மூன்றாவது அத்தியாயம் (கர்ம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதே அர்ஜுன। கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விஷிஷ்யதே॥ 3.7 |
அர்ஜுனா ! யார் மனத்தினால் புலன்களை வசப்படுத்தி, பற்றற்றவனாக கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் செய்கின்றானோ அவன் சிறந்தவன்.
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:। ஷரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண:॥ 3.8 |
அன்றாட கடமைகளை செய். ஏனெனில் வேலை செய்யாமல் இருப்பதைவிட வேலை செய்வது சிறந்தது. வேலை செய்யாமல் இருந்தால் சொந்த உடம்பை பேணுவது கூட முடியாமல் போகும்.
யஜ்ஞார்தாத்கர்மணோ அந்யத்ர லோகோ அயம் கர்மபந்தந:। ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர॥ 3.9 |
குந்தியின் மகனே ! செயலை வேள்வியாக செய்யவேண்டும். அவ்வாறு செய்யாததால்தான் இந்த உலகம் செயல்களில் கட்டுண்டு கிடக்கிறது. அதனால் பற்றற்று திறம்பட வேலை செய்.
ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:। அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோ அஸ்த்விஷ்டகாமதுக்॥ 3.10 |
படைப்பின் ஆரம்பத்தில் பிரம்ம தேவன் வேள்வியுடன் மனிதர்களை படைத்து, இதனால் வளம் பெறுங்கள். இது உங்களுக்கு விரும்பியதை தருவதாக இருக்கட்டும் என்று கூறினார்.
தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:। பரஸ்பரம் பாவயந்த: ஷ்ரேய: பரமவாப்ஸ்யத॥ 3.11 |
நீங்கள் வேள்வியால் தேவர்களை வழிபடுங்கள், தேவர்கள் உங்களை வளம்பெற செய்வார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து மேலான நன்மையை அடையுங்கள் என்று பிரம்மா கூறினார்.
இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா:। தைர்தத்தாநப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ:॥ 3.12 |
வேள்வியால் மகிழ்ந்த தேவர்கள் உங்களுக்கு விருப்பமான போகங்களை தருவார்கள். அவர்களால் தர்பட்டவற்றை அவர்களுக்கு கொடுக்காமல் யார் அனுபவிக்கிறானோ, அவன் நிச்சயமாக திருடனே.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாவது அத்தியாயம் (கர்ம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, கர்ம, வேலை, யோகம், பகவத்கீதை, ஸ்ரீமத், மூன்றாவது, அத்தியாயம், கூறினார், உங்களுக்கு, தேவா, வேள்வியால், செய்யாமல், தேவர்கள், யார், bhagavad, gita, இந்து, அவன், செய்