சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 147
2 ஏனெனில், அவர் உன் கதவுகளின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தினார்: உன்னகத்துள்ள உன் மக்களுக்கு ஆசியளித்தார்.
3 அமைதி நிலவ உன் எல்லைகளைக் காத்தார்: கோதுமை வளத்தால் உனக்கு நிறைவு அளிக்கிறார்.
4 உலகுக்குத் தம் ஆணையை விடுக்கிறார்: விரைந்து செல்கிறது அவருடைய வார்த்தை.
5 வெண் கம்பளி போல் பனி பொழியச் செய்கிறார்: உறை பனியைச் சாம்பல் போல் இறைக்கிறார்.
6 அப்பத்துண்டெனக் கல்மழை பொழிகிறார்: அவர் உண்டாக்கும் குளிரால் தண்ணீர் உறைந்து போகும்.
7 அவர் ஒரு வார்த்தை சொல்ல, உறைந்தது உருகிவிடும்: தம் காற்றை ஏவி விட, உருகிய நீர் ஓடத் தொடங்கும்.
8 யாக்கோபின் இனத்தார்க்குத் தம் வார்த்தையை வெளிப்படுத்தினார்: இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளைகளையும் நியமங்களையும் அறிவித்தார்.
9 வேறெந்த இனத்தார்க்கும் இங்ஙனம் செய்ததில்லை: தம் கட்டளைகளை அவர்களுக்கு வெளியிட்டதில்லை. அல்லேலூயா!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 145 | 146 | 147 | 148 | 149 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, அவர், சங்கீதங்கள், வார்த்தை, போல், திருவிவிலியம், ஆன்மிகம்