ஓசே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 3
2 அவளை நான் பதினைந்து வெள்ளிக்காசும், ஒன்றரைக் கலம் வாற்கோதுமையும் கொடுத்து எனக்கென்று வாங்கிக் கொண்டேன்.
3 பின்பு அவளை நோக்கி, "நீ வேசியாய்த் திரியாமலும், வேறொருவனுக்கும் உடைமையாகாமலும், நெடுநாள் எனக்கே உரியவளாக வாழவேண்டும். நானும் அவ்வாறே வாழ்வேன்" என்றேன்.
4 ஏனெனில் இஸ்ராயேல் மக்கள் நெடுநாளைக்கு அரசனும் தலைவனுமின்றி, பலியும் பீடமுமின்றி, அர்ச்சகரும் ஆசாரியனுமின்றி இருப்பார்கள்
5 அதற்குப் பிறகு, இஸ்ராயேல் மக்கள் மனந்திரும்பித் தங்கள் கடவுளாகிய ஆண்டவரையும், தங்கள் அரசனாகிய தாவீதையும் தேடுவார்கள்@ இறுதி நாட்களில் ஆண்டவரையும், அவர் நன்மைகளையும் நாடி நடுக்கத்தோடு அணுகி வருவார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஓசே ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, மேல், இஸ்ராயேல், மக்கள், ஆகமம், ", தங்கள், ஆண்டவரையும், அவளை, அவ்வாறே, ஆன்மிகம், திருவிவிலியம், ஆண்டவர்