பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதே அர்ஜுன। ஸங்கம் த்யக்த்வா பலம் சைவ ஸ த்யாக: ஸாத்த்விகோ மத:॥ 18.9 ॥ |
அர்ஜுனா ! சாதாரண செயல்களையே, அவை செய்யப்பட வேண்டியவை என்பதற்காக, பற்றையும் பலனையும் விட்டு செய்தால் அது சாத்வீக தியாகம்.
ந த்வேஷ்ட்யகுஷலம் கர்ம குஷலே நாநுஷஜ்ஜதே। த்யாகீ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதாவீ சிந்நஸம்ஷய:॥ 18.10 ॥ |
சத்வம் நிறைந்த, உண்மையறிவுடைய, சந்தேகம் நீங்கபெற்ற, தியாக சிந்தனை உடைய ஒருவன், துன்பம் தருவது என்பதற்காக ஒரு செயலை வெறுப்பதில்லை. இன்பம் தருவது என்பதற்காக ஒரு செயலை விரும்புவதும் இல்லை.
ந ஹி தேஹப்ருதா ஷக்யம் த்யக்தும் கர்மாண்யஷேஷத:। யஸ்து கர்மபலத்யாகீ ஸ த்யாகீத்யபிதீயதே॥ 18.11 ॥ |
சாதாரண மனிதனால் செயல்களை அறவே விடுவது இயலாது. யார் வினைபயனை விட்டவனோ அவனே தியாகி.
அநிஷ்டமிஷ்டம் மிஷ்ரம் ச த்ரிவிதம் கர்மண: பலம்। பவத்யத்யாகிநாம் ப்ரேத்ய ந து ஸம்ந்யாஸிநாம் க்வசித்॥ 18.12 ॥ |
பற்றுடன் வேலை செய்பவர்கள் மரணத்திற்கு பிறகு இன்பமானது, துன்பமானது, இரண்டும் கலந்தது என்று மூன்று விதமான வினைபயன்களை அனுபவிக்கிறார்கள். ஆனால் பற்றை விட்டவர்களுக்கு ஒருபோதும் இந்த அனுபவங்கள் இல்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, ஸ்ரீமத், என்பதற்காக, அத்தியாயம், பதினெட்டாவது, சன்யாஸ, மோட்ச, யோகம், தருவது, செயலை, இல்லை, இந்து, gita, bhagavad, சாதாரண