பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
தமேவ ஷரணம் கச்ச ஸர்வபாவேந பாரத। தத்ப்ரஸாதாத்பராம் ஷாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஷாஷ்வதம்॥ 18.62 ॥ |
அர்ஜுனா ! இறைவனையே எல்லா விதத்திலும் சரணடை. அவரது அருளால் மேலான அமைதியையும் அழிவற்ற நிலையையும் அடைவாய்.
இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத்குஹ்யதரம் மயா। விம்ருஷ்யைததஷேஷேண யதேச்சஸி ததா குரு॥ 18.63 ॥ |
ரகசியங்களுள் மேலான ரகசியத்தை இவ்வாறு நான் உனக்கு சொன்னேன். இதை நன்றாக ஆராய்ந்து எப்படி விரும்புகிறாயோ அப்படி செய்.
ஸர்வகுஹ்யதமம் பூய: ஷ்ருணு மே பரமம் வச:। இஷ்டோ அஸி மே த்ருடமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம்॥ 18.64 ॥ |
அனைத்திலும் ரகசியமான எனது மேலான அறிவுரையை மீண்டும் கேள். எனது உற்ற நண்பனாக இருக்கிறாய் அதனால் உனக்கு நல்லதை சொல்கிறேன்.
மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு। மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோ அஸி மே॥ 18.65 ॥ |
என்னிடம் மனத்தை வை. என் பக்தனாக இரு. என்னை வழிபாடு, என்னை வணங்கு, என்னையே அடைவாய். உனக்கு சத்தியம் செய்து இதனை உறுதி கூறுகிறேன். எனக்கு உகந்தவன் நீ.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, ஸ்ரீமத், மேலான, உனக்கு, அத்தியாயம், பதினெட்டாவது, மோட்ச, யோகம், சன்யாஸ, எனது, என்னை, bhagavad, அடைவாய், gita, இந்து