முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » இருபத்திமூன்றாம் அதிகாரம்
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - இருபத்திமூன்றாம் அதிகாரம்
இருபத்திமூன்றாம் அதிகாரம்
23. வேந்தற்கு உற்றுழிப் பிரிவு
பேரின்பக் கிளவி
உற்றுழிப் பிரிவார் எட்டும் ஆனந்தம் பெற்றவா ராமை முற்றும் உரைத்தல். |
1. பிரிந்தமை கூறல்
போது குலாய புனைமுடி வேந்தர்தம் போர்முனைமேல் மாது குலாயமென் னோர்க்கிசென் றார்நமர் வண்புலியூர்க் காதுகுலாய குழைஎழி லோனைக் கருதலர்போல் ஏதுகொ லாவிளை கின்ற(து)இன்(று) ஒன்னார் இடுமதிலே. |
316 |
கொளு விறல்வேந்தர் வெம்முணைக்கண் திறல் வேந்தர் செல்வர் என்றது. |
2. பிரிவாற்றாமை கார்மிசை வைத்தல்
பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர் வன்னி வளைத்த வளர்சடை யோனை வணங்கலர்போல் துன்னி வளைத்தநம் தோன்றற்குப் பாசறை தோன்றுங் கொலோ மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன்முகிலே. |
317 |
கொளு வேந்தற்கு உற்றுழி விறலோன் பிரிய ஏந்திழை பாங்கிக்(கு) எடுத்து ரைத்தது. |
3. வான் நோக்கி வருந்தல்
கோலித் திகழ்கிற(கு) ஒன்றின் ஒடுக்கிப் பெடைக் குருகு பாலித் திரும்பனி பார்ப்பொடு சேவல் பயில்இரவின் மாலித் தனையறி யாமறை யோன்உறை அம்பலமே போலித் திருநுத லாட்(கு)என்ன தாங்கொல்என் போதரவே. |
318 |
கொளு மானோக்கி வடிவு நினைத்தோன் வானோக்கி வருந்தியது. |
4. கூதிர் கண்டு கவறல்
கருப்பினம் மேவும் பொழில்தில்லை மன்னன்கண் ணார்அருளால் விருப்பினம் மேவச்சென் றார்க்கும்சென்(று) அல்குங்கொல் வீழ்பனிவாய் நெருப்பினம் மேய்நடு மால்எழில் தோன்றச்சென் றாங்குநின்ற பொருப்பினம் ஏறித் தமியரைப் பார்க்கும் புயலினமே. |
319 |
கொளு இருங்கூதிர் எதிர்வு கண்டு கருங்குழலி கவலை யுற்றது. |
5. முன் பனிக்கு நொந்துரைத்தல்
கற்றின வீழ்பனி தூங்கத் துவண்டு துயர்கஎன்று பெற்றவ ளேஎனைப் பெற்றாள் பெடைசிற கான்ஒடுக்கிப் புற்றில வாளர வன்தில்லைப் புள்ளும்தம் பிள்ளைதழீஇ மற்றினம் சூழ்ந்து துயிலப் பெறும்இம் மயங்கிருளே. |
320 |
கொளு ஆன்றபனிக்(கு) ஆற்றா(து) அழிந்(து) ஈன்றவளை ஏழை நொந்தது. |
6. பின்பனி நினைந்து இரங்கல்
புரமன்(று) அயரப் பொருப்புவில் ஏந்திப் புத் தேளிர்நாப்பண் சிரம்அன்(று) அயனைச்செற் றோன்தில்லைச் சிற்றம்பலம்அனையாள் பரம்அன்(று) இரும்பனி பாரித்த வாபரந்(து) எங்கும்வையம் சரமின்றி வான்தரு மேலாக்கும் மிக்க தமியருக்கே. |
321 |
கொளு இரும்பனியின் எதிர்வு கண்டு கரும்பிவர் குழலி துயரம் நினைந்தது. |
7. இளவேனில் கண்டு இன்னல் எய்தல்
வாழும் படியன்றும் கண்டிலம் வாழிஇம் மாம்பொழில்தேன் சூழும் முகச்சுற்றும் பற்றின வால்தொண்டை யங்கனிவாய் யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலம் ஆதரியாக் கூழின் மலிமனம் போன்(று)இருளா நின்ற கோகிலமே. |
322 |
கொளு இன்னிள வேனில் முன்னுவது கண்டு மென்னகைப் பேதை இன்னல் எய்தியது. |
8. பருவங் காட்டி வற்புறுத்தல்
பூண்பதென் றேகொண்ட பரம்பன் புலியூர் அரன் மிடற்றின் மாண்பதென் றேஎன வானின் மலரும் மணந்தவர்தேர் காண்பதன் றேயின்று நாளையிங் கேவரக் கார்மலர்த்தேன் பாண்பதன் தேர்குழ லாய்எழில் வாய்த்த பனிமுகிலே. |
323 |
கொளு கார்வருமெனக் கலங்கு மாதரைத் தேர் வருமெனத் தெளிவித்தது. |
9. பருவம் அன்று என்று கூறல்
தெளிதரல் காரெனச் சீர்அனம் சிற்றம் பலத்தடியேன் களிதரக் கார்மிடற் றோன்நட மாடக்கண் ணார்முழவம் துளிதரல் காரென ஆர்த்தன ஆர்ப்பத்தொக்(கு) உன்குழல்போன்(று) அளிதரக் காந்தளும் பாந்தளைப் பாரித்(து) அலர்ந்தனவே. |
324 |
கொளு காரெனக் கலங்கும் ஏரெழில் கண்ணிக்கு இன்துணைத் தோழி அன்றென்று மறுத்தது. |
10. மறுத்துக் கூறல்
தேன்திக்(கு) இலங்கு கழல்அழல் வண்ணன்சிற் றம்பலத்(து)எங் கோன்திக்(கு) இலங்குதிண் தோள் கொண்டல் கண்டன் குழைஎழில்நாண் போன்(று)இக் கடிமலர்க் காந்தளும் போந்தவன் கையனல் போல் தோன்றிக் கடிமல ரும்பொய்ம்மை யோமெய்யில் தோன்றுவதே. |
325 |
கொளு பருவம் அன்றென்று பாங்கி பகர மருவமர் கோதை மறுத்து ரைத்தது. |
11. தேர் வரவு கூறல்
திருமால் அறியாச் செறிகழல் தில்லைச் சிற்றம்பலத்(து)எம் கருமால் விடையடை யோன்கண்டம் போற்கொண்டல் எண்டிசையும் வருமால் உடன்மன் பொருந்தல் திருந்த மணந்தவர்தேர் பொருமால் அயிற்கண்நல் லாய்இன்று தோன்றும்நம் பொன்னாகர்க்கே. |
326 |
கொளு பூங்கொடி மருளப் பாங்கி தெருட்டியது. |
12. வினை முற்றி நினைதல்
புயலோங்(கு) அலர்சடை ஏற்றவன் சிற்றம் பலம்புகழும் மயலோங்கு இருங்களி யானை வரகுணண் வெற்பின்வைத்த கயலோங்(கு) இருஞ்சிலை கொண்டுமன் கோபமும் காட்டிவரும் செயலோங்(கு) எயில்எரி செய்தபின் இன்றோர் திருமுகமே. |
327 |
கொளு பாசறை முற்றிப் படைப்போர் வேந்தன் மாசறு பூண்முலை மதிமுகம் நினைந்தது. |
13. நிலைலமை நினைந்து கூறல்
சிறப்பின் திகழ்சிவன் சிற்றம் பலஞ்சென்று சேர்ந்தவர்தம் பிறப்பின் துனைந்து பெருகுக தேர்பிறங் கும்ஒளியார் நிறப்பொன் புரிசை மறுகினில் துன்னி மடநடைப்புள் இறப்பின் துயின்றுமுற் றத்(து)இரை தேரும் எழில் நகர்க்கே. |
328 |
கொளு பொற்றொடி நிலைமை மற்றவன் நினைந்து திருந்துதேர் பாகற்கு வருந்து புகன்றது. |
14. முகிலொடு கூறல்
அருந்(து)ஏர் அழிந்தனம் ஆலம்என்(று) ஓல மிடும்இமையோர் மருந்(து)ஏர் அணிஅம் பலத்தோன் மலர்த்தாள் வணங்கலர்போல் திருந்(து)ஏர் அழிந்து பழங்கண் தரும்செல்வி சீர்நகர்(கு)என் வரும்தேர் இதன்முன் வழங்கேல் முழங்கேல் வளமுகிலே. |
329 |
கொளு முனைவற்கு உற்றுழி வினைமுற்றி வருவோன் கழுமல் எய்திச் செழுமுகிற்(கு) உரைத்தது. |
15. வரவெடுத்துரைத்தல்
பணிவார் குழைஎழி லோன்தில்லைச் சிற்றம் பலம்அனைய மணிவார் குழல்மட மாதே பொலிகநம் மன்னர்முன்னாப் பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமுரம் கொண்டுவண்தேர் அணிவார் முரிசினொ(டு) ஆலிக்கும் மாவோ(டு) அணுகினரே. |
330 |
கொளு வினைமுற்றிய வேந்தன் வரவு புழையிழைத் தோழி பொற்றொடிக்(கு) உரைத்தது. |
16. மறவாமை கூறல்
கருங்குவ ளைக்கடி மாமலர் முத்தங் கலந்திலங்க நெருங்கு வளைக்கிள்ளை நீங்கற் றிலள்நின்று நான்முகனோ(டு) ஒருங்கு வளைக்கரத் தான் உண ராதவன் தில்லையப்பாய் மருங்கு வளைத்துமன் பாசறை நீடிய வைகலுமே. |
331 |
கொளு பாசறை முற்றிப் பைந்தொடியோ(டு) இருந்து மாசறு தோழிக்கு வள்ளல் உரைத்தது. |
வேந்தற்கு உற்றுழிப் பிரிவு முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இருபத்திமூன்றாம் அதிகாரம் - எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சிற்றம், உரைத்தது, நினைந்து, உற்றுழிப், வேந்தற்கு