முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.065.திருநின்றியூர்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.065.திருநின்றியூர்
7.065.திருநின்றியூர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இலட்சுமிவரதர்.
தேவியார் - உலகநாயகியம்மை.
665 |
திருவும் வண்மையுந் திண்டிற லரசுஞ் மருவு கோச்செங்க ணான்றனக் களித்த பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப் தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித் |
7.065.1 |
பெருகி வருகின்ற காவிரியாற்றின் நீர், கொணர்ந்து தள்ளிய பல மணிகளை, சிறுமகாரது பல குழுக்கள், விளையாட்டிற் சென்று எடுத்து, தெருக்களிலும், திண்ணைகளிலும், முற்றங்களிலும் குவிக்கின்ற, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, நீ, சிலந்தி செய்த செய்கைத் தொண்டினைக் கண்டு, அதன் மறுபிறப்பாய் வந்த கோச்செங்கட் சோழ நாயனார்க்கு, செல்வத்தையும், கொடைத் தன்மையையும், திண்ணிய ஆற்றலை உடைய அரசாட்சியையும் அளித்த செய்தியைக் கேட்டு, அடியேன் உனது மலர் போலும் திருவடியைப் புகலிடமாக அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
666 |
அணிகொ ளாடையம் பூணணி மாலை இணைகொள் ஏழெழு நூறிரும் பனுவல் கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ் |
7.065.2 |
திணை வரையறையைக் கொண்ட செவ்விய தமிழைப் பசிய கிளிகள் ஆராய்ந்து சொல்லுகின்ற, செல்வத்தையுடைய, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, உன்பால், பாலைக் கொணர்ந்து ஆட்டி, அழகினைக் கொண்ட ஆடை, அழகிய அணிகலம், சூடுகின்ற மாலை, திருவமுது என்னும் இவற்றைப் பெற்ற சண்டேசுர நாயனாரும், தனக்குத்தானே நிகராய் உள்ள பாடல்கள் நாலாயிரத்து தொள்ளாயிரத்தை அருளிச் செய்தவராகிய திருநாவுக்கரசரும், அம்பைக் கையிலே கொண்ட கண்ணப்ப நாயனாரும் பெற்ற, அன்பின் பயனாகிய இனிய திருவருளை விரும்பி, அடியேன் உனது திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
667 |
மொய்த்த சீர்முந்நூற் றறுபது வேலி ஒத்த பொன்மணிக் கலசங்க ளேந்தி பத்தி செய்தவப் பரசுரா மற்குப் சித்தர் வானவர் தானவர் வணங்குஞ் |
7.065.3 |
சித்தர், தேவர், அசுரர், ஆகியோர் வணங்குகின்ற, செல்வத்தையுடைய, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, உன்னிடத்து அன்பு செய்த பரசுராமன் உனக்கு மிக்க புகழையுடைய முந்நூறு வேதியரோடு, முந்நூற்றறுபது வேலிப் பரப்புள்ள நிலத்தை, என்றும் விளங்கும் 'திருநின்றியூர்' என்று பெயரிட்டு, ஏற்புடைய, பொன்னாலாகிய அழகிய கலசங்களைக் கொண்டு நீர் வார்த்து அளிக்க, அவனுக்கு உன் திருவடியை அளித்த முறைமையை அறிந்து, அடியேன், உனது திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
668 |
இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம் சுரபி பால்சொரிந் தாட்டிநின் பாதந் பரவி யுள்கிவன் பாசத்தை யறுத்துப் நிரவி நித்திலம் அத்தகு செம்பொன் |
7.065.4 |
மேலானவனே, நெற்பயிர்கள் முத்துக்களைப் பரப்பி, அம்முத்துக்களோடு ஒத்து மதிப்புடைய செம்பொன்போலும் நெற்களை அளிக்கின்ற திருநின்றியூரில் உள்ள இறைவனே, உன்னை, பசு ஒன்று, சூரியனது நீண்ட ஒளி தோன்றுவதற்கு முன்பே எழுந்து, தன் மடியாகிய கலசத்தை ஏந்திப் பால் சொரிந்து வழிபட்டு நின் திருவடியை அடைந்த செய்தியை உறுதிப்படக் கேட்டு, அடியேன், உனது திருவடியை நினைத்துத் துதித்து, பற்றுக்களை எல்லாம் விடுத்து வந்து அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
669 |
வந்தொர் இந்திரன் வழிபட மகிழ்ந்து சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச் சிந்து மாமணி யணிதிருப் பொதியிற் செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ் |
7.065.5 |
செவ்விய தண்ணிய சிறந்த தாமரை மலரின்கண் இருக்கும் திருமகள் வாழும், செல்வத்தை யுடைய, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, இந்திரன் ஒருவன், உன்னிடத்து வந்து உன்னை வழிபட, அதற்கு மகிழ்ந்து, அவனுக்கு, 'நீ, விண்ணுலகை ஆள்க' என்று சொல்லி வழங்கிய தலைமையையும், 'காலை, நண்பகல், மாலை' என்னும் மூன்று சந்திகளிலும், இலிங்க உருவத்தை நிறுவி, கலையுருவத்தை அமைத்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு, அருவிகள் மணிகளைச் சிதறுகின்ற, அழகிய திருப்பொதியில் மலையில் வீற்றிருக்க அருளிய பெருமையையும் அறிந்து, அடியேன், உனது திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
670 |
காது பொத்தரைக் கின்னரர் உழுவை கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக் வேதஞ் செய்தவர் எய்திய இன்பம் நீதி வேதியர் நிறைபுக ழுலகில் |
7.065.6 |
நீதியையுடைய அந்தணர்கள் நிறைந்திருத்தலால் உளதாகிய புகழ், உலகமுழுதும் விளங்குகின்ற, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, கேள்வியால் துளைக்கப்பட்ட செவியினையுடைய நால்வர் முனிவர்கள், 'கின்னரர், புலி, கடிக்கும் இயல்புடைய பாம்பு, பற்றுதற்கு அரிய சிங்கம், குற்றம் அற்ற பெரிய தவத்தவர் குழாம்' என்ற இவருடன் இருந்து கேட்ப, நீ, அழகிய ஆல் நிழலில் இருந்து, அறத்தின் உண்மைகளை எல்லாம் சொல்ல, அவற்றைக் கேட்டுப் பின்பு வேதங்களை இயற்றி அவர்கள் அடைந்த இன்பத்தினைக் கேட்டறிந்து, அடியேனும், உனது திருவடியிணையை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
671 |
கோடு நான்குடைக் குஞ்சரங் குலுங்க பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும் நீடு மாடங்கள் மாளிகை தோறு |
7.065.7 |
பெண் மயில்கள் போலவும், இளைய பெண் மான்கள் போலவும், இளைய கிளிகள் போலவும், பிறை போலும் நெற்றியையுடைய மகளிர், உயர்ந்த மாடங்களையுடைய மாளிகை தோறும் விளங்குகின்ற, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, நான்கு கொம்புகளையுடைய யானை, உன்முன் நின்று, தனது உடல், அன்பினால் நடுங்கத் துதித்தபொழுதே, முன்னை வடிவத்தையும், விண்ணுலகத்தை அடையும் பெருமையையும் பெற்ற தன்மையைக் கேட்டு அடியேன், உனது பொன்போலும் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 63 | 64 | 65 | 66 | 67 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநின்றியூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நின்றியூ, திருநின்றியூரில், இறைவனே, கொண்டருள், திருவடியை, அடைந்தேன், தென்றிரு, அடியேன், யடைந்தேன், செல்வத், போலவும், கேட்டு, திருநின்றியூர், இந்திரன், அறிந்து, அடைந்த, எழுந்து, கேட்டுப், மகிழ்ந்து, எல்லாம், கின்னரர், கேட்டுநின், இருந்து, விளங்குகின்ற, கடிக்கும், அவனுக்கு, பெருமையையும், மாளிகை, திருமகள், அருளிச், அளித்த, போலும், செவ்விய, கொணர்ந்து, வார்த்தை, திருமுறை, திருச்சிற்றம்பலம், கிளிகள், செல்வத்தையுடைய, டடைந்தேன், சித்தர், கலசங்க, மூன்று, என்னும், நாயனாரும், உன்னிடத்து