பதினாறாவது அத்தியாயம் (தைவாஸுரஸம்பத்விபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
இதமத்ய மயா லப்தமிமம் ப்ராப்ஸ்யே மநோரதம்। இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புநர்தநம்॥ 16.13 ॥ |
இது, இன்று என்னால் அடையப்பட்டது, இந்த ஆசை இனி நிறைவேறப் பெரும். இது எனக்கு உள்ளது. இந்த செல்வமும் வந்து சேரும் என்றெல்லாம் அசுர இயல்பினர் மனகோட்டை கட்டுகின்றனர்.
அஸௌ மயா ஹத: ஷத்ருர்ஹநிஷ்யே சாபராநபி। ஈஷ்வரோ அஹமஹம் போகீ ஸித்தோ அஹம் பலவாந்ஸுகீ॥ 16.14 ॥ |
என்னால் இந்த எதிரி கொல்லப்பட்டான், மற்றவர்களையும் கொல்வேன் என்று இறுமாப்பு கொள்கிறார்கள். நானே தலைவன் நான் போகங்களை அனுபவிக்கிறேன். நான் நினைத்தது நிறைவேற பெற்றவன். பலசாலி, சுகமாயிருப்பவன் என்று ஆணவம் கொள்கிறார்கள்.
ஆட்யோ அபிஜநவாநஸ்மி கோ அந்யோஸ்தி ஸத்ருஷோ மயா। யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா:॥ 16.15 ॥ |
அறியாமையில் மதிமயங்கிய அவர்கள், நான் பணக்காரன், உயர்குலத்தவன், எனக்கு சமமானவன் யார் ? நான் யோகம் செய்வேன், தானம் செய்வேன், மகிழ்ச்சியில் மிதப்பேன் என்றெல்லாம் பிதற்றுகிறார்கள்.
அநேகசித்தவிப்ராந்தா மோஹஜாலஸமாவ்ருதா:। ப்ரஸக்தா: காமபோகேஷு பதந்தி நரகே அஷுசௌ॥ 16.16 ॥ |
பல்வேறு சிந்தனைகளால் குழப்பம் அடைந்த, மோகவலையில் சிக்கிய, காம போகங்களில் ஆழ்ந்த அவர்கள் பாழ் நகரில் வீழ்கிறார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினாறாவது அத்தியாயம் (தைவாஸுரஸம்பத்விபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, யோகம், நான், பகவத்கீதை, பதினாறாவது, ஸ்ரீமத், அத்தியாயம், தைவாஸுரஸம்பத்விபாக, கொள்கிறார்கள், செய்வேன், என்றெல்லாம், என்னால், bhagavad, இந்து, gita, எனக்கு