இன்னா நாற்பது - ஐந்தாம் நூற்றாண்டு
இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் நாற்பது பாடல்களைக் கொண்டவை எனும் ஒற்றுமையுடன் இனியவை, இன்னாதவை என்பவற்றை ஒன்று கூட்டிச் சொல்லும் தன்மை உடையவை.
இது கடவுள் வாழ்த்து உள்பட 41 வெண்பாக்களைக் கொண்ட அறநூல். இதிலுள்ள ஒவ்வொரு பாட்டும் இன்னது இன்னது துன்பம் தருவது என்று கூறுவதால் இன்னா நாற்பது என்று பெயர் பெற்றது. தொல்காப்பியர் கூறும் அம்மை என்னும் வனப்பைச் சார்ந்தது இது.
இதன் ஆசிரியர் கபிலர். இவர் சங்க காலத்துக் கபிலர் அல்லர்.
இந்நூலில் கூறியது கூறல் எனும் முறை காணப்படுகின்றது. கருத்தின் பெருமை கருதி, அக்கருத்து மக்கள் உள்ளத்தில் நன்கு பதிய வேண்டும் என்ற நோக்கத்தில் மீண்டும் மீண்டும் கூறியிருக்கக்கூடும் என்பர்.
இன்னா, ஈன்றாளை ஓம்பாவிடல் (18) அடைக்கலம் வவ்வுதல் இன்னா (41) ஊனைத்தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா (23) உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா (16) அறிவு அறியா மக்கள் பெறல் இன்னா (29) பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா (38) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இன்னா நாற்பது - Inna Narpatu - ஐந்தாம் நூற்றாண்டு - 5th Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இன்னா, நாற்பது, நூற்றாண்டு, ஐந்தாம், தமிழ்நாட்டுத், தகவல்கள், நூல்கள், இலக்கிய, தமிழ், | , எனும், இனியவை, மீண்டும், மக்கள், கபிலர், இன்னது, நாற்பதும், list, narpatu, inna, century, tamil, tamilnadu, literatures, information