முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 5.திருச்சதகம்
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 5.திருச்சதகம்
5.திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
(திருப்பெருந்துறையில் அருளியது)
9. ஆனந்த பரவரசம் (கலிநிலைத்துறை)
விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு இனை வைத்தாய் இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார் அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர் எம் மிச்சைத் தேவா என் நான் செய்தேன் பேசாயே. | 85 |
பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே பூசப்பட்டேன் பூதரால் உன் அடியான் என்று ஏசப்பட்டேன் இனிப்படுகின்றது அமையாதால் ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே. | 86 |
அடியேன் அல்லேன் கொல்லோ தானெனை ஆட்கொண்டு இலை கொல்லோ அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார் செடிசேர் உடலம் இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே. | 87 |
காணுமாறு காணேன் உன்னை அந்நாள் கண்டேனும் பாணே பேசி என் தன்னைப் படுத்தது என்ன பரஞ்சோதி ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன் ஏண் நாண் இல்லா நாயினேன் என்கொண்டு எழுகேன் எம்மானே. | 88 |
மான் நேர் நோக்கி உமையாள் பங்கா மறை ஈறு அறியா மறையானே தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும் கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மாநகர் குறுகப் போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே. | 89 |
புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான் அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார் சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தான் சேர்ந்தாரே. | 90 |
தாராய் உடையாய் அடியேற்கு உன்தான் இணை அன்பு போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான் ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆமிலைத்து இங்கு உன்தான் இணை அன்புக்கு ஆராய் அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே. | 91 |
அழுகேன் நின்பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த மெழுகே அன்னார் மின்ஆர் பொன் ஆர் கழல் கண்டு தொழுதே உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னைப் பணிகேனே. | 92 |
பணிவார் பிணி தீர்ந்து அருளிப் பழைய அடியார்க்கு உன் அணி ஆர் பாதம் கொடுக்கி அதுவும் அரிது என்றால் திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித் தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய்தீர் மெய்யானே. | 93 |
யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே. | 94 |
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
5.திருச்சதகம் - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அடியார், அடியேன், தாராய், சேர்ந்த, உன்னைப், உன்தான், பொய்யும், கொண்டு, காணுமாறு, உன்தாள், சேர்ந்தார், கொல்லோ, எல்லாரும், யானும்