முதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » புலிப்பாணி ஜோதிடம் 300 » பாடல் 42 - சந்திரன் 1,4,7,10, 1,5,9 ல் தரும் யோகம்
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 42 - சந்திரன் 1,4,7,10, 1,5,9 ல் தரும் யோகம்
கேளப்பா கலையினுட பெருமை சொல்வேன் |
அமிர்த கலையை அள்ளி வழங்கும் சந்திர பகவானின் பெருமையையினை இனிக் கூறுகிறேன் கேட்பாயாக! மிகுதியான நன்மை தரும் இரண்டாம் இடத்திலும் இலக்கினத்திற்குப் பதினொன்றாம் இடமான இலாபஸ்தானத்திலும், மற்றும் 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்களிலும் 1,5,9 என்னும் திரிகோண ஸ்தானத்திலும் சந்திர பகவான் நிற்பாரேயாகில் நல்ல மனையும், நிறைந்த தன வருவாயும் நிலமும், விளை வயலும் கன்று காலிகளும் நிரம்ப வந்தடையும். இச்சாதகனுக்கு மெத்த சுகம் உண்டென்றும் சுயமான தேசத்திலும் பிற தேசத்திலும் வாசஞ்செய்யும் போதும் அரசினரால் ஆதாயம் மிகவும் உண்டாகும்.எனினும் தீயகோள்களை தங்கள் தீட்சண்யமான பார்வையில் நோக்குதலின் உண்மையறிந்து சந்திர பகவானின் கலை தீட்சண்யம் அறிந்து பலன் கூறுக.
இப்பாடலில் சந்திரன் இலக்கினத்திலிருந்து 1,4,7,10, 1,5,9 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 40 | 41 | 42 | 43 | 44 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 42 - சந்திரன் 1,4,7,10, 1,5,9 ல் தரும் யோகம் - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் - சந்திர