நாகப்பட்டினம் - தமிழக மாவட்டங்கள்
கல்வி:
தொடக்கப் பள்ளிகள்: 823 நடுநிலைப் பள்ளிகள்: 177 உயர்நிலைப் பள்ளிகள்: 71 மேல்நிலைப்பள்ளிகள்: 46 கல்லூரிகள்: 5 தொழிற்கல்வி நிறுவனங்கள்: 3 தொழிற்பயிற்சி நிறுவனங்கள்: 2
வழிபாட்டிடங்கள்:
வேளாங்கண்ணி மாதா கோவில்; நாகூர்தர்கா; எட்டுக்குடி, சிக்கல் முருகன் கோவில்கள்; மற்ற ஊர்கள்; மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம், செம்பனார்கோவில், வைத்தீஸ்வரன் கோவில் இம்மாவட்டம் இந்து, கிருஸ்துவ, முஸ்லீம் சமயங்களின் சமரச மாவட்டமாக விளங்குகிறது.
தொழில்கள்
வேளாண்மைத்தொழில்:
காவிரியின் கடைமடை பகுதியாக இந்த மாவட்டம் அமைந்துள்ளது. குறிப்பாக நெல்விளைச்சலில் மயிலாடுதுறை, குத்தாலம், கொள்ளிடம், நாகப்பட்டினம் முதலிய இடங்களில் விளைச்சல் அதிகம். நெல் தவிர கரும்பு, வாழை, ராகி, காய்கறிகள், பூக்கள் முதலியவை விளைவிக்கப்படுகிறது. தலைஞாயிறு விவசாய ஆராய்ச்சி நிலையம் நெல்வித்துக்களை உண்டாக்கி அறித்துள்ளது. மயிலாடுதுறையில் 2 1/2 இலட்சம் ஏக்கரில் நெல், மணிலா, எள், கரும்பு, தென்னை முதலிய பயிறிடப்படுகின்றன.
தொழிலும் வாணிகமும்:
விவசாயமே முதல்நிலை தொழிலாக இருப்பதால் வேறு தொழில்கள் இம்மாவட்டத்தில் குறைவே. உப்பளத்தொழில் இம்மவாட்டத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் காய்ச்சப்படுகிறது. வேதாரண்யத்துக்கு அருகேயுள்ள உப்பளங்கள் சிறு வணிகர்களாலும், பெருவணிகர்களாலும், குத்தகைக்கு எடுத்து நடத்தப்படுகின்றன. 'மேட்டூர் கெமிகல்' குழுமத்தார் இரசாயனப் பொருள்களின் உற்பத்தியில் பயன்படுத்துவதற்காக 'வெள்ளை உப்பு' (Reined Salt) செய்வதற்கு, வேதாரண்யத்தில், குத்தகைக்கு எடுத்து மேட்டூருக்கும், ஆல்வாய்க்கும் உப்பு அனுப்புகின்றனர். வேதாரண்யம் பகுதியில் மட்டும் ஆண்டுதோறும் 20 இலட்சம் டன் உப்புக்காய்ச்சப்படுகிறது. வேதாரண்யம் உப்பு ஜிப்சம் செய்ய ஏற்றது. இங்கு தொழிற்சாலைகள் ஏற்பட இருக்கின்றன. மீன்பிடிக்காரருக்கான வலைகள், புகையிலையும் கருப்பட்டியும் வைப்பதற்கான தாழ ஓலைப்பாய்கள் இங்கு கோடியக் கரையிலும், வேதாரண்யத்திலும் கைத்தொழிலாக வளர்ந்துவந்துள்ளது. நெல் வாணிபத்திற்கு குற்றாலம் புகழ் பெற்றது. மயிலாடுதுறையை அடுத்த கூறைநாட்டில் பட்டுப்புடவை நெய்யும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்து வருகிறது.
மீன்பிடித்தொழில்:
திருமுல்லைவாயில் தொடக்கம் கோடியக்கரை வரையுள்ள கிட்டத்தட்ட 120 கி.மீ கடற்கரையைக் கொண்டிருப்பதால் சிறப்பானபயன் தொழிலாக மீன்பிடித்தல் விளங்குகிறது. சாதாரண கட்டுமரங்களை பயன்படுத்தியே இங்கு தொழில் செய்யப்படுகிறது. சில இடங்களில் இயந்திர படகு மீன்பிடியும் நடைபெறுகிறது. பூம்புகார், நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை முதலிய இடங்களில் பெருமளவு மீன்பிடிக்கப்படுகிறது. இங்கு சுறா, வாளை, திருக்கை, நெத்திலி, நண்டு மற்றும் கடலோரப் பகுதிகளில் நன்னீர் இறாலும் வளர்க்கப்படுகிறது. மீனும், கருவாடும் நாகையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாகையில் மீனவர் பயிற்சி நிலையம் உள்ளது.
கனிவளம்:
நாகையை அடுத்த நரிமணம் கிராமத்தில் பெட்ரோலியம் எடுக்கப்படுகிறது. சீர்காழிக்கருகில் உள்ள நெய்பத்தூரில் இயற்கைவாயு உள்ளது. கோடியக்கரைக்கருகில் பழுப்பு நிலக்கிரி படிவுகள் இருப்பதாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தரமான எஃகு செய்வதற்கு உதவும் இல்மனைட் தரங்கம்பாடியிலிருந்து 3.கி.மீ தொலைவில் உள்ள கடற்கரையில் கிடைக்கிறது. நாகையிலும் காணப்படுகிறது. கொதிகலச் செங்கல் செய்வதற்குத் துணையாக உள்ளதும், பிளாஸ்டிக் தொழிலுக்குப் பயன்படுவதுமாகிய ஜர்க்கான் என்னும் கனிவளம் தரங்கம்பாடிக் கடற்கரை மணலில் 2 முதல் 5% இருக்கிறது. நாகூர் பகுதியருகே மட்டமான ஜிப்சம் கிடைக்கிறது.
காட்டுவளம்:
கோடியக்கரை காடே இம்மாவட்டத்திலுள்ள காட்டுவளப்பகுதியாகும். இதன் பரப்பு 4,500 ஏக்கர். அடுத்து சொல்லப்படும் சீர்காழி வட்டத் திருமுல்லைவாயில் காட்டில் பிரம்புக்கொடிகள் நிறைய உண்டு. இதனால் ஆனைக்காரன் சத்திரத்தில் பிரம்பு வேலைகள் நடைபெறுகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாகப்பட்டினம் - Nagapattinam - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நாகப்பட்டினம், வேதாரண்யம், இங்கு, இடங்களில், tamilnadu, மாவட்டங்கள், தமிழக, முதலிய, கோடியக்கரை, உப்பு, நெல், பள்ளிகள், தமிழ்நாட்டுத், தகவல்கள், திருமுல்லைவாயில், அடுத்த, செய்வதற்கு, ஜிப்சம், districts, nagapattinam, செய்யப்படுகிறது, | , கிடைக்கிறது, உள்ள, கனிவளம், உள்ளது, குத்தகைக்கு, விளங்குகிறது, தொழில்கள், நிறுவனங்கள், சீர்காழி, மயிலாடுதுறை, information, கரும்பு, கோவில், தொழிலாக, இலட்சம், நிலையம், எடுத்து