எபேசியருக்கு எழுதிய நிருபம் - புதிய ஏற்பாடு
அதிகாரம் 3
2 உங்கள் நன்மைக்காகக் கடவுள் எனக்களித்த அருளைப் பற்றிய பொறுப்பைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டுத்தானிருப்பீர்கள்.
3 இறைவெளிப்பாட்டின் வழியாய்த் தான் இறைவனின் மறைபொருள் எனக்கு அறிவிக்கப்பட்டது. இம் மறைபொருளைப் பற்றி உங்களுக்குச் சுருக்கமாக மேலே எழுதியுள்ளேன்.
4 அதைப் படித்தீர்களாயின், நான் கிறிஸ்துவின் மறைபொருளை அறிந்து உணர்ந்திருக்கிறேன் என உங்களுக்கு தெரியவரும்.
5 தேவ ஆவியின் வழியாக இறைவன் தம் பரிசத்த அப்போஸ்தலருக்கும், இறைவாக்கினருக்கும் இந்த மறைபொருளை இப்பொழுது வெளியாக்கியது போல முந்தின தலைமுறைகளில் மனுமக்களுக்குத் தெரிவிக்கவில்லை.
6 நற்செய்தியின் வழியாக கிறிஸ்து இயேசுவுக்குள் புற இனத்தவரும் இறைமக்களோடு சேர்ந்து ஒரே உரிமைப் பேற்றுக்கு வாரிசுகள், ஒரே உடலின் உறுப்பினர், வாக்குறுதியில் பங்கு உடையோர் ஆயினர் என்பதே அம்மறை பொருள்.
7 கடவுள் தம்முடைய வல்லமையைச் செயல்படுத்தி எனக்களித்த அவருடைய அருட்கொடைக் கேற்ப, நான் அந்த நற்செய்தியின் பணியாளன் ஆக்கப்பட்டேன்.
8 கிறிஸ்துவின் அளவிட முடியாத செல்வங்களைப் பற்றிய நற்செய்தியைப் புறவினத்தாருக்கு அறிவிக்கவும்.
9 மறைபொருளான திட்டம் எதுவென்று வெளிப்படுத்தவும், இறைமக்கள் அனைவரிலும் மிகச் சிறியேனாகிய எனக்கு அருள் அளிக்கப்பட்டது. பல்வகையாய்ச் செயல்படும் இறை ஞானமானது, தலைமை ஏற்போர்,
10 அதிகாரம் தாங்குவோர் முதலிய விண்ணகத் தூதருக்குத் திருச்சபையின் வழியாய் இப்பொழுது அறிவிக்கப்பட வேண்டுமென்று அனைத்தும் படைத்த கடவுள் இத்திட்டத்தைத் தமக்குள் ஊழூழியாக மறைத்து வைத்திருந்தார்.
11 இதுவே நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவில் நிறைவேற்ற இறைவன் ஊழிக்காலமாகக் கொண்டிருந்த கருத்து.
12 கிறிஸ்துவின்மேல் கொண்டுள்ள விசுவாசத்தால் நாம் நம்பிக்கையோடு இறைவனை அணுக அவருக்குள் துணிவுகொள்கிறோம்.
13 ஆகையால், உங்களுக்காக நான் படும் வேதனைகளைக் கண்டு மனந்தளர்ந்து போகாதவாறு கேட்டுக்கொள்கிறேன், அவ்வேதனைகள் உங்களுக்கு மகிமையே.
14 இவற்றை மனத்திற்கொண்டு விண்ணிலும்,
15 மண்ணிலும் உள்ள ஒவ்வொரு குலத்தவரும் எத்தந்தையிடமிருந்து இறைவனின் பிள்ளைகள் என்ற பெயரைப் பெறுகின்றார்களோ அவர் திருமுன் நான் மண்டியிட்டு மன்றாடுவதாவது:
16 தம்முடடைய மாட்சியின் வளத்திற்கேற்ப, அவருடைய ஆவியினால், உங்கள் உள் மனத்தில் நீங்கள் வலிமையும் ஆற்றலும் பெறும்படி அருள்வாராக.
17 அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடிப்படையுமாக அமைவதாக. இவ்வாறு நீங்கள்,
18 இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவினுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக் கெட்டாத இந்த அன்பை அறியும் ஆற்றல் பெறுவீர்களாக@
19 கடவுளுடைய முழு நிறைவையும் அடையும் அளவுக்கு நிரப்பப்படுவீர்களாக.
20 நம்மில் செயலாற்றும் வல்லமைக்கேற்றபடி நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிக மேலாகச் செய்ய வல்ல அவருக்கே,
21 திருச்சபையிலும் கிறிஸ்து இயேசுவிலும், தலைமுறை தலைமுறையாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எபேசியருக்கு எழுதிய நிருபம் - புதிய ஏற்பாடு, ஏற்பாடு, கிறிஸ்து, நான், உங்கள், எபேசியருக்கு, கடவுள், நீங்கள், நிருபம், எழுதிய, இப்பொழுது, இறைவன், வழியாக, உங்களுக்கு, நற்செய்தியின், சேர்ந்து, நாம், இறைமக்கள், அவருடைய, மறைபொருளை, கிறிஸ்துவின், எனக்களித்த, திருவிவிலியம், ஆன்மிகம், பற்றிய, மனத்திற்கொண்டு, இவற்றை, எனக்கு, இறைவனின், அதிகாரம்