முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 25.ஆசைப்பத்து - ஆத்தும இலக்கணம்
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 25.ஆசைப்பத்து - ஆத்தும இலக்கணம்
25.ஆசைப்பத்து - ஆத்தும இலக்கணம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
கருடக்கொடியோன் காணமாட்டாக் கழற்சே வடியென்னும் பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியையோ இருளைத் துரந்திட் டிங்கே வாவென்றங்கே கூவும் அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. | 418 |
மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னாரமுதேயோ அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. | 419 |
சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரயுஞ் சிறுகுடில் இது சிதையக் கூவாய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளுங் குருமணியே தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி ஆவா வென்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. | 420 |
மிடைந்தெலும் பூத்தை மிகக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடம் தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன் சோத்தம் எம்பெருமானே உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி உன்திரு மலர்ப்பாதம் அடைந்து நின்றிடவும் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. | 421 |
அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்விடையாய் பொடியாடி எளிவந்தென்னை ஆண்டுகொண்ட என்னாரமுதேயோ அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. | 422 |
எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்ககில்லேன் இவ்வாழ்க்கை வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர்ச்சே வடியானே முத்தா உன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகைகாண அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. | 423 |
பாரோர் விண்ணோர் பரவியேத்தும் பரனே பரஞ்சோதி வாராய் வாரா வுலகந்தந்து வந்தாட்கொள்வானே பேராயிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் என ஏத்த ஆரா அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. | 424 |
கையால் தொழுதென் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண்டு எய்யா தென்றன்தலைமேல் வைத்தெம்பெருமான் பெருமானென்று ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர மெமுகொப்ப ஐயாற் றரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. | 425 |
செடியா ராக்கைத் திறமற வீசிச் சிவபுரநகர்புக்குக் கடியார் சோதி கண்டுகொண்டென் கண்ணினை களிகூரப் படிதா னில்லாப் பரம்பரனே உன்பழஅடியார் கூட்டம் அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. | 426 |
வெஞ்சேலனைய கண்ணார்தம் வெகுளிவலையில் அகப்பட்டு நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன் பஞ்சேரடியாள் பாகத்தொருவா பவளத் திருவாயால் அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. | 427 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
25.ஆசைப்பத்து - ஆத்தும இலக்கணம் - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கண்டாய், அம்மானே, ஆசைப்பட்டேன், நாயேன், நோக்கி, என்னாரமுதேயோ, கழற்சே