பன்னிரண்டாவது அத்தியாயம் (பக்தி யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
அத்வேஷ்டா ஸர்வபூதாநாம் மைத்ர: கருண ஏவ ச। நிர்மமோ நிரஹங்கார: ஸமது:கஸுக: க்ஷமீ॥ 12.13 ॥ ஸம்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருடநிஷ்சய:। மய்யர்பிதமநோபுத்திர்யோ மத்பக்த: ஸ மே ப்ரிய:॥ 12.14 ॥ |
எந்த உயிரிடமும் வெருப்பற்றவனாக, நண்பனாக, கருணை உடையவனாக, எனது என்ற எண்ணம் இல்லாதவனாக ஆணவம் அற்றவனாக, சுகதுக்கங்களில் சமமாக இருப்பவனாக, பொறுமை உடையவனாக, எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக, யோகியாக, சுயகட்டுப்பாடு உடையவனாக, அசைக்க முடியாத உறுதி உடையவனாக, என்னிடம் மனம் மற்றும் புத்தியை அர்ப்பணித்தவனாக உள்ள பக்தன் எனக்கு பிரியமானவன்.
யஸ்மாந்நோத்விஜதே லோகோ லோகாந்நோத்விஜதே ச ய:। ஹர்ஷாமர்ஷபயோத்வேகைர்முக்தோ ய: ஸ ச மே ப்ரிய:॥ 12.15 ॥ |
யாரால் உலகம் துன்பபடுவதில்லையோ, யார் உலகத்தால் துன்புருவதால், யார் களிப்பு, கோபம், பயம், கலக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டவனோ, அவன் எனக்கு பிரியமானவன்.
அநபேக்ஷ: ஷுசிர்தக்ஷ உதாஸீநோ கதவ்யத:। ஸர்வாரம்பபரித்யாகீ யோ மத்பக்த: ஸ மே ப்ரிய:॥ 12.16 ॥ |
ஆசையற்ற, தூய, திறமைசாலியான, பற்றற்ற, பயம் இல்லாத, எல்லா விதத்திலும் தன்முனைப்புடன் ( Ego ) செயல்புரிவதை விட்ட எனது பக்தன் எனக்கு பிரியமானவன்.
யோ ந ஹ்ருஷ்யதி ந த்வேஷ்டி ந ஷோசதி ந காங்க்ஷதி। ஷுபாஷுபபரித்யாகீ பக்திமாந்ய: ஸ மே ப்ரிய:॥ 12.17 ॥ |
யார் மகிழ்வதில்லையோ, வெருப்பதில்லையோ, வருந்துவதில்லையோ, ஆசைபடுவதில்லையோ, நன்மை தீமைகளை விட்டவனோ, பக்தியுடையவனோ அவன் எனக்கு பிரியமானவன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பன்னிரண்டாவது அத்தியாயம் (பக்தி யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, உடையவனாக, ப்ரிய, பிரியமானவன், எனக்கு, பகவத்கீதை, யோகம், பக்தி, அத்தியாயம், பன்னிரண்டாவது, யார், ஸ்ரீமத், அவன், பயம், மத்பக்த, bhagavad, gita, இந்து, எனது, பக்தன்