முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.051.திருவாரூர்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.051.திருவாரூர்
7.051.திருவாரூர்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. இது திருவொற்றியூரிற் சங்கிலிநாச்சியாருடன் இருக்கும்போது வீதிவிடங்கப்பெருமானுடைய திருவோலக்கதரிசன ஞாபகம்வர ஓதியருளிய பதிகம்.
சுவாமிபெயர் - வன்மீகநாதர்.
தேவியார் - அல்லியங்கோதையம்மை.
518 |
பத்திமையும் மடிமையையுங் பொத்தினநோ யதுஇதனைப் முத்தினைமா மணிதன்னை எத்தனைநாள் பிரிந்திருக்கேன் |
7.051.1 |
பாவியும். மூடனும் ஆகிய யான், என் அன்பையும், அடிமையையும் விட்டொழியும்படி, முத்தும், சிறந்த மாணிக்கமும், வயிரமும் போன்ற எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து எத்தனை நாள் இவ்விடத்திற்றானே இருப்பேன்! என்னை மூடியுள்ள நோயாகிய இவ்வுடம்பின் மெய்ம்மையை அறிந்துகொண்டேன்; ஆதலின் இங்கு இரேன்; விரையச் சென்று அவனை வணங்குவேன்.
519 |
ஐவணமாம் பகழியுடை செவ்வணமாந் திருநயனம் மையணவும் கண்டத்து எவ்வணம்நான் பிரிந்திருக்கேன் |
7.051.2 |
ஐந்து வகையான அம்புகளைப் பெற்ற, வெற்றியை யுடைய மன்மதன் சாம்பலாகுமாறு, செந்நிறமான அழகிய நெற்றிக் கண்ணைத் திறந்த சிவமுர்த்தியாகிய, கருமை பொருந்திய கண்டத்தையும், நீண்ட சடையினையும் உடைய, எங்கள் அரிய அமுதம் போன்ற எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து, நான் எவ்வாறு இவ்விடத் திற்றானே இருப்பேன்! இரேன்; விரையச்சென்று அவனை வணங்குவேன்.
520 |
சங்கலக்குந் தடங்கடல்வாய் அங்கலக்கண் தீர்த்துவிடம் இங்கலக்கும் உடற்பிறந்த எங்குலக்கப் பிரிந்திருக்கேன் |
7.051.3 |
வருத்துதலைச் செய்கின்ற உடலிற்பட்டு இவ்வுலகிற் பிறந்த அறிவில்லேனாகிய யான், தேவர், சங்குகள் விளக்குகின்ற பெரிய கடலிடத்துத் தோன்றிய ஆலகாலவிடம் தம்மைச் சுடுகையினாலே அடைக்கலமாக வந்து வணங்க, அப்பொழுதே அவரது துன்பத்தை நீக்கி, அவ்விடத்தை உண்டு, அவரை விரும்பிக் காத்த பெரியோனாகிய எனது திருவாரூர் இறைவனை அடைதல் இன்றிப் பிரிந்து எவ்விடத்து இறத்தற்பொருட்டு இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன்; விரையச் சென்று அவனை வணங்குவேன்.
521 |
இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப் அங்ஙனம்வந் தெனையாண்ட வெங்கனல்மா மேனியனை மான்மருவுங் கையானை என்ஆரூர் இறைவனையே |
7.051.4 |
இவ்வுலகில் வந்து, துன்பத்தைத் தருகின்ற பிறப்பிற் பிறந்து மயங்குவேனாகிய யான், அங்ஙனம் மயங்காதவாறு நான் பிறந்திருந்த ஊரிற்றானே வந்து என்னை அடிமையாக்கிக்கொண்ட அரிய மருந்தும், அமுதும் போல்பவனும், வெம்மையான நெருப்புப் போலும் சிறந்த திருமேனியை உடையவனும், மான் பொருந்திய கையை உடையவனும் ஆகிய எனது திருவாருர் இறைவனைப் பிரிந்து, நான் எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன்; விரையச் சென்று அவனை வணங்குவேன்.
522 |
செப்பரிய அயனொடுமால் சிந்தித்துந் தெரிவரிய அறியாதே யருவினையேன் இணையிலியை அணைவின்றி என்ஆரூர் இறைவனையே. |
7.051.5 |
நீக்குதற்கரிய வினையையுடையேனாகிய யான். சொல்லுதற்காய பெருமையையுடைய, 'பிரமதேவனும், திருமாலும்' என்னும் அவர்தாமும் நினைத்தற்கும், காண்பதற்கும் அரிய அத்தன்மைத்தாய பெரிய செல்வமாய் உள்ளவனும், பிறர் ஒருவரது குணமும் நிகர்த்தல் இல்லாத அருட்குணங்களை யுடையவனும்., பிறர் ஒருவரும் தனக்கு நிகரில்லாதவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை நினைத்தலும், அடைதலும் இன்றிப் பிரிந்து, எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன்; விரையச் சென்று அவனை வணங்குவேன்.
523 |
வன்னாக நாண்வரைவில் தன்னாகம் உறவாங்கிப் முன்னாக நினையாத தென்னாகப் பிரிந்திருக்கேன் |
7.051.6 |
வலிய பாம்பு நாணியும், மலை வில்லும், திருமால் அம்பும், அங்கியங் கடவுள் அம்பின் முனையுமாகத் தன் மார்பிற் பொருந்த வலித்து முப்புரத்தை எரித்த தன்மையை உடையவனாகிய எனது திருவாரூர் இறைவனை முன்பே நினைந்து போக முயலாத மூடனேனாகிய யான், அவனைப் பிரிந்து, என்னாவதற்கு இவ்வுடலைச் சுமந்து இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன்; விரையச் சென்று அவனை வணங்குவேன்.
524 |
வன்சயமா யடியான்மேல் முன்சயமார் பாதத்தான் மின்செயும்வார் சடையானை என்செயநான் பிரிந்திருக்கேன் |
7.051.7 |
பின்னிடாத வெற்றியையுடையவனாய்த் தன் அடியவன்மேல் வந்த கூற்றுவனை அவனது மார்பு பிளக்கும்படி வெற்றி பொருந்திய தனது திருவடியால் முன்பு உதைத்து, பின்பு எழுப்பிய மூர்த்தியும், மின்னலினது ஒளியை உண்டாக்குகின்ற நீண்ட சடையையும், விடையையும் உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை அடைதல் இன்றிப்பிரிந்து, நான், என் செய்வதற்கு இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன்; விரையச் சென்று அவனை வணங்குவேன்.
525 |
முன்னெறிவா னவர்கூடித் அந்நெறியை யமராதொழும் செந்நெறியைத் தேவர்குலக் என்னறிவான் பிரிந்திருக்கேன் |
7.051.8 |
பிற உயிர்கட்கு அவை செல்லுமாறு நிற்கும் நெறியாய் உள்ள பிரமனும், மாயோனும் கூடி வணங்கிப் போற்றுகின்ற முழுமுதற் பொருளானவனும், அப்பொருளை அடையும் நெறியாய் உள்ளவனும், ஏனைய தேவரும் வணங்கும் தலைவனும், எல்லாத் தேவருள்ளும் சிறந்த தேவனும், தன் அடியார்களுக்குச் செவ்விய நெறியாய் விளங்குபவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து மறந்து, நான், எதனை அறிந்து அனுபவித்தற்பொருட்டு இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன்; விரையச் சென்று அவனை வணங்குவேன்.
526 |
கற்றுளவான் கனியாய உற்றுளனாம் ஒருவனைமுன் பெற்றுளனாம் பெருமையனைப் டெற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன் |
7.051.9 |
மெய்ந்நூல்களைக் கற்று நினைக்குமிடத்துச் சிறந்த கனிபோல இனிக்கின்ற, கண்ணையுடைய நெற்றியையுடையவனும், என் உள்ளத்தில் நிரம்பப் பொருந்தியுள்ளவனாகிய ஒப்பற்றவனும், முன்பு இருவராகிய மாலும் அயனும் நினைந்து நன்கு போற்றப் பெற்ற பெருமையை உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை, அவன் அடியேனாகிய யான் எனது ஒழுக்கத்தைப் பெரிதும் நீங்கிப் பிரிந்து, எதன்பொருட்டு, இறவாது உள்ளேனாய், இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன் விரையச் சென்று அவனை வணங்குவேன்.
527 |
ஏழிசையாய் இசைப்பயனாய் தோழனுமாய் யான்செய்யுந் மாழையொண்கண் பரவையைத் ஏழையேன் பிரிந்திருக்கேன் |
7.051.10 |
ஏழிசைகளைப் போன்றும், அவ்விசைகளின் பயனாகிய பண்களைப் போன்றும், இனிய அமுதத்தைப் போன்றும் இன்பத்தைத் தந்து, அதன்மேல் என்னுடைய தோழனும் ஆகி, யான் செய்யும் குற்றங்களுக்கு உடன்பட்டு, மாவடுவின் வகிர்போலும், ஒளி பொருந்திய கண்களையுடைய பரவையை எனக்கு ஈந்து என்னை அடிமைகொண்டவனாகிய எனது திருவாரூர் இறைவனை, அறிவில்லாத எளியேன் பிரிந்து இவ்விடத்திற்றானே இருப்பேனோ! இரேன்; விரையச் சென்று அவனை வணங்குவேன்.
528 |
வங்கமலி கடல்நஞ்சை நுங்கிஅமு தவர்க்கருளி சங்கிலியோ டெனைப்புணர்த்த எங்குலக்கப் பிரிந்திருக்கேன் |
7.051.11 |
தேவர்கள் பிழைத்தற்பொருட்டு, மரக்கலங்கள் நிறைந்த கடலில் தோன்றிய நஞ்சினைத் தான் உண்டு, அமுதத்தை அவர்கட்கு அருளினவனும், சிறியேனை ஒரு பொருளாகவைத்து என் வேண்டுகோளுக்கு இரங்கி, என்னைச் சங்கிலியோடு கூட்டுவித்த மெய்ப்பொருளாய் உள்ளவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனைப் பொய்யனாகிய யான் எங்கு இறப்பதற்குப் பிரிந்து இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன்; விரையச் சென்று அவனை வணங்குவேன்
529 |
பேரூரு மதகரியின் சீரூருந் திருவாரூர்ச் ஆரூரன் அடித்தொண்டன் ஊரூர னிவைவல்லா |
7.051.12 |
செயற்கரிய செய்த பெரியார் தம் புகழ்மிக்கு விளங்கும் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது திருவடியைச் சென்று சேரும் திறத்தையே விரும்பி, புகழ்மிகுந்த மதயானையின் தோலையுடைய அவனை, அவன் அடித்தொண்டனாகிய, அவ்வுலகின்கண் எங்கும் செல்கின்ற நம்பியாரூரன் சொல்லிய இப்பாடல்களைப் பாடவல்லவர், உலகர் எல்லார்க்கும் மேலானவராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 49 | 50 | 51 | 52 | 53 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவாரூர், இறைவனையே, என்ஆரூர், பிரிந்திருக்கேன், இவ்விடத்திற்றானே, இருப்பேன், விரையச், பிரிந்து, வணங்குவேன், சென்று, இறைவனை, இறைவனைப், உடையவனும், பொருந்திய, சிறந்த, போன்றும், நெறியாய், எவ்வாறு, உள்ளவனும், நினைந்து, முன்பு, என்னுடைய, தோன்றிய, திருச்சிற்றம்பலம், மூர்க்கனேன், திருமுறை, எங்குலக்கப், அடைதல், இன்றிப்