண்டிகை காட்டம் பிரியாத் தருப்பை பிடித்த கையினன் நாவினும் மார்பினும் நவின்ற நூலினன் முத்தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ வேத முதல்வன் வேள்விக் கருவியோடு | 35 |
ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும் வென்றி வெங்கதிர் புரையும் மேனியன் குன்றா மணிபுனை பூணினன் பூணொடு முடிமுதற் கலன்கள் பூண்டனன் முடியொடு சண்பகம் கருவிளை செங்கூ தாளம் | 40 |
தண்கமழ் பூநீர்ச் சாதியோடு இனையவை கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும் ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன் அங்குலி கையறிந்து அஞ்சுமகன் விரித்த குங்கும வருணங் கொண்ட மார்பினன் | 45 |
பொங்கொளி யரத்தப் பூம்பட் டுடையினன் முகிழ்த்தகைச் சாலி அயினி பொற்கலத் தேந்தி ஏலு நற்சுவை இயல்புளிக் கொணர்ந்து வெம்மையிற் கொள்ளும் மடையினன் செம்மையில் | 50 |
பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன் ஆழ்கடல் ஞால மாள்வோன் தன்னின் முரைசொடு வெண்குடை கவரி நெடுங்கொடி உரைசா லங்குசம் வடிவேல் வடிகயிறு எனவிவை பிடித்த கையின னாகி | 55 |
எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி மன்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சிக் கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு நடும்புகழ் வளர்த்து நானிலம் புரக்கும் உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன | 60 |
அரைச பூதத்து அருந்திறற் கடவுளும் செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன் மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர் அரைசுமுடி யொழிய அமைத்த பூணினன் வாணிக மரபின் நீள்நிலம் ஓம்பி | 65 |
நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் உரைசால் பொன்னிறங் கொண்ட உடையினன் வெட்சி தாழை கட்கமழ் ஆம்பல் சேட னெய்தல் பூளை மருதம் கூட முடித்த சென்னியன் நீடொளிப் | 70 |
பொன்னென விரிந்த நன்னிறச் சாந்தம் தன்னொடு புனைந்த மின்னிற மார்பினன் கொள்ளும் பயறும் துவரையும் உழுந்தும் நன்னியம் பலவும் நயந்துடன் அளைஇக் கொள்ளெனக் கொள்ளும் மடையினன் புடைதரு | 75 |
நெல்லுடைக் களனே புள்ளுடைக் கழனி வாணிகப் பீடிகை நீள்நிழற் காஞ்சிப் பாணிகைக் கொண்டு முற்பகற் பொழுதில் உள்மகிழ்ந் துண்ணு வோனே அவனே நாஞ்சிலம் படையும் வாய்ந்துறை துலாமுஞ் | 80 |
சூழொளித் தாலு மியாழும் ஏந்தி விலைந்துபத மிகுந்து விருந்துபதம் தந்து மலையவும் கடலவு மரும்பலம் கொணர்ந்து விலைய வாக வேண்டுநர்க் களித்தாங்கு உழவுதொழி லுதவும் பழுதில் வாழ்க்கைக் | 85 |
கிழவன் என்போன் கிளரொளிச் சென்னியின் இளம்பிறை சூடிய இறையவன் வடிவினோர் விளங்கொளிப் பூத வியன்பெருங் கடவுளும் கருவிளை புரையு மேனிய னரியொடு வெள்ளி புனைந்த பூணினன் தெள்ளொளிக் | 90 |
காழகம் செறிந்த உடையினன் காழகில் சாந்து புலர்ந்தகன்ற மார்பினன் ஏந்திய கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும் காட்டிய பூவிற் கலந்த பித்தையன் கம்மியர் செய்வினைக் கலப்பை ஏந்திச் | 95 |
செம்மையின் வரூஉஞ் சிறப்புப் பொருந்தி மண்ணுறு திருமணி புரையு மேனியன் ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன் ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப் பாடற் கமைந்த பலதுறை போகிக் | 100 |
கலிகெழு கூடற் பலிபெறு பூதத் தலைவ னென்போன் தானுந் தோன்றிக் கோமுறை பிழைத்த நாளி லிந்நகர் தீமுறை உண்பதோர் திறனுண் டென்ப தாமுறை யாக அறிந்தன மாதலின் | 105 |
யாமுறை போவ தியல்பன் றோவெனக் கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன் நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயரக் கூல மறுகும் கொடித்தேர் வீதியும் பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் | 110 |
உரக்குரங்கு உயர்த்த ஒண்சிலை உரவோன் காவெரி யூட்டிய நாள்போற் கலங்க அறவோர் மருங்கின் அழற்கொடி விடாது மறவோர் சேரி மயங்கெரி மண்டக் கறவையும் கன்றும் கனலெரி சேரா | 115 |
அறவை யாயர் அகன்றெரு அடைந்தன மறவெங் களிறும் மடப்பிடி நிரைகளும் விரைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன சாந்தந் தோய்ந்த ஏந்திள வனமுலை மைத்தடங் கண்ணார் மைந்தர் தம்முடன் | 120 |
செப்புவா யவிழ்ந்த தேம்பொதி நறுவிரை நறுமல ரவிழ்ந்த நாறிரு முச்சித் துறுமலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள் குங்குமம் எழுதிய கொங்கை முன்றில் பைங்கா ழாரம் பரிந்தன பரந்த | 125 |
தூமென் சேக்கைத் துனிப்பதம் பாராக் காமக் கள்ளாட் டடங்கினர் மயங்கத் திதலை அல்குல் தேங்கமழ் குழலியர் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு பஞ்சியா ரமளியில் துஞ்சுதுயில் எடுப்பி | 130 |
வால்நரைக் கூந்தல் மகளிரொடு போத வருவிருந் தோம்பி மனையற முட்டாப் பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ் வெய்தி இலங்குபூண் மார்பிற் கணவனை இழந்து சிலம்பின் வென்ற சேயிழை நங்கை | 135 |
கொங்கைப் பூசல் கொடிதோ வன்றெனப் பொங்கெரி வானவன் தொழுதனர் ஏத்தினர் எண்ணான் கிரட்டி இருங்கலை பயின்ற பண்ணியல் மடந்தையர் பயங்கெழு வீதித் தண்ணுமை முழவம் தாழ்தரு தீங்குழல் | 140 |
பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்ப் பாணியொடு நாடக மடந்தைய ராடரங் கிழந்தாங்கு எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோ இந்நாட் டிவ்வூர் இறைவனை யிழந்து தேரா மன்னனைச் சிலம்பின் வென்றிவ் | 145 |
ஊர்தீ யூட்டிய ஒருமக ளென்ன அந்தி விழவும் ஆரண ஓதையும் செந்தீ வேட்டலுந் தெய்வம் பரவலும் மனைவிளக் குறுத்தலும் மாலை அயர்தலும் வழங்குகுரன் முரசமு மடிந்த மாநகர்க் | 150 |
காதலற் கெடுத்த நோயொ டுளங்கனன்று ஊதுலைக் குருகின் உயிர்த்தன ளுயிர்த்து மறுகிடை மறுகுங் கவலையிற் கவலும் இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன் | 155 |
கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅள் வந்து தோன்றினள் மதுராபதியென். வெண்பா மாமகளும் நாமகளும் மாமயிடற் செற்றுகந்த கோமகளும் தாம்படைத்த கொற்றத்தாள்- நாம முதிரா முலைகுறைத்தாள் முன்னரே வந்தாள் | 160 |
மதுரா பதியென்னு மாது. |
[இக்காதையின் பாடல் வரிகள்
17 முதல் 33 வரையும்
37 முதல் 50 வரையும்
67 முதல் 84 வரையும்
89 முதல் 96 வரையும்
111 ஆம் வரியும்
பிற்கால இடைச்சேர்க்கையென உரையாசிரியர் பலரும் கருதுவர்.]
17 முதல் 33 வரையும்
37 முதல் 50 வரையும்
67 முதல் 84 வரையும்
89 முதல் 96 வரையும்
111 ஆம் வரியும்
பிற்கால இடைச்சேர்க்கையென உரையாசிரியர் பலரும் கருதுவர்.]
23. கட்டுரை காதை
சடையும் பிறையுந் தாழ்ந்த சென்னிக் குவளை உண்கண் தவளவாள் முகத்தி கடையெயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி இடமருங் கிருண்ட நீல மாயினும் | 5 |
வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள் இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும் வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள் வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால் தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள் பனித்துறைக் | 10 |
கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன் பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன் குலமுதற் கிழத்தி ஆதலின் அலமந்து ஒருமுலை குறைத்த திருமா பத்தினி அலமரு திருமுகத் தாயிழை நங்கைதன் | 15 |
முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக் கேட்டிசின் வாழி நங்கையென் குறையென வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்டி யாரைநீ யென்பின் வருவோய் என்னுடை ஆரஞ ரெவ்வ மறிதியோவென | 20 |
ஆரஞ ரெவ்வ மறிந்தேன் அணிஇழாஅய் மாபெருங் கூடல் மதுரா பதியென்பேன் கட்டுரை யாட்டியேன் யானின் கணவற்குப் பட்ட கவற்சியேன் பைந்தொடி கேட்டி பெருந்தகைப் பெண்ணொன்று கேளாயென் நெஞ்சம் | 25 |
வருந்திப் புலம்புறு நோய் தோழீநீ ஈதொன்று கேட்டியென் கோமகற்கு ஊழ்வினை வந்தக் கடை மாதராய் ஈதொன்று கேளுன் கணவற்குத் தீதுற வந்த வினை; காதின் | 30 |
மறைநா வோசை யல்ல தியாவதும் மணிநா வோசை கேட்டது மிலனே அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது குடிபழி தூற்றுங் கோலனு மல்லன் இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர் | 35 |
மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு இடங்கழி நெஞ்சத்து இளமை யானை கல்விப் பாகன் கையகப் படாஅது ஒல்கா உள்ளத் தோடு மாயினும் ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு | 40 |
இழுக்கந் தாராது இதுவுங் கேட்டி உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள் அரைச வேலி யல்ல தியாவதும் புரைதீர் வேலி இல்லென மொழிந்து | 45 |
மன்றத் திருத்திச் சென்றீ ரவ்வழி இன்றவ் வேலி காவா தோவெனச் செவிச்சூட் டாணியிற் புகையழல் பொத்தி நெஞ்சஞ் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று வச்சிரத் தடக்கை அமரர் கோமான் | 50 |
உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து இறைக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்க மின்மை இன்னுங் கேட்டி நன்வா யாகுதல் பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை | 55 |
திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை அறனறி செங்கோல் மறநெறி நெடுவாள் புறவுநிறை புக்கோன் கறவைமுறை செய்தோன் பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன் தாங்கா விளையுள் நன்னா டதனுள் | 60 |
வலவைப் பார்ப்பான் பராசர னென்போன் குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக் காடும் நாடும் ஊரும் போகி | 65 |
நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர் முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும் அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க | 70 |
நாவலங் கொண்டு நண்ணா ரோட்டிப் பார்ப்பன வாகை சூடி ஏற்புற நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன் செங்கோல் தென்னன் திருந்துதொழில் மறையவர் தங்கா லென்ப தூரே அவ்வூர்ப் | 75 |
பாசிலை பொதுளிய போதி மன்றத்துத் தண்டே குண்டிகை வெண்குடை காட்டம் பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி | 80 |
கடற்கடம் பெறிந்த காவலன் வாழி விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி பூந்தண் பொருநைப் பொறையன் வாழி மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கெனக் குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த் | 85 |
தளர்நடை யாயத்துத் தமர்முதல் நீங்கி விளையாடு சிறாஅ ரெல்லாஞ் சூழ்தரக் குண்டப் பார்ப்பீ ரென்னோ டோதியென் பண்டச் சிறுபொதி கொண்டுபோ மின்னெனச் சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் | 90 |
ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன் பால்நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த் தளர்நா வாயினும் மறைவிளி வழாஅது உளமலி உவகையோ டொப்ப வோதத் தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து | 95 |
முத்தப் பூணூல் அத்தகு புனைகலம் கடகம் தோட்டொடு கையுறை ஈத்துத் தன்பதிப் பெயர்ந்தன னாக நன்கலன் புனைபவும் பூண்பவும் பொறாஅ ராகி வார்த்திகன் தன்னைக் காத்தன ரோம்பிப் | 100 |
கோத்தொழி லிளையவர் கோமுறை அன்றிப் படுபொருள் வௌவிய பார்ப்பா னிவனென இடுசிறைக் கோட்டத் திட்டன ராக வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள் அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில் | 105 |
புலந்தனள் புரண்டனள் பொங்கினள் அதுகண்டு மையறு சிறப்பின் ஐயை கோயில் செய்வினைக் கதவந் திறவா தாகலின் திறவா தடைத்த திண்ணிலைக் கதவம் மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கிக் | 110 |
கொடுங்கோ லுண்டுகொல் கொற்றவைக் குற்ற இடும்பை யாவதும் அறிந்தீ மின்னென ஏவ லிளையவர் காவலற் றொழுது வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி யுரைப்ப நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி | 115 |
அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென் இறைமுறை பிழைத்தது பொறுத்தல்நுங் கடனெனத் தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன் மடங்கா விளையுள் வயலூர் நல்கிக் கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் | 120 |
இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள் தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே நிலைகெழு கூடல் நீள்நெடு மறுகின் மலைபுரை மாடம் எங்கணும் கேட்பக் கலையமர் செல்வி கதவந் திறந்தது | 125 |
சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதுங் கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின் இடுபொரு ளாயினும் படுபொரு ளாயினும் உற்றவர்க் குறுதி பெற்றவர்க் காமென யானை யெருத்தத்து அணிமுரசு இரீஇக் | 130 |
கோன்முறை யறைந்த கொற்ற வேந்தன் தான்முறை பிழைத்த தகுதியுங் கேள்நீ ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண | 135 |
உரைசால் மதுரையோடு அரைசுகே டுறுமெனும் உரையு முண்டே நிரைதொடி யோயே கடிபொழி லுடுத்த கலிங்கநன் னாட்டு வடிவேல் தடக்கை வசுவுங் குமரனும் தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும் | 140 |
காம்பெழு கானக் கபில புரத்தினும் அரைசாள் செல்வத்து நிரைதார் வேந்தர் வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர் தம்முள் பகையுற இருமுக் காவதத் திடைநிலத் தியாங்கணுஞ் | 145 |
செருவல் வென்றியிற் செல்வோ ரின்மையின் அரும்பொருள் வேட்கையிற் பெருங்கலன் சுமந்து கரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்தினோர் அங்கா டிப்பட் டருங்கலன் பகரும் | 150 |
சங்கமன் என்னும் வாணிகன் தன்னை முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன் வெந்திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன் பரத னென்னும் பெயரனக் கோவலன் விரத நீங்கிய வெறுப்பின னாதலின் | 155 |
ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழிக் கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி நிலைக்களங் காணாள் நீலி என்போள் அரசர் முறையோ பரதர் முறையோ | 160 |
ஊரீர் முறையோ சேரியீர் முறையோவென மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு எழுநா ளிரட்டி எல்லை சென்றபின் தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்தி மலைத்தலை யேறியோர் மால்விசும் பேணியில் | 165 |
கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள் எம்முறு துயரம் செய்தோ ரியாவதும் தம்முறு துயரமிற் றாகுக வென்றே விழுவோ ளிட்ட வழுவில் சாபம் பட்டனி ராதலிற் கட்டுரை கேள்நீ | 170 |
உம்மை வினைவந் துருத்த காலைச் செம்மையி லோர்க்குச் செய்தவ முதவாது வாரொலி கூந்தல்நின் மணமகன் தன்னை ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி வானோர் தங்கள் வடிவின் அல்லதை | 175 |
ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென மதுரைமா தெய்வம் மாபத் தினிக்கு விதிமுறை சொல்லி அழல்வீடு கொண்டபின் கருத்துறு கணவற் கண்டபின் அல்லது இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலனெனக் | 180 |
கொற்றவை வாயிற் பொற்றொடி தகர்த்துக் கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன் மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென இரவும் பகலும் மயங்கினள் கையற்று உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு | 185 |
அவல என்னாள் அவலித்து இழிதலின் மிசைய என்னாள் மிசைவைத் தேறலிற் கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல் நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப் | 190 |
பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர் தீத்தொழி லாட்டியேன் யானென் றேங்கி எழுநா ளிரட்டி எல்லை சென்றபின் தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்திப் பீடுகெழு நங்கை பெரும்பெய ரேத்தி | 195 |
வாடா மாமலர் மாரி பெய்தாங்கு அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக் கோநகர் பிழைத்த கோவலன் றன்னொடு வான வூர்தி ஏறினள் மாதோ கானமர் புரிகுழற் கண்ணகி தானென். | 200 |
வெண்பா தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத் தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து. கட்டுரை முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும் படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர் அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும் விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் | 5 |
ஒடியா இன்பத் தவருடை நாட்டுக் குடியுங் கூழின் பெருக்கமும் அவர்தம் வையைப் பேரியாறு வளஞ்சுரந் தூட்டலும் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும் ஆரபடி சாத்துவதி யென்றிரு விருத்தியும் | 10 |
நேரத் தோன்றும் வரியுங் குரவையும் என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் வடஆரியர் படைகடந்து தென்றமிழ்நா டொருங்குகாணப் | 15 |
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோ டொருபரிசா நோக்கிக் கிடந்த | 20 |
மதுரைக் காண்டம் முற்றிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிலப்பதிகாரம் - Impernm Kaappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - உண்டுகொல், மன்னவன், சிறப்பின், கொண்டு, செங்கோல், ஈதொன்று, மாயவன், கோயில், கோவலன், கொல்லன், கோயாம், ராயின், யாவதும், கொல்லோ, கொள்ளும், தவறிழைப்ப, சிலம்பின், சிலம்பு, நீங்கி, வெண்பா, கண்ணகி, மேனியன், மார்பினன், மன்பதை, உடையினன், பெண்டிரும், வாழ்வேந்தன், மன்னன், தெய்வமும், தீங்குழல், சான்றோரும், என்றாள், வேந்தன், தன்னொடு, திதுவென்கொல், மாக்கள், கட்டுரை, கேட்டி, கள்வன், வார்த்திகன், வாயிற், கோப்பெருந், காவலன், வேந்தர், வரையும், நோக்கிக், தென்னவன், கணவனைக், உரையாரோ, கிடப்பதோ, சொல்லி, வினைகாணா, கடைமணி, இதுவென, மறவேல், மடையினன், உரைசால், வெண்குடை, பூணினன், புரையு, பிழைத்த, முறையோ, தடக்கை, கடவுளும், மடந்தையர், கடையகத், இழந்தாள், வாயில், புரைதீர், விரிந்த, தன்னுடன், காண்பென்காண், மருட்கைத்தே, ஊழ்வினை, காதலற், குருதி, பாண்டியன், வருவதொன், வெள்ளை, பொற்றொடி, றுண்டு, கையில், கோலத்து, கருந்தொழிற், புனைந்த, மருங்கின், தெய்வம், தியாவதும், இருநில, அரும்பொருள், வலத்துளாள், வருமேல், நெஞ்சாயின், நெஞ்சன்றே, கேட்டு, தெவன்வாழி, யோதோழீ, மகளிரைப்போல், இனைந்தேங்கி, வானவன், கொற்றத்து, வடிவென், கேளாமோ, அவன்வாயில், தம்மொடு, செய்தான், கற்பின், னென்பரால், கள்வனோ