முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பதினோராம் திருமுறை » 7.3. சிவபெருமான் திருவந்தாதி
பதினோராம் திருமுறை - 7.3. சிவபெருமான் திருவந்தாதி
7.3. சிவபெருமான் திருவந்தாதி
வெண்பா
572. |
ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்வாழ்ந் தொன்றும் மனிதர் உயிரையுண் - டொன்றும் மதியாத கூற்றுதைத்த சேவடியான் வாய்ந்த மதியான் இடப்பக்கம் மால். |
1 |
573 |
மாலை ஒருபால் மகிழ்ந்தானை வண்கொன்றை மாலை ஒருபால் முடியானை - மாலை ஒளியானை உத்தமனை உண்ணாநஞ் சுண்டற் கொளியானை ஏத்தி உளம். |
2 |
574 |
உளமால்கொண் டோடி ஒழியாது யாமும் உளமாகில் ஏத்தவா றுண்டே - உளம்மாசற் றங்கமலம் இல்லா அடல்வெள்ளே றூர்ந்துழலும் அங்கமல வண்ணன் அடி. |
3 |
575 |
அடியார்தம் ஆருயிரை அட்டழிக்குங் கூற்றை அடியால் அருவாகச் செற்றான் - அடியார்தம் அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பி அந்தரத்தார் சூடும் அலர். |
4 |
576 |
அலராளுங் கொன்றை அணியலா ரூரற் கலராகி யானும் அணிவன் - அலராகி ஓதத்தான் ஒட்டினேன் ஓதுவான்யான் ஓங்கொலிநீர் ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர். |
5 |
577 |
ஊரும தொற்றியூர் உண்கலனும் வெண்தலையே ஊரும் விடையொன் றுடைதோலே - ஊரும் படநாகம் மட்டார் பணமாலை ஈதோ படநாகம் அட்டார் பரிசு. |
6 |
578 |
பரியானை ஊராது பைங்கணே றூரும் பரியானைப் பாவிக்க லாகா - பரியானைக் கட்டங்கம் ஏந்தியாக் கண்டுவாழ் நன்னெஞ்சே கட்டங்கம் ஏந்தியாக் கண்டு. |
7 |
579 |
கண்டங் கரியன் உமைபாலுந் தன்பாலும் கண்டங் கரியன் கரிகாடன் - கண்டங்கள் பாடியாட் டாடும் பரஞ்சோதிக் கென்னுள்ளம் பாடியாக் கொண்ட பதி. |
8 |
580 |
பதியார் பழிதீராப் பைங்கொன்றை தாவென் பதியான் பலநாள் இரக்கப் - பதியாய அம்மானார் கையார் வளைகவர்ந்தார் அதேகொல் அம்மானார் கையார் அறம். |
9 |
581 |
அறமானம் நோக்கா தநங்கனையும் செற்றங் கறமாநஞ் சுண்ட அமுதன் - அறமான ஓதியாள் பாகம் அமர்ந்தான் உயர்புகழே ஓதியான் தோற்றேன் ஒளி. |
10 |
582 |
ஒளியார் சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கோடற் கொளியான் உலகெல்லாம் ஏத்தற் - கொளியாய கள்ளேற்றான் கொன்றையான் காப்பிகந்தான் நன்னெஞ்சே கள்ளேற்றான் கொன்றை கடிது. |
11 |
583 |
கடியரவர் அக்கர் கரிதாடு கோயில் கடியரவர் கையதுமோர் சூலம் - கடியரவர் ஆனேற்றார்க் காட்பட்ட நெஞ்சமே அஞ்சல்நீ ஆனேற்றார்க் காட்பட்டேம் யாம். |
12 |
584 |
யாமான நோக்கா தலர்கொன்றைத் தார்வேண்ட யாமானங் கொண்டங் கலர்தந்தார் - யாமாவா ஆவூரா ஊரும் அழகா அனலாடி ஆவூரார்க் கென்னுரைக்கோம் யாம். |
13 |
585 |
யானென்றங் கண்ணா மலையான் அகம்புகுந்து யானென்றங் கையறிவும் குன்றுவித்து - யானென்றங் கார்த்தானே யாயிடினும் அம்பரன்மேல் அங்கொன்றை ஆர்த்தானேல் உய்வ தரிது. |
14 |
586 |
அரியாரும் பூம்பொழில் சூழ் ஆமாத்தூர் அம்மான் அரியாரும் பாகத் தமுதன் - அரியாரும் வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம் வேங்கடத்து நோயால் வியந்து. |
15 |
587 |
வியந்தாழி நன்னெஞ்சே மெல்லியலார்க் காளாய் வியந்தாசை யுள்மெலிய வேண்டா - வியந்தாய கண்ணுதலான் எந்தைகா பாலி கழலடிப்பூக் கண்ணுதலாம் நம்பாற் கடன். |
16 |
588 |
கடனாகம் ஊராத காரணமுங் கங்கை கடனாக நீகவர்ந்த வாறும் - கடனாகப் பாரிடந்தான் மேவிப் பயிலும் பரஞ்சோதி பாரிடந்தான் மேயாய் பணி. |
17 |
589 |
பணியாய் மடநெஞ்சே பல்சடையான் பாதம் பணியாத பத்தர்க்குஞ் சேயன் - பணியாய ஆகத்தான் செய்துமேல் நம்மை அமரர்கோ னாகத்தான் செய்யும் அரன். |
18 |
590 |
அரன்காய நைவேற் கநங்கவேள் அம்பும் அரன்காயும் அந்தியும்மற் றந்தோ - அரங்காய வெள்ளில்சேர் காட்டாடி வேண்டான் களிறுண்ட வெள்ளில்போன் றுள்ளம் வெறிது. |
19 |
591 |
வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை வெறியார்பூந் தாரான் விமலன் - வெறியார்தம் அல்லல்நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆருர்க்கோன் அல்லனோ நெஞ்சே அயன். |
20 |
592 |
அயமால்ஊண் ஆடரவம் நாண்அதள தாடை அயமாவ தானேறூர் ஆரூர் - அயமாய என்னக்கன் தாழ்சடையன் நீற்றன் எரியாடி என்னக்கன் றாழும் இவள். |
21 |
593 |
ஆழும் இவளையும் கையகல ஆற்றேனென் றாழும் இவளை அயராதே - ஆழும் சலமுடியாய் சங்கரனே சங்கக் குழையாய் சலமுடியா தின்றருளுன் தார். |
22 |
594 |
தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத் தாராதே சங்கம் சரிவித்தான் - தாராவல் ஆனைமேல் வைகும் அணிவயல்ஆ ரூர்க்கோன்நல் ஆனையும் வானோர்க் கரசு. |
23 |
595 |
அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க் கம்மான் அரசுமாம் அங்கொன்று மாலுக் - கரசுமான் ஊர்தி எரித்தான் உணருஞ் செவிக்கின்பன் ஊர்தி எரித்தான் உறா. |
24 |
596 |
உறாவேயென் சொற்கள் ஒளிவளைநின் உள்ளத் துறாவேதீ உற்றனகள் எல்லாம் - உறாவேபோய்க் காவாலி தார்நினைந்து கைசோர்ந்து மெய்மறந்தாள் காவாலி தாநின் கலை. |
25 |
597 |
கலைகாமின் ஏர்காமின் கைவளைகள் காமின் கலைசேர் நுதலீர்நாண் காமின் - கலையாய பான்மதியன் பண்டரங்கன் பாரோம்பு நான்மறையன் பான்மதியன் போந்தான் பலிக்கு. |
26 |
598 |
பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கன் சூழப் பலிக்கு மனைப்புகுந்து பாவாய் - பலிக்குநீ ஐயம்பெய் என்றானுக் கையம்பெய் கின்றேன்மேல் ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து. |
27 |
599 |
ஆயம் அழிய அலர்கொன்றைத் தார்வேண்டி ஆயம் அழிய அயர்வேன்மேல் - ஆயன்வாய்த் தீங்குழலும் தென்றலும் தேய்கோட் டிளம்பிறையும் தீங்குழலும் என்னையே தேர்ந்து. |
28 |
600 |
தேரோன் கதிரென்னுஞ் செந்தழலால் வெந்தெழுபேய்த் தேரோன் கதிரென்னுஞ் செய்பொருள்நீ - தேராதே கூடற்கா வாலி குரைகழற்கா நன்னெஞ்சே கூடற்கா வாலிதரக் கூர். |
29 |
601 |
கூரால மேயாக் குருகோடு நைவேற்குக் கூரார்வேற் கையார்க்காய்க் கொல்லாமே - கூரார் பனிச்சங்காட் டார்சடைமேற் பால்மதியைப் பாம்பே பனிச்சங்காட் டாய்கடிக்கப் பாய்ந்து. |
30 |
602 |
பாயும் விடையூர்தி பாசுபதன் வந்தெனது பாயிற் புகுதப் பணை முலைமேல் - பாயிலனற் கொன்றாய் குளிர்சடையாற் கென்நிலைமை கூறாதே கொன்றாய் இதுவோ குணம். |
31 |
603 |
குணக்கோடி கோடாக் குளிர்சடையான் வில்லின் குணக்கோடி குன்றஞ்சூழ் போகிக் - குணக்கோடித் தேரிரவில் வாரான் சிவற் காளாஞ் சிந்தனையே தேரிரவில் வாழும் திறம். |
32 |
604 |
திறங்காட்டுஞ் சேயாள் சிறுகிளியைத் தான்தன் திறங்காட்டுந் தீவண்ணன் என்னும் - திறங்காட்டின் ஊரரவம் ஆர்த்தானோ டென்னை உடன்கூட்டின் ஊரரவஞ் சால உடைத்து. |
33 |
605 |
உடையோடு காடாடி ஊர்ஐயம் உண்ணி உடையாடை தோல்பொடிசந் தென்னை - உடையானை உன்மத் தகமுடிமேல் உய்த்தானை நன்னெஞ்சே உன்மத் தகமுடிமேல் உய். |
34 |
606 |
உய்யாதென் ஆவி ஒளிவளையும் மேகலையும் உய்யா துடம்பழிக்கும் ஒண்திதலை - உய்யாம் இறையானே ஈசனே எம்மானே நின்னை இறையானும் காண்கிடாய் இன்று. |
35 |
607 |
இன்றியாம் உற்ற இடரும் இருந்துயரும் இன்றியாம் தீர்தும் எழில்நெஞ்சே - இன்றியாம் காட்டாநஞ் சேற்றாஅன் காமரு வெண்காட்டான் காட்டான்அஞ் சேற்றான் கலந்து. |
36 |
608 |
கலம்பெரியார்க் காஞ்சிரங்காய் வின்மேரு என்னும் கலம்பெரிய ஆற்கீழ் இருக்கை - கலம்பிரியா மாக்கடல்நஞ் சுண்டார் கழல்தொழார்க் குண்டாமோ மாக்கடனஞ் சேரும் வகை. |
37 |
609 |
கையா றவாவெகுளி அச்சங் கழிகாமம் கையாறு செஞ்சடையான் காப்பென்னும் - கையாறு மற்றிரண்ட தோளானைச் சேர்நெஞ்சே சேரப்போய் மற்றிரண்ட தோளான் மனை. |
38 |
610 |
மனையாய் பலிக்கென்று வந்தான்வண் காமன் மனையா சறச்செற்ற வானோன் - மனையாய என்பாவாய் என்றேனுக் கியானல்லேன் நீதிருவே என்பாவாய் என்றான் இறை. |
39 |
611 |
இறையாய வெண்சங் கிவைதருவேன் என்னும் இறையாகம் இன்றருளாய் என்னும் - இறையாய் மறைக்காட்டாய் மாதவனே நின்னுருவம் இங்கே மறைக்காட்டாய் என்னும்இம் மாது. |
40 |
612 |
மாதரங்கந் தன்னரங்கஞ் சேர்த்தி வளர்சடைமேல் மாதரங்கக் கங்கைநீர் மன்னுவித்து - மாதரங்கத் தேரானை யூரான் சிவற்காளாஞ் சிந்தனையே தேரானை யூரானைத் தேர். |
41 |
613 |
தெருளிலார் என்னாவார் காவிரிவந் தேறும் அருகில் சிராமலையெங் கோமான் - விரியுலகில் செல்லுமதில் மூன்றெரித்தான் சேவடியே யாம்பரவிச் செல்லும்எழில் நெஞ்சே தெளி. |
42 |
614 |
தெளியாய் மடநெஞ்சே செஞ்சடையான் பாதம் தெளியாதார் தீநெறிக்கட் செல்வர் - தெளியாய பூவார் சடைமுடியான் பொன்னடிக்கே ஏத்துவன்நற் பூவாய வாசம் புனைந்து. |
43 |
615 |
புனைகடற்குப் பொன்கொடுக்கும் பூம்புகார் மேயான் புனைகடுக்கை மாலைப் புராணன் - புனைகடத்து நட்டங்கம் ஆட்டயரும் நம்பன் திருநாமம் நட்டங்க மாட்டினேன் நக்கு. |
44 |
616 |
நக்கரை சாளும் நடுநாளை நாரையூர் நக்கரை வக்கரையோம் நாமென்ன - நக்குரையாம் வண்டாழங் கொன்றையான் மால்பணித்தான் மற்றவர்க்காய் வண்டாழங் கொண்டான் மதி. |
45 |
617 |
மதியால் அடுகின்ற தென்னும்மால் கூரும் மதியாதே வைதுரப்பர் என்னும் - மதியாதே மாதெய்வம் ஏத்தும் மறைக்காடா ஈதேகொல் மாதெய்வம் கொண்ட வனப்பு. |
46 |
618 |
வனப்பார் நிறமும் வரிவளையும் நாணும் வனப்பார் வளர்சடையான் கொள்ள - வனப்பாற் கடற்றிரையு மீருமிக் கங்குல்வா யான்கட் கடற்றிரையு மீருங் கனன்று. |
47 |
619 |
கனன்றாழி நன்னெஞ்சே கண்ணுதலார்க் காளாய்க் கனன்றார் களிற்றுரிமால் காட்டக் - கனன்றோர் உடம்பட்ட நாட்டத்தர் என்னையுந்தன் ஆளா உடம்பட்ட நாட்டன் உரு. |
48 |
620 |
உருவியலுஞ் செம்பவளம் ஒன்னார் உடம்பில் உருவியலுஞ் சூலம் உடையன் - உருவியலும் மாலேற்றான் நான்முகனும் மண்ணோடு விண்ணும்போய் மாலேற்றாற் கீதோ வடிவு. |
49 |
621 |
வடிவார் அறப்பொங்கி வண்ணக்கச் சுந்தி வடிவார் வடம்புனைந்தும் பொல்லா - வடிவார்மேல் முக்கூடல் அம்மா முருகமருங் கொன்றையந்தார் முக்கூட மாட்டா முலை. |
50 |
622 |
முலைநலஞ்சேர் கானப்பேர் முக்கணான் என்னும் முலைநலஞ்சேர் மொய்சடையான் என்னும் -முலைநலஞ்சேர் மாதேவா என்று வளர்கொன்றை வாய்சோர மாதேவா சோரல் வளை. |
51 |
623 |
வளையாழி யோடகல மால்தந்தான் என்னும் வளையாழி நன்னெஞ்சே காணில் - வளையாழி வன்னஞ்சைக் கண்டமரர் வாய்சோர வந்தெதிர்ந்த வன்னஞ்சக் கண்டன் வரில். |
52 |
624 |
வரிநீல வண்டலம்பு மாமறைக்காட் டங்கேழ் வரிநீர் வலம்புரிகள் உந்தி - வரிநீர் இடுமணல்மேல் அந்நலங்கொண் டின்னாநோய் செய்தான் இடுமணல்மேல் ஈசன் எமக்கு. |
53 |
625 |
அக்காரம் ஆடரவம் நாண்அறுவை தோல்பொடிசாந் தக்காரம் தீர்ந்தேன் அடியேற்கு -வக்காரம் பண்டரங்கன் எந்தை படுபிணஞ்சேர் வெங்காட்டுப் பண்டரங்கன் எங்கள் பவன். |
54 |
626 |
பவனடிபார் விண்நீர் பகலோன் மதிதீப் பவனஞ்சேர் ஆரமுதம் பெண்ஆண் -பவனஞ்சேர் காலங்கள் ஊழி அவனே கரிகாட்டிற் காலங்கை ஏந்தினான் காண். |
55 |
627 |
காணங்கை இன்மை கருதிக் கவலாதே காணங்கை யாற்றொழுது நன்னெஞ்சே - காணங்கை பாவனையாய் நின்றான் பயிலும் பரஞ்சோதி பாவனையாய் நின்ற பதம். |
56 |
628 |
பதங்க வரையுயர்ந்தான் பான்மகிழ்ந்தான் பண்டு பதங்கன் எயிறு பறித்தான் - பதங்கையால் அஞ்சலிகள் அன்பாலும் ஆக்குதிகாண் நெஞ்சேகூர்ந் தஞ்சலிகள் அன்பாலும் ஆக்கு. |
57 |
629 |
ஆக்கூர் பனிவாடா ஆவிசோர்ந் தாழ்கின்றேன் ஆக்கூர் அலர்தான் அழகிதா - ஆக்கூர் மறையோம்பு மாடத்து மாமறையோ நான்கு மறையோம்பு மாதவர்க்காய் வந்து. |
58 |
630 |
வந்தியான் சீறினும் ஆழி மடநெஞ்சே வந்தியா உள்ளத்து வைத்திராய் -வந்தியாய் நம்பரனை யாடும் நளிர்புன் சடையானை நம்பரனை நாள்தோறும் நட்டு. |
59 |
631 |
நட்டமா கின்றன வொண்சங்கம் நானவன்பால் நட்டமா நன்னீர்மை வாடினேன் - நட்டமா டீயான் எரியாடி எம்மான் இருங்கொன்றை ஈயானேல் உய்வ திலம். |
60 |
632 |
இலமலரஞ் சேவடியார் ஏகப் பெறாரே இலமலரே ஆயினும் ஆக - இலமலரும் ஆம்பல்சேர் செவ்வாயார்க் காடாதே ஆடினேன் ஆம்பல்சேர் வெண்தலையர்க் காள். |
61 |
633 |
ஆளானம் சேர்களிறும் தேரும் அடல்மாவும் ஆளானார் ஊரத்தான் ஏறூரும் - தாளான்பொய் நாடகங்க ளாட்டயரும் நம்பன் திருநாமம் நாடகங்கள் ஆடி நயந்து. |
62 |
634 |
நயந்தநாள் யானிரப்ப நற்சடையான் கொன்றை நயந்தநாள் நன்னீர்மை வாட - நயந்தநாள் அம்பகலஞ் செற்றான் அருளான் அநங்கவேள் அம்பகலம் பாயும் அலர்ந்து. |
63 |
635 |
அலங்காரம் ஆடரவம் என்பதோல் ஆடை அலங்கார வண்ணற் கழகார் - அலங்காரம் மெய்காட்டு வார்குழலார் என்னாவார் வெள்ளேற்றான் மெய்காட்டும் வீடாம் விரைந்து. |
64 |
636 |
விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னார் விரையார் பொழிலுறந்தை மேயான் - விரையாநீ றென்பணிந்தான் ஈசன் இறையான் எரியாடி என்பணிந்தான் ஈசன் எனக்கு. |
65 |
637 |
எனக்குவளை நில்லா எழில்இழந்தேன் என்னும் எனக்குவளை நில்லாநோய் செய்தான் - இனக்குவளைக் கண்டத்தான் நால்வேதன் காரோணத் தெம்மானைக் கண்டத்தான் நெஞ்சேகாக் கை. |
66 |
638 |
காக்கைவளை என்பார்ப்பார்க் கன்பாப்பா னையாதே காக்கைவளை யென்பார்ப்பான் ஊன்குரக்குக் - காக்கைவளை ஆடானை ஈருரியன் ஆண்பெண் அவிர்சடையன் ஆடானை யான தமைவு. |
67 |
639 |
அமையாமென் தோள்மெலிவித் தம்மாமை கொண்டிங் கமையாநோய் செய்தான் அணங்கே - எமையாளும் சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன் சாமத்தன் இந்நோய்செய் தான். |
68 |
640 |
தானக்கன் நக்க பிறையன் பிறைக்கோட்டுத் தானக் களிற்றுரியன் தண்பழனன் - தானத் தரையன் அரவரையன் ஆயிழைக்கும் மாற்கும் அரையன் உடையான் அருள். |
69 |
641 |
அருள்நம்பாற் செஞ்சடையன் ஆமாத்தூர் அம்மான் அருள்நம்பால் நல்கும் அமுதன் - அருள்நம்பால் ஓராழித் தேரான் எயிறட்ட உத்தமனை ஓராழி நெஞ்சே உவ. |
70 |
642 |
உவவா நறுமலர்கொண் டுத்தமனை உள்கி உவவா மனமகிழும் வேட்கை - உவவா றெழுமதிபோல் வான்முகத் தீசனார்க் கென்னே எழுமதிபோல் ஈசன் இடம். |
71 |
643 |
இடமால் வலமாலை வண்ணமே தம்பம் இடமால் வலமானஞ் சேர்த்தி -இடமாய மூளா மதிபுரையும் முன்னிலங்கு மொய்சடையான் மூவா மதியான் முனி. |
72 |
644 |
முனிவன்மால் செஞ்சடையான் முக்கணான் என்னும் முனிவன்மால் செய்துமுன் நிற்கும் - முனிவன்மால் போற்றார் புரமெரித்த புண்ணியன்தன் பொன்னடிகள் போற்றாநாள் இன்று புலர்ந்து. |
73 |
645 |
புலர்ந்தால்யான் ஆற்றேன் புறனுரையும் அதே புலர்ந்தானூர் புன்கூரான் என்னும் - புலர்ந்தாய மண்டளியன் அம்மான் அவர்தம் அடியார்தம் மண்டளியன் பின்போம் மனம். |
74 |
646 |
மனமாய நோய்செய்தான் வண்கொன்றை தாரான் மனமாய உள்ளார வாரான் -மனமாயப் பொன்மாலை சேரப் புனைந்தான் புனைதருப்பைப் பொன்மாலை சேர்சடையான் போந்து. |
75 |
647 |
போந்தார் புகஅணைந்தார் பொன்னேர்ந்தார் பொன்னாமை போந்தார் ஒழியார் புரமெரித்தார் - போந்தார் இலங்கோல வாள்முகத் தீசனாற் கெல்லே இலங்கோலந் தோற்ப தினி. |
76 |
648 |
இனியாரும் ஆளாக எண்ணுவர்கொல் எண்ணார் இனியானஞ் சூணிருக்கைக் குள்ளான் - இனியானைத் தாளங்கை யாற்பாடித் தாழ்சடையான் தானுடைய தாளங்கை யால்தொழுவார் தாம். |
77 |
649 |
தாமரைசேர் நான்முகற்கும் மாற்கும் அறிவரியார் தாமரைசேர் பாம்பர் சடாமகுடர் - தாமரைசேர் பாணியார் தீர்ந்தளிப்பர் பாரோம்பு நான்மறையார் பாணியார் தீர்ந்தளிப்பர் பார். |
78 |
650 |
பார்கால்வான் நீர்தீப் பகலோன் பனிமதியோன் பார்கோல மேனிப் பரனடிக்கே - பார்கோலக் கோகரணத் தானறியக் கூறுதியே நன்னெஞ்சே கோகரணத் தானாய கோ. |
79 |
651 |
கோப்பாடி ஓடாதே நெஞ்சம் மொழி கூத்தன் கோப்பாடிக் கோகரணங் குற்றாலம் -கோப்பாடிப் பின்னைக்காய் நின்றார்க் கிடங்கொடுக்கும் பேரருளான் பின்னைக்காம் எம்பெருமான் பேர். |
80 |
652 |
பேரானை ஈருரிவை போர்த்தானை ஆயிரத்தெண் பேரானை ஈருருவம் பெற்றானைப் - பேராநஞ் சுண்டானை உத்தமனை உள்காதார்க் கெஞ்ஞான்றும் உண்டாம்நா ளல்ல உயிர். |
81 |
653 |
உயிராய மூன்றொடுக்கி ஐந்தடக்கி உள்ளத் துயிராய ஒண்மலர்த்தாள் ஊடே - உயிரான் பகர்மனத்தான் பாசுபதன் பாதம் பணியப் பகர்மனமே ஆசைக்கட் பட்டு. |
82 |
654 |
பட்டாரண் பட்டரங்கன் அம்மான் பரஞ்சோதி பட்டார் எலும்பணியும் பாசுபதன் - பட்டார்ந்த கோவணத்தான் கொல்லேற்றன் என்றென்று நெஞ்சமே கோவணத்து நம்பனையே கூறு. |
83 |
655 |
கூற்றும் பொருளும்போற் காட்டியென் கோல்வளையைக் கூற்றின் பொருள்முயன்ற குற்றாலன் - கூற்றின் செருக்கழியச் செற்ற சிவற்கடிமை நெஞ்சே செருக்கழியா முன்னமே செய். |
84 |
656 |
செய்யான் கருமிடற்றான் செஞ்சடையான் தேன்பொழில்சூழ் செய்யான் பழனத்தான் மூவுலகும் - செய்யாமுன் நாட்டுணாய் நின்றானை நாடுதும்போய் நன்னெஞ்சே நாட்டுணாய் நின்றானை நாம். |
85 |
657 |
நாவாய் அகத்துளதே நாமுளமே நம்மீசன் நாவாய்போல் நன்னெறிக்கண் உய்க்குமே - நாவாயால் துய்க்கப் படும்பொருளைக் கூட்டுதும் மற்றவர்க்காள் துய்க்கப் படுவதாஞ் சூது. |
86 |
658 |
சூதொன் றுனக்கறியச் சொல்லினேன் நன்னெஞ்சே சூதன் சொலற்கரிய சோதியான் - சூதின் கொழுந்தேன் கமழ்சோலைக் குற்றாலம் பாடிக் கொழுந்தே இழந்தேன் குருகு. |
87 |
659 |
குருகிளவேய்த் தோள்மெலியக் கொங்கைமார் புல்கிக் குருகிளையார் கோடு கொடாமே - குருகிளரும் போதார் கழனிப் புகலூர் அமர்ந்துறையும் போதாநின் பொன்முடிக்கட் போது. |
88 |
660 |
போதரங்க வார்குழலார் என்னாவார் நன்னெஞ்சே போதரங்க நீர்கரந்த புண்ணியனைப் - போதரங்கக் கானகஞ்சேர் சோதியே கைவிளக்கா நின்றாடும் கானகஞ்சேர் வாற்கடிமை கல். |
89 |
661 |
கற்றான்அஞ் சாடுகா வாலி களந்தைக்கோன் கற்றானைக் கல்லாத நாளெல்லாம் - கற்றான் அமரர்க் கமரர் அரர்க்கடிமை பூண்டார் அமரர்க் கமரரா வார். |
90 |
662 |
ஆவா மனிதர் அறிவிலரே யாதொன்றும் ஆவார்போற் காட்டி அழிகின்றார் - ஆஆ பகல்நாடிப் பாடிப் படர்சடைக்குப் பல்பூப் பகல்நாடி ஏத்தார் பகர்ந்து. |
91 |
663 |
பகனாட்டம் பாட்டயரும் பாட்டோ டாட் டெல்லி பகனாட்டம் பாழ்படுக்கும் உச்சி - பகனாட்டம் தாங்கால் தொழுதெழுவார் தாழ்சடையார் தம்முடைய தாங்கால் தொழுதல் தலை. |
92 |
664 |
தலையாலங் காட்டிற் பலிதிரிவர் என்னும் தலையாலங் காடர்தாம் என்னும் -தலையாய பாகீ ரதிவளரும் பல்சடையீர் வல்லிடையீர் பாகீ ரதிவளரும் பண்பு. |
93 |
665 |
பண்பாய நான்மறையான் சென்னிப் பலிதேர்ந்தான் பண்பாய பைங்கொன்றைத் தார்அருளான் - பண்பால் திருமாலு மங்கைச் சிவற் கடிமை செய்வான் திருமாலு மங்கைச் சிவன். |
94 |
666 |
சிவன்மாட் டுகவெழுதும் நாணும் நகுமென்னும் சிவன்மேய செங்குன்றூர் என்னும் -சிவன்மாட்டங் காலிங் கனம்நினையும் ஆயிழையீர் அங்கொன்றை யாலிங் கனம்நினையு மாறு. |
95 |
667 |
ஆறாவெங் கூற்றுதைத் தானைத்தோல் போர்த்துகந்தங் காறார் சடையீர்க் கமையாதே - ஆறாத ஆனினித்தார் தாந்தம் அணியிழையி னார்க்கடிமை ஆனினத்தார் தாந்தவிர்ந்த தாட்டு. |
96 |
668 |
ஆட்டும் அரவர் அழிந்தார் எலும்பணிவார் ஆட்டும் இடுபலிகொண் டார்அமரர் - ஆட்டுமோர் போரேற்றான் கொன்றையான் போந்தான் பலிக்கென்று போரேற்றான் போந்தான் புறம். |
97 |
669 |
புறந்தாழ் குழலார் புறனுரைஅஞ் சாதே புறந்தாழ் புலிப்பொதுவுள் ஆடி - புறந்தாழ்பொன் மேற்றளிக்கோன் வெண்பிறையான் வெண்சுடர்போல் மேனியான் மேற்றளிக்கோன் என்றுரையான் மெய். |
98 |
670 |
மெய்யன் பகலாத வேதியன் வெண்புரிநூல் மெய்யன் விரும்புவார்க் கெஞ்ஞான்றும் -வெய்ய துணையகலா நோக்ககலா போற்றகலா நெஞ்சே துணையிகலா கூறுவான் நூறு. |
99 |
671 |
நூறான் பயன்ஆட்டி நூறு மலர்சொரிந்து நூறா நொடிஅதனின் மிக்கதே - நூறா உடையான் பரித்தஎரி உத்தமனை வெள்ளே றுடையானைப் பாடலால் ஒன்று. |
100 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
7.3. சிவபெருமான் திருவந்தாதி - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - என்னும், நன்னெஞ்சே, நெஞ்சே, செஞ்சடையான், உத்தமனை, அம்மான், காணங்கை, முலைநலஞ்சேர், என்னாவார், வளையாழி, செய்தான், நட்டமா, தாமரைசேர், பகனாட்டம், போந்தார், முனிவன்மால், நயந்தநாள், காக்கைவளை, ஆக்கூர், பாசுபதன், கடியரவர், யானென்றங், கொன்றையான், கொன்றை, அடியார்தம், அரியாரும், பரஞ்சோதி, பண்டரங்கன், போந்தான், எரியாடி, ஆடரவம், மடநெஞ்சே, இன்றியாம்