முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » பதினேழாம் அதிகாரம்
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - பதினேழாம் அதிகாரம்
பதினேழாம் அதிகாரம்
17. வரைவு முடுக்கம்
பேரின்பக் கிளவி
வரைவு முடுக்கம் ஒருபதி னாறும் சிவனது கருணை தெரிய உரைத்தல் இன்பம் பெறஅருள் எடுத்தியம் பியது. |
1. வருத்த மிகுதி கூறி வரைவு கடாதல்
எழுங்குலை வாழையின் இன்கனி தின்(று)இள மந்திஅந்தண் செழுங்குலை வாழை நிழலில் துயில்சிலம் பாமுனைமேல் உழுங்கொலை வேல்திருச் சிற்றம் பலவரை உன்னலர்போல் அழுங்குலை வேலன்ன கண்ணிக்(கு)என் னோநின் னருள் வகையே. |
250 |
கொளு இரவுக் குறியிடத்(து) ஏந்திழைப் பாங்கி வரைவு வேண்டுதல் வரவு ரைத்தது. |
2. பெரும்பான்மை கூறி மறுத்தல்
பரம்பயன் தன்னடி யேனுக்குப் பார்விசும் பூடுருவி வரம்பயன் மாலறி யாத்தில்லை வானவன் வானகஞ்சேர் அரம்பையர் தம்மிட மோஅன்றி வேழத்தின் என்புநட்ட குரம்பையர் தம்மிட மோஇடம் தோன்றும்இக் குன்றிடத்தே. |
251 |
கொளு குலம்புரி கொம்பர்க்குச் சிலம்பின் செப்பியது. |
3. உள்ளது கூறி வரைவு கூடாதல்
சிறார்கவண் வாய்த்த மணியிற் சிதை பெருந் தேனிழும்என்(று) இறால்கழி வுற்(று)எம் சிறுகுடில் உந்தும் இடமி(து)எந்தை உறாவரை யுற்றார் குறவர்பெற் றாளும் கொடிச்சி உம்பர் பெறாஅருள் அம்பல வன்மலைக் காத்தும் பெரும்புனமே. |
252 |
கொளு இன்மை உரைத்த மன்னனுக்கு மாழை நோக்கி தோழி உரைத்தது. |
4. ஏதங்கூறி இரவரவு விலக்கல்
கடந்தொறும் வாரண வல்சியின் நாடிப்பல் சீயம்கங்குல் இடம்தொறும் பார்க்கும் இயவொரு நீஎழில் வேலின்வந்தால் படந்தொறும் தீஅர வன்னம் பலம்பணி யாரின்எம்மைத் தொடர்ந்தொறும் துன்(பு)என் பதேஅன்ப நின்னருள் தோன்றுவதே. |
253 |
கொளு இரவரு துயரம் ஏந்தலுக்(கு) எண்ணிப் பருவரல் எய்திப் பாங்கி பகர்ந்தது. |
5. பழிவரவுரைத்ததுப் பகல்வரவு விலக்கல்
களிறுற்ற செல்லல் களைவயின் பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப் பிளிறுற்ற வானப் பெருவரை நாட பெடைநடையோ(டு) ஒளிறுற்ற மேனியின் சிற்றம் பலம்நெஞ் சுறாதவர்போல் வெளிறுற்ற வான்பழி யாம்பகல் நீசெய்யும் மெய்யருளே. |
254 |
கொளு ஆங்ஙனம் ஒழுகும் அடல்வேல் அண்ணலைப் பாங்கி ஐய பகல்வரல் என்றது. |
6. தொழுதிரந்து கூறல்
கழிகண் தலைமலை வோன்புலி யூர்கரு தாதவர்போல் குழிகண் களிறு வெரீஇஅரி யாளி குழீஇவழங்காக் கழிகட் டிரவின்வரல்கழல் கைதொழு தேயிரந்தேன் பொழிகட் புயலின் மயிலில் துவளும் இவள்பொருட்டே. |
255 |
கொளு இரவரவின் ஏதம் அஞ்சிச் சுரிதருகுழல் தோழி சொல்லியது. |
7. தாய் அறிவு கூறல்
விண்ணும் செலவறி யாவெறி யார்கழல் வீழ்சடைத்தீ வண்ணன் சிவன்தில்லை மல்லெழில் கானல் அரையிரவில் அண்ணல் மணிநெடுந் தேர்வந்த துண்டாம் எனச்சிறிது கண்ணும் சிவந்தன்னை என்னையும் நோக்கினள் கார்மயிலே. |
256 |
கொளு சிறைப்பு றத்துச் செம்மல் கேட்ப வெறிக்குறல் பாங்கி மெல்லியற்(கு) உரைத்தது. |
8. மந்தி மேல் வைத்து வரைவு கடாதல்
வான்தோய் பொழில்எழில் மாங்கனி மந்தியின் வாய்க்கடுவன் தேன்தோய்த்(து) அருத்தி மகிழ்வகண் டாள்திரு நீள்முடிமேல் மீன்தோய் புனற்பெண்ணை வைத்துடை யானையும் மேனியைத்தான் வான்தோய் மதில்தில்லை மாநகர் போலும் வரிவளையே. |
257 |
கொளு வரிவளையை வரைவு கடாவி அரிவை தோழி உரை பகர்ந்தது. |
9. காவல் மேல் வைத்துக் கண் துயிலாமை கூறல்
நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று நாடக மாடுதில்லைச் சிறைக்கண் மலிபுனல் சீர்நகர் காக்கும்செவ் வேல்கிளைஞர் பறைக்கண் படும்படும் தோறும் படாமுலைப் பைந்தொடியாள் கறைக்கண் மலிகதிர் வேற்கண் படாது கலங்கினவே. |
258 |
கொளு நகர்காவலின் மிகுகழி காதல். |
10. பகல் உடம்பட்டாள் போன்று இரவரவு விலக்கல்
கரலா யினர்நினை யாத்தில்லை அம்பலத் தான்கழற்(கு)அன் பிலரா யினர்வினை போலிருள் தூங்கி முழங்கிமின்னிப் புலரா இரவும் பொழியா மழையும்புண் ணில்நுழைவேல் மலரா வரும்மருந் தும்இல்லை யோநும் வரையிடத்தே. |
259 |
கொளு விரைதரு தாரோய் இரவரல் என்றது. |
11. இரவு உடம்பட்டாள் போன்று பகல் வரவு விலக்கல்
இறவரை உம்பர்க் கடவுட் பராய்நின்(று) எழிலியுன்னிக் குறவரை ஆர்க்கும் குளிர்வரை நாட கொழும்பவள நிறவரை மேனியன் சிற்றம் பலம்நெஞ்(சு) உறாதவர்போல் உறவரை மேகலை யாட்(கு)அலராம்பகல் உள்ளருளே. |
260 |
கொளு இகலடு வேலோய் பகல்வரல் என்றது. |
12. இரவும் பகலும் வரவு விலக்கல்
கழியா வருபெரு நீர்சென்னி வைத்தென்னைத் தன்தொழும்பில் கழியா அருள்வைத்த சிற்றம் பலவன் கரந்தருமான் விழியா வரும்புரி மென்குழ லாள்திறத்(து) ஐயமெய்யே பழியாம் பகல்வரில் நீயிர(வு) ஏதும் பயனில்லையே. |
261 |
கொளு இரவும் பகலும் வரவொழி கென்றது. |
13. காலங் கூறி வரைவு கடாதல்
மையார் கதலி வனத்து வருக்கைப் பழம்விழுதேன் எய்யா(து) அயின்றன மந்திகள் சோரும் இருஞ்சிலம்பா மெய்யா அரியதென் அம்பலத் தான்மதி யூர்கொள் வெற்பின் மொய்யார் வளரிள வேங்கைபொன் மாலையின் முன்னினவே. |
262 |
கொளு முந்திய பொருளைச் சிந்தையில் வைத்து வரைதரு கிளவியில் தெரிய உரைத்தது. |
14. கூறுவிக் குற்றல்
தேமாம் பொழில்தில்லைச் சிற்றம் பலத்துவிண் ணோர்வணங்க நாமா தரிக்க நடம்பயில் வோனைநண் ணாதவரின் வாமாண் கலைசெல்ல நின்றார் கிடந்தநம் அல்லல்கண்டால் தாமா அறிகில ராயின்என்னாம் சொல்லும் தன்மைகளே. |
263 |
கொளு ஒத்த(து) ஒவ்வா(து) உரைத்த தோழி கொத்தவிழ் கோதையால் கூறுவிக் குற்றது. |
15. செலவு நினைந்து உரைத்தல்
வல்சியின் எண்கு வளர்புற்(று) அகழமல் கும்இருள்வாய்ச் செல்(வு)அரி தன்றுமன் சிற்றம் பலவரைச் சேரலர்போல் கொல்கரி சீயங் குறுகா வகைபிடி தானிடைச்செல் கல்லதர் என்வந்த வாறென் பவர்ப்பெறின் கார்மயிலே. |
264 |
கொளு பாங்கி நெருங்கப் பணிமொழி மொழிந்து தேங்கமழ் சிலம்பற்குச் சிறைபுறக் கிளவி. |
16 பொலிவழிவு உரைத்து வரைவு கடாதல்
வாரிக் களிற்றின் மருப்புகு முத்தம் வரைமகளிர் வேரிக்(கு) அளிக்கும் விழுமலை நாட விரிதிரையிண் நாரிக்(கு) அளிக்கமர் நன்மாச் சடைமுடி நம்பர்தில்லை ஏரிக் களிக்கரு மஞ்ஞைஇந் நீர்மைஎன் எய்துவதே. |
265 |
கொளு வரைவு விரும்பு மன்னுயிர்ப் பாங்கி விரைதரு குழலி மெலிவு ரைத்தது. |
வரைவு முடுக்கம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினேழாம் அதிகாரம் - எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சிற்றம், பாங்கி, விலக்கல், கடாதல், இரவும், என்றது, உரைத்தது, முடுக்கம்