ஐம்பெருங் காப்பியங்கள் - சிலப்பதிகாரம்
7. கானல் வரி
(கட்டுரை)
சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்புஎய்திப் பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்என்று இத்திறத்துக் குற்றம்நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கி பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ் நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய எண்வகையால் இசைஎழீஇப் பண்வகையால் பரிவுதீர்ந்து மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள் பயிர்வண்டின் கிளைபோலப் பல்நரம்பின் மிசைப்படர வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல் ஏர்உடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த எட்டு வகையின் இசைக்கர ணத்துப் பட்டவகைதன் செவியின்ஓர்த்(து) ஏவலன், பின் பாணி யாதுஎனக் கோவலன் கையாழ் நீட்ட, அவனும் காவிரியை நோக்கினவும் கடல்கானல் வரிப்பாணியும் மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன். | 1 |
வேறு (ஆற்று வரி) திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுஒச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி. கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய். மங்கை மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி. | 2 |
மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அதுஓச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி. கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய். மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி. | 3 |
உழவர் ஓதை மதகுஓதை
உடைநீர் ஓதை தண்பதங்கொள் விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி. விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்த எல்லாம் வாய்காவா மழவர் ஓதை வளவன்தன் வளனே வாழி காவேரி. | 4 |
வேறு (சார்த்து வரி - முகச்சார்த்து)
கரியமலர் நெடுங்கண் காரிகைமுன் கடல்தெய்வம் காட்டிக் காட்டி அரியசூள் பொய்த்தார் அறன்இலர்என்று ஏழையம்யாங்கு அறிகோம் ஐய விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும் ஆம்என்றே விளங்கும் வெள்ளைப் புரிவளையும் முத்தும்கண்டு ஆம்பல் பொதிஅவிழ்க்கும் புகாரே எம்மூர். | 5 |
காதலர் ஆகிக் கழிக்கானல்
கையுறைகொண்டு எம்பின் வந்தார் ஏதிலர் தாமாகி யாம்இரப்ப நிற்பதையாங்கு அறிகோம் ஐய மாதரார் கண்ணும் மதிநிழல்நீர் இணைகொண்டு மலர்ந்த நீலப் போதும் அறியாது வண்டுஊச லாடும் புகாரே எம்மூர். | 6 |
மோது முதுதிரையால் மொத்துண்டு
போந்துஅசைந்த முரல்வாய்ச் சங்கம் மாதர் வரிமணல்மேல் வண்டல் உழுதுஅழிப்ப மாழ்கி ஐய கோதை பரிந்துஅசைய மெல்விரலால் கொண்டுஓச்சும் குவளை மாலைப் போது சிறங்கணிப்பப் போவார்கண் போகாப் புகாரே எம்மூர். | 7 |
வேறு (முகம் இல் வரி) துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத தோற்றம் மாய்வான் பொறைமலி பூம்புன்னைப் பூஉதிர்ந்து நுண்தாது போர்க்கும் கானல் நிறைமதி வாள்முகத்து நேர்க்கயல்கண் செய்த உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே தீர்க்கும் போலும். | 8 |
(கானல் வரி) நிணம்கொள் புலால்உணங்கல் நின்றுபுள் ஓப்புதல் தலைக்கீடு ஆகக் கணம்கொள் வண்டுஆர்த்து உலாம்கன்னி நறுஞாழல் கையில் ஏந்தி மணம்கமழ் பூங்கானல் மன்னிமற்று ஆண்டுஓர் அணங்குஉறையும் என்பது அறியேன் அறிவேனேல் அடையேன் மன்னோ. | 9 |
வலைவாழ்நர் சேரி வலைஉணங்கும் முன்றில்
மலர்கை ஏந்தி விலைமீன் உணங்கல் பொருட்டாக வேண்டுஉருவம் கொண்டு வேறுஓர் கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது அலைநீர்த்தண் கானல் அறியேன் அறிவேனேல் அடையேன் மன்னோ. | 10 |
வேறு (நிலைவரி) கயல்எழுதி வில்எழுதிக் கார்எழுதிக் காமன் செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர். திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே அம்கண்ஏர் வானத்து அரவுஅஞ்சி வாழ்வதுவே. | 11 |
எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும்
கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணீர். கடுங்கூற்றம் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே மடம்கெழுமென் சாயல் மகளா யதுவே. | 12 |
புலவுமீன் வெள்உணங்கல் புள்ஓப்பிக் கண்டார்க்கு
அலவநோய் செய்யும் அணங்குஇதுவோ காணீர். அணங்குஇதுவோ காணீர் அடும்புஅமர்த்தண் கானல் பிணங்குநேர் ஐம்பால்ஓர் பெண்கொண் டதுவே. | 13 |
வேறு (முரிவரி) பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே பழுதுஅறு திருமொழியே பணைஇள வனமுலையே முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே எழுதுஅரு மின்இடையே எனைஇடர் செய்தவையே. | 14 |
திரைவிரி தருதுறையே திருமணல் விரிஇடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழில்இடமே மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே இருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே. | 15 |
வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே
தளைஅவிழ் நறுமலரே தனிஅவள் திரிஇடமே முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே. | 16 |
வேறு (திணை நிலைவரி) கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர் உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும் மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம் இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய். | 17 |
கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும் வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய். | 18 |
ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்
கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய். | 19 |
வேறு பவள உலக்கை கையால் பற்றித் தவள முத்தம் குறுவாள் செங்கண் தவள முத்தம் குறுவாள் செங்கண் குவளை அல்ல கொடிய கொடிய | 20 |
புன்னை நீழல் புலவுத் திரைவாய்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் கொன்னே வெய்ய. கூற்றம் கூற்றம். | 21 |
கள்வாய் நீலம் கையின் ஏந்திப்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண் புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண் வெள்வேல் அல்ல. வெய்ய வெய்ய. | 22 |
வேறு சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய் சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய் ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின் சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய். | 23 |
(கட்டுரை) ஆங்கு, கானல்வரிப் பாடல்கேட்ட மான்நெடுங்கண் மாதவியும் மன்னும்ஓர் குறிப்புஉண்டுஇவன் தன்நிலை மயங்கினான்எனக் கலவியால் மகிழ்ந்தாள்போல் புலவியால் யாழ்வாங்கித் தானும்ஓர் குறிப்பினள்போல் கானல்வரிப் பாடல்பாணி நிலத்தெய்வம் வியப்புஎய்த நீள்நிலத்தோர் மனம்மகிழக் கலத்தொடு புணர்ந்துஅமைந்த கண்டத்தால் பாடத்தொடங்கும்மன். | 24 |
வேறு (ஆற்று வரி) மருங்கு வண்டு சிறந்துஆர்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக் கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்தாய் வாழி காவேரி. கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்த எல்லாம் நின்கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி. | 25 |
பூவர் சோலை மயில்ஆலப்
புரிந்து குயில்கள் இசைபாடக் காமர் மாலை அருகுஅசைய நடந்தாய் வாழி காவேரி. காமர் மாலை அருகுஅசைய நடந்த எல்லாம் நின்கணவன் நாம வேலின் திறம்கண்டே அறிந்தேன் வாழி காவேரி. | 26 |
வாழி அவன்தன் வளநாடு
மகவாய் வளர்க்கும் தாய்ஆகி ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாய் வாழி காவேரி. ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும் ஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி. | 27 |
வேறு (சார்த்து வரி) தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும் வாங்கும்நீர் முத்துஎன்று வைகலும் மால்மகன்போல் வருதிர் ஐய வீங்குஓதம் தந்து விளங்குஒளிய வெண்முத்தம் விரைசூழ் கானல் பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர். | 28 |
மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை
இறைவளைகள் துற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங்கு அறிகோம் ஐய நிறைமதியும் மீனும் எனஅன்னம் நீள்புன்னை அரும்பிப் பூத்த பொறைமலிபூங் கொம்புஏற வண்டுஆம்பல் ஊதும் புகாரே எம்மூர். | 29 |
உண்டாரை வெல்நறா ஊண்ஓழியாப் பாக்கத்துள் உறைஒன்று இன்றித்
தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதுயாங்கு அறிகோம் ஐய வண்டல் திரைஅழிப்பக் கையால் மணல்முகந்து மதிமேல் நீண்ட புண்தோய்வேல் நீர்மல்க பரதர் கடல்துர்க்கும் புகாரே எம்மூர். | 30 |
வேறு (திணை நிலைவரி) புணர்த்துணையோடு ஆடும் பொறிஅலவன் நோக்கி இணர்த்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி உணர்வுஒழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன் வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால். | 31 |
தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும் எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள் நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால். | 32 |
புன்கண்கூர் மாலைப் புலம்பும்என் கண்ணேபோல்
துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால் இன்கள்வாய் நெய்தால்நீ எய்தும் கனவினுள் வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ? | 33 |
புள்இயல்மான் தேர்ஆழி போன வழிஎல்லாம்
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எஞ்செய்கோ? தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எம்மோடுஈங்கு உள்ளாரோடு உள்ளாய் உணராய்மற்று எஞ்செய்கோ? | 34 |
நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்க்கின்ற ஓதமே பூந்தண் பொழிலே புணர்ந்துஆடும் அன்னமே ஈர்ந்தண் துறையே இதுதகாது என்னீரே. | 35 |
நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடல்ஓதம் ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற்(று) எம்மொடு தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடல்ஓதம். | 36 |
வேறு (மயங்கு திணை நிலைவரி)
நன்நித் திலத்தின் பூண்அணிந்து நலம்சார் பவளக் கலைஉடுத்துச் செந்நெல் பழனக் கழனிதொறும் திரைஉ லாவு கடல்சேர்ப்ப. புன்னைப் பொதும்பர் மகரத்திண் கொடியோன் எய்த புதுப்புண்கள் என்னைக் காணா வகைமறத்தால் அன்னை காணின் என்செய்கோ? | 37 |
வாரித் தரள நகைசெய்து
வண்செம் பவள வாய்மலர்ந்து சேரிப் பரதர் வலைமுன்றில் திரைஉ லாவு கடல்சேர்ப்ப. மாரிப் பீரத்து அலர்வண்ணம் மடவாள் கொள்ளக் கடவுள்வரைந்து ஆர்இக் கொடுமை செய்தார்என்று அன்னை அறியின் என்செய்கோ? | 38 |
புலவுற்று இரங்கி அதுநீங்கப்
பொழில்தண் டலையில் புகுந்துஉதிர்ந்த கலவைச் செம்மல் மணம்கமழத் திரைஉ லாவு கடல்சேர்ப்ப. பலஉற்று ஒருநோய் திணியாத படர்நோய் மடவாள் தனிஉழப்ப அலவுற்று இரங்கி அறியாநோய் அன்னை அறியின் என்செய்கோ? | 39 |
வேறு
இளைஇருள் பரந்ததுவே எல்செய்வான் மறைந்தனனே
களைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே தளைஅவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட்டு உளதாம்கொல் வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை? | 40 |
கதிரவன் மறைந்தனனே கார்இருள் பரந்ததுவே
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவே புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட்டு உளதாம்கொல் மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை? | 41 |
பறவைபாட்டு அடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே
நிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர் உகுத்தனவே துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட்டு உளதாம்கொல் மறவையாய் என்உயிர்மேல் வந்தஇம் மருள்மாலை? | 42 |
வேறு (சாயல் வரி) கைதை வேலிக் கழிவாய் வந்துஎம் பொய்தல் அழித்துப் போனார் ஒருவர் பொய்தல் அழித்துப் போனார் அவர்நம் மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர். | 43 |
கானல் வேலிக் கழிவாய் வந்து
நீநல்கு என்றே நின்றார் ஒருவர் நீநல்கு என்றே நின்றார் அவர்நம் மான்நேர் நோக்கம் மறப்பார் அல்லர். | 44 |
அன்னம் துணையோடு ஆடக் கண்டு
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர் நென்னல் நோக்கி நின்றார் அவர்நம் பொன்நேர் சுணங்கிற் போவார் அல்லர். | 45 |
வேறு (முகம் இல் வரி) அடையல் குருகே அடையல்எம் கானல் அடையல் குருகே அடையல்எம் கானல் உடைதிரைநீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய் அடையல் குருகே அடையல்எம் கானல். | 46 |
வேறு (காடுரை) ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும் காந்தள் மெல்விரல் கைக்கிளை சேர்குரல் தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசைஎழீஇப் பாங்கினில் பாடிஓர் பண்ணும் பெயர்த்தாள். | 47 |
வேறு (முகம் இல் வரி) நுளையர் விளரி நொடிதரும்தீம் பாலை இளிகிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை இளிகிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல் கொளைவல்லாய் என்ஆவி கொள்வாழி மாலை. | 48 |
பிரிந்தார் பரிந்துஉரைத்த பேர்அருளின் நீழல்
இருந்துஏங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை உயிர்ப்புறத்தாய் நீஆகில் உள்ஆற்றா வேந்தன் எயில்புறத்து வேந்தனோடு என்ஆதி மாலை. | 49 |
பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின் ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை. | 50 |
வேறு
தீத்துழை வந்தஇச் செல்லல் மருள்மாலை
தூக்காது துணிந்தஇத் துயர்எஞ்சு கிளவியால் பூக்கமழ் கனலில் பொய்ச்சூள் பொறுக்க என்று மாக்கடல் தெய்வம்நின் மலர்அடி வணங்குதும். | 51 |
வேறு (கட்டுரை) எனக்கேட்டு, கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்து மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்என யாழ்இசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்ததுஆகலின் உவவுஉற்ற திங்கள்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப் பொழுதுஈங்குக் கழிந்ததுஆகலின் எழுதும்என்று உடன்எழாது ஏவலாளர் உடஞ்சூழக் கோவலன்தான் போனபின்னர், தாதுஅவிழ் மலர்ச்சோலை ஓதைஆயத்து ஒலிஅவித்துக் கையற்ற நெஞ்சினளாய் வையத்தி னுள்புக்குக் காதலனுடன் அன்றியே மாதவிதன் மனைபுக்காள் ஆங்கு, மாயிரு ஞாலத்து அரசு தலைவணக்கும் சூழி யானைச் சுடர்வாள் செம்பியன் மாலை வெண்குடை கவிப்ப ஆழி மால்வரை அகவையா எனவே. | 52 |
8. வேனில் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும் கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும் அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின் | 5 |
மன்னன் மாரன் மகிழ்துணை ஆகிய இன்இள வேனில் வந்தனன் இவண்என வளம்கெழு பொதியில் மாமுனி பயந்த இளங்கால் துதன் இசைத்தனன் ஆதலின் மகர வெல்கொடி மைந்தன் சேனை | 10 |
புகர்அறு கோலம் கொள்ளும்என் பதுபோல் கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும் படையுள் படுவோன் பணிமொழி கூற, மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டினுள் கோவலன் ஊடக் கூடாது ஏகிய | 15 |
மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி வான்உற நிவந்த மேல்நிலை மருங்கின் வேனில் பள்ளி ஏறி மாண்இழை தென்கடல் முத்தும் தென்மலைச் சாந்தும் தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின் | 20 |
கொங்கை முன்றில் குங்கும வளாகத்து மைஅறு சிறப்பின் கையுறை ஏந்தி அதிரா மரபின் யாழ்கை வாங்கி மதுர கீதம் பாடினள் மயங்கி, ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி | 25 |
நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி, வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி இடக்கை நால்விரல் மாடகம் தழீஇச் செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து, | 30 |
பிழையா மரபின் ஈர்ஏழ் கோவையை உழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி, இணைகிளை பகைநட்பு என்றுஇந் நான்கின் இசைபுணர் குறிநிலை எய்த நோக்கிக் குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் அன்றியும் | 35 |
வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும் உழைமுதல் ஆகவும் உழைஈறு ஆகவும் குரல்முதல் ஆகவும் குரல்ஈறு ஆகவும் அகநிலை மருதமும் புறநிலை மருதமும் அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் | 40 |
நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி, மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித் திறத்து வழிப்படூஉம் தெள்ளிசைக் கரணத்துப் புறத்துஒரு பாணியில் பூங்கொடி மயங்கி, சண்பகம் மாதவி தமாலம் கருமுகை | 45 |
வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த அம்செங் கழுநீர் ஆய்இதழ்க் கத்திகை எதிர்ப்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு விரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்ட | 50 |
ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின் ஒருமுகம் அன்றி உலகுதொழுது இறைஞ்சும் திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி, அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ அயலது பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு, | 55 |
மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும் இன்இள வேனில் இளவர சாளன் அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன் புணர்ந்த மாக்கள் பொழுதுஇடைப் படுப்பினும் | 60 |
தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும் நறும்பூ வாளியின் நல்உயிர் கோடல் இறும்பூது அன்றுஅஃது அறிந்தீ மின்என எண்எண் கலையும் இசைந்துஉடன் போக பண்ணும் திறனும் புறங்கூறு நாவின் | 65 |
தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து விளையா மழலையின் விரித்துஉரை எழுதி, பசந்த மேனியள் படர்உறு மாலையின் வசந்த மாலையை வருகெனக் கூஉய்த் தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம் | 70 |
கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்குஎன மாலை வாங்கிய வேல்அரி நெடுங்கண் கூல மறுகிற் கோவலற்கு அளிப்ப, திலகமும் அளகமும் சிறுகருஞ் சிலையும் குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட | 75 |
மாதர் வாள்முகத்து மதைஇய நோக்கமொடு காதலின் தோன்றிய கண்கூடு வரியும், புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக் கயல்உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின் பாகுபொதி பவளம் திறந்துநிலா உதவிய | 80 |
நாகுஇள முத்தின் நகைநிலம் காட்டி வருகென வந்து போகெனப் போகிய கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும், அந்தி மாலை வந்ததற்கு இரங்கிச் சிந்தை நோய் கூரும்என் சிறுமை நோக்கிக் | 85 |
கிளிபுரை கிளவியும் மடஅன நடையும் களிமயில் சாயலும் கரந்தனள் ஆகிச் செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து ஒருதனி வந்த உள்வரி ஆடலும், சிலம்புவாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் | 90 |
கலம்பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு திறத்துவேறு ஆயஎன் சிறுமை நோக்கியும் புறத்துநின்று ஆடிய புன்புற வரியும், கோதையும் குழலும் தாதுசேர் அளகமும் ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும் | 95 |
மின்இடை வருத்த நன்னுதல் தோன்றிச் சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்பப் புணர்ச்சிஉட் பொதிந்த கலாம்தரு கிளவியின் இருபுற மொழிப்பொருள் கேட்டனள் ஆகித் தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல் | 100 |
கிளர்ந்துவேறு ஆகிய கிளர்வரிக் கோலமும், பிரிந்துஉறை காலத்துப் பரிந்தனள் ஆகி என்உறு கிளைகட்குத் தன்உறு துயரம் தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சிவரி அன்றியும், வண்டுஅலர் கோதை மாலையுள் மயங்கிக் | 105 |
கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும், அடுத்துஅடுத்து அவர்முன் மயங்கிய மயக்கமும் எடுத்துஅவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும், ஆடல் மகளே ஆதலின் ஆயிழை. பாடுபெற் றனஅப் பைந்தொடி தனக்குஎன, | 110 |
அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய, மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி வாடிய உள்ளத்து வசந்த மாலை தோடுஅலர் கோதைக்குத் துனைந்துசென்று உரைப்ப மாலை வாரார் ஆயினும் மாண்இழை. | 115 |
காலைகாண் குவம்எனக் கையறு நெஞ்சமொடு பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள் மாமலர் நெடுங்கண் மாதவி தான்என். (வெண்பா) செந்தா மரைவிரியத் தேமாங் கொழுந்துஒழுக மைந்தார் அசோகம் மடல்அவிழக் - கொந்தார் இளவேனில் வந்ததால் என்ஆம்கொல் இன்று வளவேல்நற் கண்ணி மனம். ஊடினீர் எல்லாம் உருஇலான் தன்ஆணை கூடுமின் என்று குயில்சாற்ற - நீடிய வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக் கானற்பா ணிக்குஅலந்தாய் காண். |
9. கனாத்திறம் உரைத்த காதை
(கலி வெண்பா)
அகநகர் எல்லாம் அரும்புஅவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த மாலை மணிவிளக்கம் காட்டி இரவிற்குஓர் கோலம் கொடிஇடையார் தாம்கொள்ள, மேல்ஓர்நாள்: மாலதி மாற்றாள் மகவுக்குப் பால்அளிக்கப் | 5 |
பால்விக்கிப் பாலகன் தான்சோர மாலதியும் பார்ப்பா னொடுமனையாள் என்மேல் படாதனவிட்டு ஏற்பன கூறார்என்று ஏங்கி மகக்கொண்டு அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம் புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில் | 10 |
உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம் வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம் நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும் தேவிர்காள் எம்உறுநோய் தீர்ம்அன்று மேவிஓர் பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு, | 15 |
ஏசும் படிஓர் இளங்கொடியாய் ஆசுஇலாய் செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம்கொடார் பொய்உரையே அன்று பொருள்உரையே கையிற் படுபிணம்தா என்று பறித்துஅவள்கைக் கொண்டு சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்குஇருளில் சென்றுஆங்கு | 20 |
இடுபிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி மடியகத்து இட்டாள் மகவை, இடியுண்ட மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு அச்சாத்தன் அஞ்ஞைநீ ஏங்கி அழல்என்று முன்னை உயிர்க்குழவி காணாய்என்று அக்குழவி யாய்ஓர் | 25 |
குயில்பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்புஇன்றி மாயக் குழவி எடுத்து மடித்திரைத்துத் தாய்கைக் கொடுத்தாள்அத் தையலாள், துய மறையோன்பின் மாணியாய் வான்பொருள் கேள்வித் துறைபோய் அவர்முடிந்த பின்னர் இறையோனும் | 30 |
தாயத்தா ரோடும் வழக்குஉரைத்துத் தந்தைக்கும் தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து மேயநாள் தேவந்தி என்பாள் மனைவி அவளுக்குப் பூவந்த உண்கண் பொறுக்கென்று மேவித்தன் மூவா இளநலம் காட்டிஎம் கோட்டத்து | 35 |
நீவா எனஉரைத்து நீங்குதலும், தூமொழி ஆர்த்த கணவன் அகன்றனன் போய்எங்கும் தீர்த்தத் துறைபடிவேன் என்றுஅவனைப் பேர்த்துஇங்ஙன் மீட்டுத் தருவாய் எனஒன்றன் மேல்இட்டுக் கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டருஞ்சீர்க் | 40 |
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறைஉண்டுஎன்று எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று பெறுக கணவனோடு என்றாள், பெறுகேன் கடுக்கும்என் நெஞ்சம் கனவினால் என்கை | 45 |
பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம் பட்ட பதியில் படாதது ஒருவார்த்தை இட்டனர் ஊரார் இடுதேள்இட்டு என்தன்மேல் கோவலற்கு உற்றதுஓர் தீங்குஎன்று அதுகேட்டுக் காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு | 50 |
ஊர்க்குஉற்ற தீங்கும்ஒன்று உண்டால் உரையாடேன் தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம் உற்றேனோடு உற்ற உறுவனொடு யான்உற்ற நல்திறம் கேட்கின் நகைஆகும், பொற்றொடிஇ கைத்தாயும் அல்லை கணவற்கு ஒருநோன்பு | 55 |
பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக உய்த்துக் கடலொடு காவிரி சென்றுஅலைக்கும் முன்றில் மடல்அவிழ் நெய்தல்அம் கானல் தடம்உள சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு | 60 |
தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார் போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாம்ஒருநாள் ஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆய்இழையாள் பீடுஅன்று எனஇருந்த பின்னரே, நீடிய காவலன் போலும் கடைத்தலையான் வந்துநம் | 65 |
கோவலன் என்றாள்ஓர் குற்றிளையாள், கோவலனும் பாடுஅமை சேக்கையுள் புக்குத்தன் பைந்தொடி வாடிய மேனி வருத்தம்கண்டு, யாவும் சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக் குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த | 70 |
இலம்பாடு நாணுத் தரும்எனக்கு என்ன, நலம்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச் சிலம்புஉள கொண்மின் எனச்சேயிழை கேள்இச் சிலம்பு முதலாகச் சென்ற கலனொடு உலந்தபொருள் ஈட்டுதல் உற்றேன் மலர்ந்தசீர் | 75 |
மாட மதுரை யகத்துச்சென்று என்னோடுஇங்கு ஏடுஅலர் கோதாய். எழுகென்று நீடி வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல் கனைசுடர் கால்சீயா முன். (வெண்பா) காதலி கண்ட கனவு கருநெடுங்கண் மாதவிதன் சொல்லை வறிதாக்க - மூதை வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல் கனைசுடர் கால்சீயா முன். |
10. நாடுகாண் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக் கார்இருள் நின்ற கடைநாள் கங்குல் ஊழ்வினைக் கடைஇ உள்ளம் துரப்ப ஏழகத் தகரும் எகினக் கவரியும் | 5 |
தூமயிர் அன்னமும் துணைஎனத் திரியும் தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின் நீள்நெடு வாயில் நெடுங்கடை கழிந்துஆங்கு, அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து, | 10 |
பணைஐந்து ஓங்கிய பாசிலைப் போதி அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும் இந்திர விகாரம் ஏழுடன் போகி, புலவுஊண் துறந்து பொய்யா விரதத்து | 15 |
அவலம் நீத்துஅறிந்து அடங்கிய கொள்கை மெய்வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய ஐவகை நின்ற அருகத் தானத்துச் சந்தி ஐந்தும் தம்முடன் கூடி வந்துதலை மயங்கிய வான்பெரு மன்றத்துப் | 20 |
பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல் நீர்அணி விழவினும் நெடுந்தேர் விழவினும் சாரணர் வருஉம் தகுதிஉண் டாம்என உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட இலகுஒளிச் சிலாதலம் தொழுதுவலம் கொண்டு, | 25 |
மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும் உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி, கலையி லாளன் காமர் வேனிலொடு மலைய மாருதம் மன்னவற்கு இறுக்கும் பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் | 30 |
இலவந் திகையின் எயில்புறம் போகி, தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக் காவிரி வாயில் கடைமுகம் கழிந்து, குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து, | 35 |
காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப் பூமரப் பொதும்பர்ப் பொருந்தி ஆங்கண் இறும்கொடி நுசுப்போடு இனைந்துஅடி வருந்தி நறும்பல் கூந்தல் குறும்பல் உயிர்த்து முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க | 40 |
மதுரை மூதுர் யாதுஎன வினவ, ஆறுஐங் காதம்நம் அகல்நாட்டு உம்பர் நாறுஐங் கூந்தல் நணித்துஎன நக்குத், தேமொழி தன்னொடும் சிறையகத்து இருந்த காவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழலும், | 45 |
உருவும் குலனும் உயர்ப்பேர் ஒழுக்கமும் பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர் என்னோ உறுக ணாளரின் கடைகழிந்து இங்ஙனம் கருதிய வாறுஎன, உரையாட்டு இல்லை உறுதவத் தீர்யான் | 50 |
மதுரை மூதுர் வரைபொருள் வேட்கையேன். பாடகச் சீறடி பரல்பகை உழவா காடுஇடை யிட்ட நாடுநீர் கழிதற்கு அரிதுஇவள் செவ்வி அறிகுநர் யாரோ உரியது அன்றுஈங்கு ஒழிகஎன ஒழியீர் | 55 |
மறஉரை நீத்த மாசுஅறு கேள்வியர் அறஉரை கேட்டுஆங்கு அறிவனை ஏத்தத் தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின் போதுவல் யானும் போதுமின் என்ற | 60 |
காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி அடிகள் நீரே அருளிதிர் ஆயின்இத் தொடிவளைத் தோளி துயர்த்தீர்த் தேன்என, கோவலன் காணாய் கொண்ட இந்நெறிக்கு ஏதம் தருவன யாங்கும்பல கேண்மோ: | 65 |
வெயில்நிறம் பொறாஅ மெல்இயல் கொண்டு பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே, மண்பக வீழ்ந்த கிழங்குஅகழ் குழியைச் சண்பகம் நிறைத்த தாதுசோர் பொங்கர் பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக் | 70 |
கையறு துன்பம் காட்டினும் காட்டும், உதிர்ப்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் முதிர்த்தேம் பழம்பகை முட்டினும் முட்டும், மஞ்சளும் இஞ்சியும் மயங்குஅரில் வலயத்துச் செஞ்சுளைப் பலவின் பரல்பகை உறுக்கும். | 75 |
கயல்நெடுங் கண்ணி காதல் கேள்வ. வயல்உழைப் படர்க்குவம் எனினே ஆங்குப் பூநாறு இலஞ்சிப் பொருகயல் ஓட்டி நீர்நாய் கெளவிய நெடும்புற வாளை மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயின் | 80 |
கலங்கலும் உண்டுஇக் காரிகை, ஆங்கண் கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும் அடங்கா வேட்கையின் அறிவுஅஞர் எய்திக் குடங்கையின் கொண்டு கொள்ளவும் கூடும், | 85 |
குறுநர் இட்ட குவளைஅம் போதொடு பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை நெறிசெல் வருத்தத்து நீர்அஞர் எய்தி அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும், எறிநீர் அடைகரை இயக்கம் தன்னில் | 90 |
பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது ஊழ்அடி ஒதுக்கத்து உறுநோய் காணின் தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா, வயலும் சோலையும் அல்லது யாங்கணும் அயல்படக் கிடந்த நெறிஆங்கு இல்லை | 95 |
நெறிஇருங் குஞ்சி நீவெய் யோளொடு குறிஅறிந்து அவைஅவை குறுகாது ஓம்புஎன, தோம்அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும் காவுந்தி ஐயைகைப் பீலியும் கொண்டு மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆகெனப் | 100 |
பழிப்புஅருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர், கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும் விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும் சூல்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்பக் | 105 |
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும் காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை ஓஇறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது ஆம்பியும் கிழாரும் வீங்குஇசை ஏத்தமும் | 110 |
ஓங்குநீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லாக் கழனிச் செந்நெல் கரும்புசூழ் மருங்கில் பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக் கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும் செங்கால் அன்னமும் பைங்கால் கொக்கும் | 115 |
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும் உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும் வெல்போர் வேந்தர் முனையிடம் போலப் பல்வேறு குழூஉக்குரல் பரந்த ஓதையும், உழாஅ நுண்தொளி உள்புக்கு அழுந்திய | 120 |
கழாஅமயிர் யாக்கைச் செங்கண் காரான் சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ்பு உற்ற குமரிக் கூட்டில் கொழும்பல் உணவு கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரியக் கருங்கை வினைஞரும் களமருங் கூடி | 125 |
ஒருங்குநின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும், கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித் தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து சேறுஆடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச் செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர் | 130 |
வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும், கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப் பார்உடைப் பனர்ப்போல் பழிச்சினர் கைதொழ ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும், | 135 |
அரிந்துகால் குவித்தோர் அரிகடா வுறுத்த பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும், தெண்கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த மண்கனை முழவின் மகிழ்இசை ஓதையும், பேர்யாற்று அடைகரை நீரிற் கேட்டுஆங்கு | 140 |
ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார், உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில் மறையோர் ஆக்கிய ஆவூதி நறும்புகை இறைஉயர் மாடம் எங்கணும் போர்த்து | 145 |
மஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும் மங்கல மறையோர் இருக்கை அன்றியும், பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர் இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும், | 150 |
பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து மங்குல் வானத்து மலையின் தோன்றும் ஊர்இடை யிட்ட நாடுஉடன் கண்டு காவதம் அல்லது கடவார் ஆகிப் பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள்: | 155 |
ஆற்றுவீ அரங்கத்து வீற்றுவீற்று ஆகிக் குரங்குஅமை உடுத்த மரம்பயில் அடுக்கத்து, வானவர் உறையும் பூநாறு ஒருசிறைப் பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப் பெரும்பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட | 160 |
இலங்குஒளிச் சிலாதலம் மேல்இருந் தருளிப் பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத் தருமம் சாற்றும் சாரணர் தோன்றப், பண்டைத் தொல்வினை பாறுக என்றே கண்டுஅறி கவுந்தியொடு கால்உற வீழ்ந்தோர் | 165 |
வந்த காரணம் வயங்கிய கொள்கைச் சிந்தை விளக்கில் தெரிந்தோன் ஆயினும் ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான், கழிப்பெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்: | 170 |
ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா கடுங்கால் நெடுவெளி இடும்சுடர் என்ன ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் | 175 |
அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன் செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன் தரும முதல்வன் தலைவன் தருமன் பொருளன் புனிதன் புராணன் புலவன் சினவரன் தேவன் சிவகதி நாயகன் | 180 |
பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன் தத்துவன் சாதுவன் சாரணன் காரணன் சித்தன் பெரியவன் செம்மல் திகழ்ஒளி இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன் குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான் | 185 |
சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன் அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள் விண்ணவன் வேத முதல்வன் விளங்குஓளி ஓதிய வேதத்து ஒளிஉறின் அல்லது | 190 |
போதார் பிறவிப் பொதிஅறை யோர்எனச் சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதல் காவுந்தி யும்தன் கைதலை மேற்கொண்டு ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத் திருமொழிக்கு அல்லதுஎன் செவியகம் திறவா, | 195 |
காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு நாமம் அல்லது நவிலாது என்நா, ஐவரை வென்றோன் அடியிணை அல்லது கைவரைக் காணினும் காணா என்கண், அருள்அறம் பூண்டோ ன் திருமெய்க்கு அல்லதுஎன் | 200 |
பொருள்இல் யாக்கை பூமியில் பொருந்தாது, அருகர் அறவன் அறிவோற்கு அல்லதுஎன் இருகையும் கூடி ஒருவழிக் குவியா, மலர்மிசை நடந்தோன் மலர்அடி அல்லதுஎன் தலைமிசை உச்சி தான்அணிப் பொறாஅது | 205 |
இறுதிஇல் இன்பத்து இறைமொழிக்கு அல்லது மறுதிர ஓதிஎன் மனம்புடை பெயராது என்றவன் இசைமொழி ஏத்தக் கேட்டுஅதற்கு ஒன்றிய மாதவர் உயர்மிசை ஓங்கி நிவந்துஆங்கு ஒருமுழம் நீள்நிலம் நீங்கிப் | 210 |
பவம்தரு பாசம் கவுந்தி கெடுகென்று அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது பந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்து, கார்அணி பூம்பொழில் காவிரிப் பேர்யாற்று நீர்அணி மாடத்து நெடுந்துறை போகி | 215 |
மாதரும் கணவனும் மாதவத் தாட்டியும் தீதுதீர் நியமத் தென்கரை எய்திப் போதுசூழ் கிடக்கைஓர் பூம்பொழில் இருந்துழி வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு கொங்குஅலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர் | 220 |
காமனும் தேவியும் போலும் ஈங்குஇவர் ஆர்எனக் கேட்டுஈங்கு அறிகுவம் என்றே, நோற்றுஉணல் யாக்கை நொசிதவத் தீர்உடன் ஆற்றுவழிப் பட்டோ ர் ஆர்என வினவ,என் மக்கள் காணீர் மானிட யாக்கையர் | 225 |
பக்கம் நீங்குமின் பரிபுலம் பினர்என, உடன்வயிற் றோர்க்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவதும் உண்டோ ? கற்றறிந் தீர்எனத், தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக் காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க, | 230 |
எள்ளுநர் போலும்இவர் என்பூங் கோதையை முள்உடைக் காட்டின் முதுநரி ஆகெனக் கவுந்தி இட்ட தவம்தரு சாபம் கட்டியது ஆதலின், பட்டதை அறியார் குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு | 235 |
நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி, நெறியின் நீங்கியோர் நீர்அல கூறினும் அறியா மைஎன்று அறியல் வேண்டும் செய்தவத் தீர்நும் திருமுன் பிழைத்தோர்க்கு உய்திக் காலம் உரையீ ரோஎன, | 240 |
அறியா மையின்இன்று இழிபிறப்பு உற்றோர் உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கிப் பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின் முன்னை உருவம் பெறுகஈங்கு இவர்எனச் சாபவிடை செய்து, தவப்பெருஞ் சிறப்பின் | 245 |
காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும் முறம்செவி வாரணம் முஞ்சமம் முருக்கிய புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்துஎன். |
(கட்டுரை)
முடிஉடை வேந்தர் மூவ ருள்ளும்
தொடிவிளங்கு தடக்கைச் சோழர்க்குலத்து உதித்தோர் அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம் பழவிறல் மூதுர்ப் பண்புமேம் படுதலும் விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் | 5 |
ஒடியா இன்பத்து அவர்உறை நாட்டுக் குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம் தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும் பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும் அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும் | 10 |
பரந்துஇசை எய்திய பாரதி விருத்தியும் திணைநிலை வரியும் இணைநிலை வரியும் அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும் ஈர்ஏழ் சகோடமும் இடநிலைப் பாலையும் தாரத்து ஆக்கமும் தான்தெரி பண்ணும் | 15 |
ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும் என்றுஇவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் ஒரு பரிசா நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம் முற்றிற்று. | 20 |
(வெண்பா) காலை அரும்பி மலரும் கதிரவனும் மாலை மதியமும்போல் வாழியரோ - வேலை அகழால் அமைந்த அவனிக்கு மாலைப் புகழால் அமைந்த புகார். |
புகார்க் காண்டம் முற்றிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிலப்பதிகாரம் - Impernm Kaappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - காவேரி, நெடுங்கண், கொண்டு, காணீர், எல்லாம், அல்லது, செங்கண், கோட்டம், வரியும், புகாரே, எம்மூர், சிறப்பின், மருள்மாலை, நோக்கி, போலும், ஒருங்குடன், காவுந்தி, கட்டுரை, மருதமும், செங்கோல், தன்னைப், ஆகவும், அன்றியும், நின்றார், வேனில், கோவலன், ஆதலின், புணர்ந்தாலும், வெண்பா, அல்லதுஎன், நிலைவரி, அறிகோம், அறிந்தேன், தோன்றும், அமைந்த, அடையல்எம், தீதுதீர், பண்ணும், காவிரிப், பூம்பொழில், குருகே, உரைத்த, கிடந்த, கங்குல், கூந்தல், சாரணர், காவிரி, கோவலற்கு, கவுந்தி, இரங்கி, நறுமலரே, உணங்கல், எனைஇடர், செய்தவையே, மடஅன்னம், அன்னம், முன்றில், மாலைப், சிறந்துஆர்ப்ப, மாதவிதன், நடந்தாய், காட்டி, காதலர், நடைஒவ்வாய், துன்பம், வந்தஇம், உளதாம்கொல், ஒருவர், அவர்நம், அல்லர், உகுத்தனவே, மறைந்தனனே, வழிசிதைய, ஊர்ந்த, செந்நெல், கடல்சேர்ப்ப, என்செய்கோ, அடையல்