பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
மச்சித்த: ஸர்வதுர்காணி மத்ப்ரஸாதாத்தரிஷ்யஸி। அத சேத்த்வமஹம்காராந்ந ஷ்ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி॥ 18.58 ॥ |
என்னில் மனத்தை வைத்தால் எல்லா தடைகளையும் எனதருளால் தாண்டி செல்வாய். மாறாக அகங்காரத்தின் காரணமாக என் பேச்சை கேட்காவிட்டால் அழிவாய்.
யதஹம்காரமாஷ்ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே। மித்யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி॥ 18.59 ॥ |
அகங்காரத்தின் வசப்பட்டு, போர் செய்ய மாட்டேன் என்று நினைத்தால் உனது அந்த முடிவு வீணானது. உன் மன இயல்பே உன்னை போரில் ஈடுபடுத்தி விடும்.
ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த: ஸ்வேந கர்மணா। கர்தும் நேச்சஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவஷோபி தத்॥ 18.60 ॥ |
குந்தியின் மகனே ! எதை செய்வதற்கு மனகுழப்பத்தின் காரணமாக தயங்குகிறாயோ, அதையே மன இயல்பின் காரணமாக தோன்றிய வினைபயனால் கட்டுண்டு, தன்வசம் இல்லாமல் செய்வாய்.
ஈஷ்வர: ஸர்வபூதாநாம் ஹ்ருத்தேஷே அர்ஜுன திஷ்டதி। ப்ராமயந்ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா॥ 18.61 ॥ |
அர்ஜுனா ! இறைவன் எல்லா உயிர்களின் இதயத்தில் இருக்கிறார். எல்லா உயிர்களையும் தனது சக்தியால் எந்திரத்தில் சுழற்றுவது போல் ஆட்டி வைக்கிறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, பதினெட்டாவது, ஸ்ரீமத், காரணமாக, யோகம், அத்தியாயம், எல்லா, மோட்ச, சன்யாஸ, அகங்காரத்தின், gita, bhagavad, இந்து