முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » பத்தாம் அதிகாரம்
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - பத்தாம் அதிகாரம்
பத்தாம் அதிகாரம்
10. மடல் திறம்
பேரின்பக் கிளவி
மடல்துறை ஒன்பதும் சிவத்தினுட் மோக முற்ற உயிரருள் பற்றி உரைத்தது. |
1. ஆற்றாது உரைத்தல்
பொருளா எனைப்புகுந்(து) ஆண்டு புரந்தரன் மாலயன்பால் இருளாய் இருக்கும் ஒளிநின்ற சிற்றம் பலமெனலாம் சுருளார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் துடியிடையீர் அருளா(து) ஒழியின் ஒழியா(து) அழியும்என் ஆருயிரே. |
73 |
கொளு மல்லல்திரள் வரைத்தோளவன் சொல்லற்றாது சொல்லியது. |
2. உலகின்மேல் வைத்துரைத்தல்
காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து வீசின போதுள்ள மீனிழந் தார்வியன் தென்புலியூர் ஈசன சாந்தும் எருக்கும் அணிந்தோர் கிழ்பிடித்துப் பாய்ச்சின மாவென ஏறுவர் சீறூர்ப் பனைமடலே. |
74 |
3. தன் துணிபு உரைத்தல்
விண்ணை மடங்க விரிநீர் பரந்துவெற் புக்கரப்ப மண்ணை மடங்க வரும்ஒரு காலத்து மன்னிநிற்கும் அண்ணல் மடங்கல் அதள்அம் பலவன் அருளிலர்போல் பெண்ணை மடன்மிசை யான்வரப் பண்ணிற்றோர் பெண்கொடியே. |
75 |
கொளு மான வேலவன் மடம்மாமிசை யானும் ஏறுவன் என்ன உரைத்தது. |
4. மடலேறும் வகையரைத்தல்
கழிகின்ற என்னையும் நின்றநின் கார்மயில் தன்னையும் யான் கிழியன்ற நாடி எழுதிக்கைக் கொண்டென் பிறவிகெட்டின்(று) அழிகின்ற(து) ஆக்கிய தாள்அம் பலவன் கயிலையந்தேன் பொழிகின்ற சாரல்நும் சீறூர்த் தெருவிடைப் போதுவனே. |
76 |
கொளு அடல்வேலன் அழிவுற்று மடலேறும் வகையுரைத்தது. |
5. அருளால் அரிதென விலக்கல்
நடனாம் வணங்கும்தொல் லோன்எல்லை நான்முகன் மாலறியாக் கடனாம் உருவத்(து) அரன்தில்லை மல்லற் கண் ணார்ந்த பெண்ணை உடனாம் பெடைய(டு)ஆண் சேவலும் முட்டையும் கட்டழித்து மடனாம் புனைதரின் யார்கண்ண தோமன்ன இன்னருளே. |
77 |
கொளு அடல்வேல் அண்ணல் அருளுடை மையின் மடல் ஏற்றுனக்(கு) அரிதென்றது. |
6. மொழிநடை எழுதல் அரிதென விலக்கல்
அடிச்சந்தம் மால்கண் டிலாதன காட்டிவந்(து) ஆண்டுகொண்டென் முடிச்சந்த மாமலர் ஆக்குமுன் னோன்புலி யூர்புரையும் கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக் கன்னி அனநடைக்குப் படிச்சந்தம் ஆக்கும் படம்உள வோநும் பரிசகத்தே. |
78 |
கொளு அவயவம் அரிதின் அண்ணல் தீட்டினும் இவையிவை தீட்டல் இயலா(து) என்றது. |
7. அவயவம் எழுதல் அரிதென விலக்கல்
யாழும் எழுதி எழில்முத்(து) எழுதி இருளின்மென்பூச் சூழும் எழுதியர் தொண்டையும் தீட்டியென் தொல்பிறவி ஏழும் எழுதா வகைசிதைத் தோன்புலி யூரிளமாம் போழும் எழுதிற்றொர் கொம்பருண் டேற்கொண்டு போதுகவே. |
79 |
கொளு அவயவம் ஆனவை இவைஇவை என்றது. |
8. உடம்படாது விலக்கல்
ஊர்வாய் ஒழிவாய் உயர்பெண்ணைத் திண்மடல் நின்குறிப்புச் சீர்வாய் சிலம்ப திருத்த இருந்திலம் ஈசாதில்லைக் கார்வாய் குழலிக்குன்ஆதர(வு) ஒதிக்கற் பித்துக்கண்டால் ஆர்வாய் தரின்அறி வார்பின்னைச் செய்க அறிந்தனவே. |
80 |
கொளு அடுபடை அண்ணல் அழிதுயர் ஒழிகென மடநடைத் தோழி மடல்வி லக்கியது. |
9. உடம்பட்டு விலக்கல்
பைந்நாண் அரவன் படுகடல் வாய்ப்படு நஞ்சமுதாம் மைந்நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்தபொன்இம் மொய்ந்நாண் முதுதிரை வாயான் அழுந்தினும் என்னின்முன்னும் இந்நாள் இதுமது வார்குழ லாட்(கு)என்கண் இன்னருளே. |
81 |
கொளு அரவரு நுண்ணிடை குரவரு கூந்தல் என் உள்ளக் கருத்து விள்ளாள் என்றது. |
மடல் திறம்முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பத்தாம் அதிகாரம் - எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - விலக்கல், அண்ணல், என்றது, அவயவம், அரிதென