முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.047.ஊர்த்தொகை
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.047.ஊர்த்தொகை
7.047.ஊர்த்தொகை
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
478 |
காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே பாட்டூர் பலரும் பரவப் படுவாய் மாட்டூ ரறவா மறவா துன்னைப் |
7.047.1 |
காட்டூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற கடலும், மலையும், தளிரும், கொல்லுந் தன்மையுடைய சிங்க ஏறும் போல்பவனே, பாட்டினை மிகவுணர்ந்தவர் பலராலும், அப்பாட்டுக்களால் பரவப்படுபவனே, எருதை ஊர்கின்ற அறமுதல்வனே, அடியேன் உன்னை என்றும் மறவாது பாடுமாறு திருவருள்செய்யாய்.
479 |
கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய் மங்குற் றிரிவாய் வானோர் தலைவா சங்கக் குழையார் செவியா அழகா கங்குற் புறங்காட் டாடீ அடியார் |
7.047.2 |
கொங்கு நாட்டில் பாலை நிலத்தில் உள்ள குரக்குத்தளி முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, மூப்படையாதவனே, வானத்தில் திரிபவனே, தேவர்க்குத் தலைவனே, மணவாளக்கோலம் உடையவனே, சங்கக்குழை பொருந்திய காதினையுடையவனே, அழகனே, எஞ்ஞான்றும் அவியாது எரிகின்ற நெருப்பைக் கையில் ஏந்திக்கொண்டு, இரவில், புறங்காட்டில் ஆடுகின்றவனே, உன் அடியாரது மனக் கவலையைப் போக்கியருளாய்.
480 |
நிறைக்காட் டானே நெஞ்சத் தானே மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் மறைக்காட் டானேதிருமாந் துறையாய் இறைக்காட் டானே எங்கட் குன்னை |
7.047.3 |
நின்றியூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, நெறிபிறழாமையையுடைய, சான்றானவனே, அடியவர்கள் நெஞ்சத்தில் இருப்பவனே, அவர்கட்குச் சிறிதும் துன்பத்தைக் காட்டாதவனே, நீர் பொருந்திய சடையை யுடையவனே, நெருப்புப் பொருந்திய கையை யுடையவனே, எம்தந்தைக்குத் தந்தையே, நீ எங்கட்டு உன்னைச் சிறிதும் புலப்படுத்தாதவனோ?
481 |
ஆரூர் அத்தா ஐயாற் றமுதே காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் பேரூர் உறைவாய்பட்டிப் பெருமான் பாரூர் பலரும் பரவப் படுவாய் |
7.047.4 |
ஆரூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனே, அமுதம் போல்பவனே, பிறவாத நெறியை உடையவனே, நீயே இந்நிலவுலகில் நிறைந்துள்ள பலராலும் பரவப்படுபவன்.
482 |
மருகல் லுறைவாய் மாகா ளத்தாய் அருகற் பிணிநின் னடியார் மேல கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே பருகப் பணியாய் அடியார்க் குன்னைப் |
7.047.5 |
மருகல் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே. சந்திரனைச் சடையில் அணிந்தவனே, கருகிய கண்டத்தை யுடையவனே, கரும்புபோல்பவனே, கட்டிபோல்பவனே, பவளம் போலும் வடிவத்தையுடையவனே, உன் அடியார்மேல் வருகின்ற, மெலிதற் காரணமான நோய்கள் விலகிச் செல்லவும், உன்னை அடைந்து இன்புறவும் அவர்கட்கு அருள் செய்யாய்.
483 |
தாங்கூர் பிணிநின் னடியார் மேல வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் பாங்கூர் பலிதேர் பரனே பரமா |
7.047.6 |
வேங்கூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, இடபம் பொருந்திய கொடியையுடையவனே, நம்பனே, பக்கங்களில் உள்ள ஊர்களிற் சென்று பிச்சை தேடுகின்ற வேறுபட்ட தன்மையனே, மேலானவனே, உன் அடியார்மேல் உள்ள பொறுத்தற்கரிய நோய்கள் விலகிச் செல்ல அருள்புரியாய்.
484 |
தேனைக் காவல் கொண்டு விண்ட வானைக் காவல் கொண்டு நின்றார் ஆனைக் காவில் அரனே பரனே ஊனைக் காவல் கைவிட் டுன்னை |
7.047.7 |
'ஆனைக்கா, அண்ணாமலை' என்னும் தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, தேனைப் பாதுகாத்தலை மேற்கொண்டு மலர்ந்த கொன்றைப் பூவினால் ஆகிய வளப்பமான மாலையை அணிந்தவனே, வானுலகத்தைக் காத்தலை மேற்கொண்டு நிற்கின்ற தேவர்களால் அறியப்படாத நிலையை உடையவனே, அழித்தல் தொழிலை உடையவனே, மேலானவனே, உடலோம்புதலை விட்டு, உன்னை விரும்பித் தொழுகின்றவர்களே, உன்னை உணர்வார்கள்.
485 |
துருத்திச் சுடரே நெய்த்தா னத்தாய் திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை அருத்தித் துன்னை அடைந்தார் வினைகள் |
7.047.8 |
துருத்தி முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, ஒளிவடிவானவனே, சொல்லின்கண் உள்ளவனே, கல்லால மர நிழலில் இருப்பவனே, வெயிலாகியும், காற்றாகியும், மற்றும் பலவாகியும் நிற்பவனே, என் மனத்தை மேன்மேல் திருந்தச்செய்து, அதனை இடமாகக் கொண்டவனே, உன்னை அன்புசெய்து அடைந்தவர்களது வினைகள் நீங்க அவர்கட்கு அருள்செய்யாய்.
486 | புலியூர்ச் சிற்றம் பலத்தாய் புகலூர்ப் பொலிசேர் புரமூன் றெரியச் செற்ற வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான் கலிசேர் புறவிற் கடவூ ராளீ |
7.047.9 |
புலியூர்ச் சிற்றம்பலம் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, ஞான வடிவினனே பழமையான சிவலோகத்தை உடையவனே, பொலிவு பொருந்திய மூன்று ஊர்கள் எரிந்தொழியுமாறு அழித்த, புரித்த, புல்லிய சடையையுடையவனே, வலிமை பொருந்திய அரக்கனாகிய இராவணனது பெரிய இருபது கைகளையும் நெரித்த, பிறையைச் சூடினவனே, உன்னைக் கண்ணாற் காண அருளாய்.
487 |
கைம்மா உரிவை அம்மான் காக்கும் மைம்மாந் தடங்கண் மதுர மன்ன/B> தம்மான் ஊரன் சடையன் சிறுவன் செம்மாந் திருந்து திருவாய் திறப்பார் |
7.047.10 |
மை தீட்டிய, மாவடுப்போலும் பெரிய கண்களையும், இனிமை நிலைபெற்ற அழகிய சொல்லையும், இளமையையும் உடையவளாகிய சிங்கடிக்குத் தந்தையும், சடையனாருக்கு மகனும், யானைத் தோலையுடைய பெருமானுக்கு அடியனும் ஆகிய நம்பியாரூரனது இத்தமிழ்மாலையை, அப்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற பல தலங்களையும் நினைந்து கவலையற்றிருந்து, சிறந்த வாயாற் பாடுவோர், சிவலோகத் திருப்பவரேயாவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 45 | 46 | 47 | 48 | 49 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஊர்த்தொகை - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - தலங்களில், முதலிய, எழுந்தருளியிருப்பவனே, பொருந்திய, உடையவனே, அருளாயே, எழுந்தருளியிருக்கின்ற, யுடையவனே, விலகிச், அவர்கட்கு, அடியார்மேல், அணிந்தவனே, வேங்கூர், நோய்கள், மேற்கொண்டு, புலியூர்ச், வினைகள், மேலானவனே, நகராய், கொண்டு, னடியார், உறைவாய், நெறியானே, போல்பவனே, பலராலும், படுவாய், பலரும், திருமுறை, திருச்சிற்றம்பலம், இருப்பவனே, சிறிதும், மருகல், சடையானே, ஊர்த்தொகை, புறவிற், அம்மானே, பிணிநின்