முதன்மை பக்கம் » ஆன்மிகம் » ஸ்ரீமத் பகவத்கீதை » பதின்மூன்றாவது அத்தியாயம் (க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்)
பதின்மூன்றாவது அத்தியாயம் (க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
கார்யகாரணகர்த்ருத்வே ஹேது: ப்ரக்ருதிருச்யதே। புருஷ: ஸுகது:காநாம் போக்த்ருத்வே ஹேதுருச்யதே॥ 13.20 ॥ |
உடம்பையும் புலன்களையும் உண்டாக்குவதில் இயற்கை காரணம் என்று சொல்லபடுகிறது. சுக துக்கங்களை அனுபவிப்பதில் ஜீவன் காரணம் என்று சொல்லபடுகிறது.
புருஷ: ப்ரக்ருதிஸ்தோ ஹி புங்க்தே ப்ரக்ருதிஜாந்குணாந்। காரணம் குணஸங்கோ அஸ்ய ஸதஸத்யோநிஜந்மஸு॥ 13.21 ॥ |
இயற்கையை சேர்ந்தவனான ஜீவன், இயற்கையிலிருந்து தோன்றிய குணங்களை அனுபவிக்கிறான். குணங்களின் மீதுள்ள பற்றுதலே அவனது நல்ல தீய பிறவிகளுக்கு காரணமாகிறது.
உபத்ரஷ்டாநுமந்தா ச பர்தா போக்தா மஹேஷ்வர:। பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹே அஸ்மிந்புருஷ: பர:॥ 13.22 ॥ |
இந்த உடம்பில் உள்ள ஆன்மா சாட்சி, அனுமதிப்பவர், தாங்குபவர், அனுபவிப்பவர், மேலான தலைவர், பரம்பொருள், கடவுள் என்றெல்லாம் சொல்லபடுகிறது.
ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிம் ச குணை: ஸஹ। ஸர்வதா வர்தமாநோ அபி ந ஸ பூயோ அபிஜாயதே॥ 13.23 ॥ |
ஆன்மாவையும், குணங்களுடன் கூடிய இயற்கையையும் யார் இவ்வாறு அறிகிறானோ, அவன் எவ்வாறு வாழ்பவனாக இருந்தாலும் மீண்டும் பிறப்பதில்லை.
த்யாநேநாத்மநி பஷ்யந்தி கேசிதாத்மாநமாத்மநா। அந்யே ஸாங்க்யேந யோகேந கர்மயோகேந சாபரே॥ 13.24 ॥ |
சிலர் தியானத்தின் மூலம் தெளிந்த புத்தியால் ஆன்மாவை உள்ளத்தில் காண்கிறார்கள். சிலர் ஞான யோகத்தினாலும் சிலர் கர்ம யோகத்தினாலும் காண்கிறார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதின்மூன்றாவது அத்தியாயம் (க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, பதின்மூன்றாவது, காரணம், சொல்லபடுகிறது, சிலர், ஸ்ரீமத், அத்தியாயம், க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக, யோகம், காண்கிறார்கள், யோகத்தினாலும், bhagavad, ஜீவன், gita, இந்து, புருஷ