முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » பன்னிரண்டாம் அதிகாரம்
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - பன்னிரண்டாம் அதிகாரம்
பன்னிரண்டாம் அதிகாரம்
12. சேட்படை
பேரின்பக் கிளவி
சேட்படை இருபத் தாறு துறையும் கிடையா இன்பம் கிடைத்தலால் உயிரை அருமை காட்டி அறியாள் போலப் பலபல அருமை பற்றி உரைத்த அருளே சிவத்தோ(டு) ஆக்க அருளல். |
1. தழைகொண்டு சேறல்
தேமென் கிளவிதன் பங்கத்(து) இறையுறை தில்லையன்னீர் பூமென் தழையும்அம் போதும்கொள் ளீர்தமி யேன்புலம்ப ஆமென்(று) அருங்கோடும் பாடுகள் செய்துநும் கண்மலராம் காமன் கணைகொண்(டு) அலைகொள்ள வோமுற்றக் கற்றதுவே. |
90 |
கொளு கொய்ம் மலர்க் குழலி குறைந யந்தபின் கையுறை யோடு காளை சென்றது. |
2. சந்தனத் தழை தகாதென்று மறுத்தல்
ஆரத் தழையராப் பூண்(டு)அம் பலத்(து)அன லாடிஅன்பர்க்(கு) ஆரத் தழையன்(பு) அருளிநின் றோன்சென்ற மாமலயத்(து) ஆரத் தழையண்ணல் தந்தால் இவைஅவள் அல்குல்கண்டால் ஆரத் தழைகொடு வந்தார் எனவரும் ஐயுறவே. |
91 |
கொளு பிறை நுதற் பே¨¡தயைக் குறைநயப் பித்தது உள்ளறி குற்றம் ஒள்ளிழை யுரைத்தது. |
3. நிலத்தின்மை கூறிமறுத்தல்
முன்தகர்த்(து) எல்லா இமையோரை யும்பின்னைத் தக்கன்முத்தீச் சென்(று)அகத்(து) இல்லா வகைசினத்த தோன்திருந்(து) அம்பலவன் குன்றகத்(து) இல்லாத் தழைஅண் ணல்தந்தால் கொடிச்சியருக்(கு) இன்(று)அகத்(து) இல்லாப் பழிவந்து மூடும்என்(று) எள்குதுமே. |
92 |
கொளு கொங்கலர் தாரோய் கொணர்ந்த கொய்தழை எங்குலத் தாருக்(கு) ஏலாது என்றது. |
4. நினைவறிவு கூறி மறுத்தல்
யாழார் மொழிமங்கை பங்கத்(து) இறைவன் எறிதிரைநீர் ஏழாய் எழுமொழி லாய்இருந் தோன்நின்ற தில்லையன்ன சூழார் குழல்எழில் தொண்டைச்செவ் வாய்நவ்வி சொல்லறிந்தால் தாழா(து) எதிர்வந்து கோடும் சிலம்ப தரும்தழையே. |
93 |
கொளு மைதழைக் கண்ணி மனமறிந்(து) அல்லது கொய்தழை தந்தால் கொள்ளேம் என்றது. |
5. படைத்து மொழியான் மறுத்தல்
எழில்வாய் இளவஞ்சி யும்விரும் பும்மற்று இறைகுறையுண்டு அழல்வாய் அவிரொளி அம்பலத்து ஆடும்அம் சோதி அம்தீம் குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற் றாலத்துக் கோலப்பிண்டிப் பொழில்வாய் தடவரை வாயல்ல(து) இல்லைஇப் பூந்தழையே. |
94 |
கொளு அருந்தழை மேன்மேல் பெருந்தகை கொணரப் படைத்துமொழி கிளவியில் தடுத்தவள் மொழிந்தது. |
6. நாணுரைத்து மறுத்தல்
உறுங்கள்நி வந்த கணையுர வோன்பொடி யாய் ஒடுங்கத் தெறுங்கண்நி வந்தசிற்றம்பல வன்மலைச் சிற்றிலின்வாய் நறுங்கண்ணி சூட்டினும் நாணும்என் வாணுதல் நாகத்தொண்பூங் குறுங்கண்ணி வேயந்திள மந்திகள் நாணும்இக் குன்றிடத்தே. |
95 |
கொளு வாணுதற் பேதையை நாணுதல் உரைத்தது |
7. இசையாமை கூறி மறுத்தல்
நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகநண்ணி மறமனை வேங்கை எனநனி அஞ்சும்அஞ் சார்சிலம்பா குறமனை வேங்கைச் சுணங்கொடு அணங்கலர் கூட்டுபவோ நிறமனை வேங்கை அதள்அம் பலவன் நெடுவ ரையே. |
96 |
கொளு வசைநீர் குலத்திற்(கு) இசையா(து) என்றது. |
8. செவ்வியிலள் என்று மறுத்தல்
சுற்றில கண்டன்னம் மென்னடை கண்மலர் நோக்கருளப் பெற்றில மென்பிணை பேச்சுப் பெறாகிள்ளை பிள்ளையின்றொன்(று) உற்றிபள் உற்ற(து) அறிந்திலள் ஆகத்(து) ஒளிமிளுரும் புற்றில வாளர வன்புலி யூரன்ன பூங்கொடியே. |
97 |
கொளு நவ்வி நோக்கி செவ்வியிலள் என்றது. |
9. காப்புடைத்தென்று மறுத்தல்
முனிதரும் அன்னையும் என்ஐயர் சாலவும் மூர்க்கர்இன்னே தனிதரும் இந்நிலத் தன்(று)ஐய குன்றமும் தாழ்சடைமேல் பனிதரு திங்கள் அணிஅம் பலவர் பகைசெகுக்கும் குனிதரு திண்சிலைக் கோடுசென் றான்சுடர்க் கொற்றவனே. |
98 |
கொளு காப்புடைத் தென்று சேட்ப டுத்தது. |
10. நீயே கூறென்று மறுத்தல்
அந்தியின் வாயெழில் அம்பலத்(து) எம்பரன் அம்பொன்வெற்பின் பந்தியின் வாய்ப்பல வின்சுளை பைந்தே னொடும்கடுவன் மந்தியின் வாய்க்கொடுத்(து) ஓம்பும் சிலம்ப மனம்கனிய முந்தியின் வாய்மொழி நீயே மொழிசென்றம் மொய்குழற்கே. |
99 |
கொளு அஞ்சுதும் பெரும பஞ்சின்மெல் லடியைக் கூறுவ நீயே கூறு கென்றது. |
11. குலமுறை கூறி மறுத்தல்
தெங்கம் பழம்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக் கொங்கம் பழனத்(து) ஒளிர்குளிர் நாட்டினை நீயுமைகூர் பங்கம் பலவன் பரங்குன்றில் குன்றன்ன மாபதைப்பச் சிங்கம் திரிதரு சீறூர்ச் சிறுமிஎம் தேமொழியே. |
100 |
கொளு தொழுகுலத்தீர் சொற்காகேம் இழிகுலத்தேம் என்வுரைத்தது. |
12. நகையாடி மறுத்தல்
சிலையன்று வாணுதல் பங்கன்சிற் றம்பல வன்கயிலை மலையன்று மாமுகத்(து) எம்ஐயர் எய்கணை மண்குளிக்கும் கலையன்று வெங்கணை யோடு கடுகிட்ட தென்னிற்கெட்டேன் கொலையென்று திண்ணிய வா(று)ஐயர் கையிற் கொடுஞ்சிலையே. |
101 |
கொளு வாள்தழை எதிராது சேட்படுத் தற்கு மென்னகைத் தோழி இன்னகை செய்தது. |
13. இரக்கத்தோடு மறுத்தல்
மைத்தழை யாநின்ற மாமிடற்(று) அம்பல வன்கழற்கே மெய்த்தழை யாநின்ற அன்பினர் போல விதிர்விதிர்த்துக் கைத்தழை யேந்திக் கடமா வினாய்க் கையில் வில்லின்றியே பித்தழை யாநிற்ப ரால்என்ன பாவம் பெரியவரே. |
102 |
கொளு கையுறை எதிராது காதல் தோழி ஐய நீபெரி(து) அயர்த்தனை என்றது. |
14. சிறப்பின்மை கூறி மறுத்தல்
அக்கும் அரவும் அணிமணிக் கூத்தன்சிற் றம்பலமே ஓக்கும் இவள(து) ஒளிர்உரு அஞ்சி மஞ் சார்சிலம்பா கொக்கும் சுனையும் குளிர்தளி ரும்கொழும் போதுகளும் இக்குன்றில் என்றும் மலர்ந்தறி யாத இயல்பினவே. |
103 |
கொளு மாந்தளிரும் மலர்நீலமும் ஏந்தல் இம்மலை இல்லை என்றது. |
15. இளமை கூறி மறுத்தல்
உருகு தலைச்சென்ற உள்ளத்தும் அம்பலத் தும்ஒளியே பெருகு தலைச்சென்று நின்றோன் பெருந்துறைப் பிள்ளைகள்ளார் முருகு தலைச்சென்ற கூழை முடியா முலைபொடியா ஒருகு தலைச்சின் மழலைக் கென் னோஐய ஓதுவதே. |
104 |
கொளு முளைஎயிற்(று) அரிவை விளைவிலள் என்றது. |
16. மறைத்தமை கூறி நகைத்துரைத்தல்
பண்(டு)ஆல் இயலும் இலைவளர் பாலகன் பார்கிழித்துத் தொண்டால் இயலும் சுடர்க்கழ லோன்தொல்லைத் தில்லையின்வாய் வண்டால் இயலும் வளர்புந் துறைவ மறைக்கின்என்னைக் கண்டால் இயலும் கடனில்லை கொல்லோ கருதியதே. |
105 |
கொளு என்னை மறைத்தபின் எண்ணியது அரிதென நன்னுதல் தோழி நகைசெய்தது. |
17. நகை கண்டு மகிழ்தல்
மத்தகம் சேர்தனி நோக்கினன் வாக்கிறந்(து) ஊறமுதே ஒத்தகம் சேர்ந்தென்னை உய்யநின் றோன்தில்லை ஒத்திலங்கு முத்தகம் சேர்மென் னகைப் பெருந் தோளி முகமதியின் வித்தகம் சேர்மெல்லென் நோக்கமன்றோஎன் விழுத்துணையே. |
106 |
கொளு இன்னகைத் தோழி மென்னகை கண்டு வண்ணக் கதிர்வேல் அண்ணல் உரைத்தது. |
18. அறியாள் போன்று நினைவு கேட்டல்
விண்இறந் தார்நிலம் விண்டலர் என்றுமிக் கார்இருவர் கண்இறந் தார்தில்லை அம்பலத் தார்கழுக் குன்றினின்று தண்நறுந் தா(து)இவர் சந்தனச் சோலைப்பந் தாடுகின்றார் எண்இறந் தார்அவர் யார்கண்ண தோமன்ன நின்னருளே. |
107 |
கொளு வேந்தன் சொன்ன மாந்தளிர் மேனியை வெறியார் கோதை யறியேன் என்றது. |
19. அவயவம் கூறல்
குவவின கொங்கை குரும்பை குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய் கவவின வாள்நகை வெண்முத்தம் கண்மலர் செங்கழுநீர் தவவினை தீர்ப்பவன் தாழ்பொழில் சிற்றம்பலம் அனையாட்(கு) உவவின நாள்மதி போன்றொளிர் கின்ற(து) ஒளிமுகமே. |
108 |
கொளு அவயவம் அவளுக்(கு) இவைஇவை என்றது |
20. கண் நயந்து உரைத்தல்
ஈசற்(கு) யான்வைத்த அன்பின் அகன்றவன் வாங்கியஎன் பாசத்தின் காரென்(று) அவன்தில்லை யின்ஒளி போன்றவன்தோள் பூ(க)அத் திருநீ(று) எனவெளுத்(து) அங்கவன் பூங்கழல்யாம் பே(சு)அத் திருவார்த்தை யிற்பெரு நீளம் பெருங்கண்களே. |
109 |
கொளு கண்இணை பிறழ்வன வண்ணம் உரைத்தது. |
21. தழையெதிர்தல்
தோலாக் கரிவென்ற தற்கும் துவள்விற்கும் இல்லின்தொன்மைக்(கு) ஏலாப் பரி(சு)உள வேயன்றி ஏலேம் இருஞ்சிலம்ப மாலார்க்(கு) அரிய மலர்க்கழல் அம்பல வன்மலையில் கோலாப் பிரசம் அன் னாட்(கு)ஐய நீதந்த கொய் தழையே. |
110 |
கொளு அகன்ற இடத்(து) ஆற்றாமை கண்டு கவன்ற தோழி கையுறை எதிர்ந்தது |
22. குறிப்பறிதல்
கழைகாண் டலும்சுளி யுங்களி யானையன் னான்கரத்தில் தழைகாண் டலும்பொய் தழைப்பமுன் காண்பன்இன்(று) அம்பலத்தான் உழைகாண் டலும்நினைப் பாகும்மெல் நோக்கிமன் நோக்கங்கண்டால் இழைகாண் பணைமுலை யாய்அறி யேன்சொல்லும் ஈடவற்கே. |
111 |
கொளு தழை எதிரா(து) ஒழிவதற்கோர் சொல்லறி யேனெனப் பல்வளைக்(கு) உரைத்தது. |
23. குறிப்பறிந்து கூறல்
தவளத்த நீறணி யும்தடந் தோள்அண்ணல் தன்னொருபால் அவள்அத்த னாம்மக னாம்தில்லை யான்அன்(று) உரித்ததன்ன கவளத்த யானை கடிந்தார் கரத்தகண் ணார்தழையும் துவளத் தகுவன வோசுரும் பார்குழல் தூமொழியே. |
112 |
கொளு ஏழைக்(கு) இருந்தழை தோழிகொண்(டு) உரைத்தது. 23 |
24. வகுத்துறைத்தல்
ஏறும் பழிதழை யேன்பின்மற்(று) ஏலா விடின்மடன்மா ஏறும் அவன்இட பங்கொடி ஏற்றிவந்(து) அம்பலத்துள் ஏறும் அரன்மன்னும் ஈங்கோய் மலைநம் இரும்புனம்காய்ந்(து) ஏறும் மலைதொலைத் தாற்(கு)என்னை யாம்செய்வ(து) ஏந்திழையே. |
113 |
கொளு கடித்தழை கொணர்ந்த காதல் தோழி மடக்கொடி மாதர்க்கு வகுத்துரைத்தது. |
25. தழையேற்பித்தல்
தெவ்வரை மெய்யெரி காய்சிலை ஆண்டென்னை ஆண்டுகொண்ட செவ்வரை மேனியன் சிற்றம் பலவன் செழுங்கயிலை அவ்வரை மேலன்றி யில்லைகண் டாய்உள்ள வா(று)அருளான் இவ்வரை மேற்சிலம் பன்எளி தில்தந்த ஈர்ந்தழையே. |
114 |
கொளு கருங்குழல் மடந்தைக்(கு) அரும்பெறல் தோழி இருந்தழை கொள்கென விரும்பிக் கொடுத்தது. |
26. தழை விருப்புரைத்தல்
பாசத் தளையறுத்(து) ஆண்டுகொண் டோன்தில்லை அம்பலம் சூழ் தேசத் தனசெம்மல் நீதந் தனசென்(று) யான்கொடுத்தேன் பேசிற் பெருகும் சுருங்கு மருங்குழல் பெயர்ந்தரைத்துப் பூசிற் றிலள்அன்றிச் செய்யா தனஇல்லை பூந்தழையே. |
115 |
கொளு விருப்பவள் தோழி பொருப்பற்(கு) உரைத்தது. |
சேட்படை முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பன்னிரண்டாம் அதிகாரம் - எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மறுத்தல், என்றது, உரைத்தது, இயலும், அம்பலத், கையுறை, சேட்படை