பதினாறாவது அத்தியாயம் (தைவாஸுரஸம்பத்விபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
ஆத்மஸம்பாவிதா: ஸ்தப்தா தநமாநமதாந்விதா:। யஜந்தே நாமயஜ்ஞைஸ்தே தம்பேநாவிதிபூர்வகம்॥ 16.17 ॥ |
தற்புகழ்ச்சி உடைய, பணிவற்ற, செல்வ செருக்கும் ஆணவமும் கொண்ட அவர்கள் விதிப்படி அல்லாமல் வெறும் ஆடம்பரதிற்க்காக யாகம் முதலியவற்றை செய்கிறார்கள்.
அஹம்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் ச ஸம்ஷ்ரிதா:। மாமாத்மபரதேஹேஷு ப்ரத்விஷந்தோ அப்யஸூயகா:॥ 16.18 ॥ |
ஆணவம், வலிமை, செருக்கு, காமம், கோபம் போன்றவற்றின் வசப்பட்டவர்கள் தங்களிலும் பிறரிலும் இருக்கின்ற என்னை வெறுத்து அவமதிக்கின்றனர்.
தாநஹம் த்விஷத: க்ருராந்ஸம்ஸாரேஷு நராதமாந்। க்ஷிபாம்யஜஸ்ரமஷுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு॥ 16.19 ॥ |
வெறுக்கத்தக்க, கொடிய, மனிதர்களுள் கடைப்பட்ட, இழிந்த அவர்களை பிறப்பு – இறப்பு என்று சுழல்கின்ற சம்சார உலகில் அசுர இயல்புடைய பிறவிகளிலேயே நான் தொடர்ந்து தள்ளுகிறேன்.
ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா ஜந்மநிஜந்மநி। மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யதமாம் கதிம்॥ 16.20 ॥ |
அர்ஜுனா ! அந்த மூடர்கள் பல பிறவிகளில் அசுர இயல்புடன் பிறந்து, என்னை அடையாமல் மேலும் மேலும் கீழான கதியை அடைகிறார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினாறாவது அத்தியாயம் (தைவாஸுரஸம்பத்விபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, ஸ்ரீமத், அத்தியாயம், பதினாறாவது, தைவாஸுரஸம்பத்விபாக, யோகம், அசுர, மேலும், என்னை, இந்து, gita, bhagavad, காமம்