முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.041.திருக்கச்சூர் ஆலக்கோயில்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.041.திருக்கச்சூர் ஆலக்கோயில்
7.041.திருக்கச்சூர் ஆலக்கோயில்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இந்தத் தலத்தில் பரமசிவம் அக்கிராகாரத்தில் அன்னம் பிட்சை வாங்கி வந்தளிக்க அருந்திப் பசிதீர்ந்து துதிசெய்த பதிகம்.
சுவாமிபெயர் - தினம்விருந்திட்டநாதர்.
தேவியார் - கன்னியுமையம்மை.
415 |
முதுவாய் ஓரி கதற முதுகாட் மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் அதுவே யாமா றிதுவோ கச்சூர் |
7.041.1 |
பெரிய வாயை உடைய நரிகள் கூப்பிடப் புறங்காட்டில் தீயை ஏந்தி ஆடுதலைச் செய்பவனே, கொன்றையினது தேன் ஒழுகுகின்ற புதிய பூவைச் சூடுகின்ற, மலையான் மகள் மணவாளனே, திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீ சென்று, முரிந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் உண் அடியவர் கவலைகொள்ளாரோ?
416 |
கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக் றுச்சம் போதா ஊரூர் திரியக் இச்சை யறியோம் எங்கள் பெருமான் அச்ச மில்லாக் கச்சூர் வடபால் |
7.041.2 |
எங்கள் பெருமானே, இருவகை ஏழ் பிறப்புக் களிலும் என்னை ஆளாகக் கொண்டு ஆள்பவனே, திருக்கச்சூரின் வட பகுதிக்கண் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற அச்சம் இல்லாத பெருமானே, நீ, அழகிய பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி, கழலும் சிலம்பும் காலில் நின்று ஒலிக்க, பிச்சைக் கென்று, ஞாயிறு உச்சம் ஆகவும் ஊர்தோறும் திரிதலைக் கண்டால், உன் அடியவர் மனம் உருகமாட்டாரோ! உன் விருப்பம் இன்னது என்பதனை யாம் அறிய மாட்டோம்.
417 |
சாலக் கோயில் உளநின் கோயில் மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன் கோலக் கோயில் குறையாக் கோயில் ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ் |
7.041.3 |
தேவரும் அறிய ஒண்ணாத நிலையையுடையவனே, அழகுடையதும், குறைவில்லாததும் ஆகிய, குளிர்ந்த அழகிய திருக்கச்சூர் வடபால் ஆலக்கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற, கல்லால் நிழற்கீழ் நால்வர் முனிவர்க்கு அறங்களை உரைத்த பெருமானே, உனது கோயிலாகப் பல கோயில்கள் இம் மண்ணில் உள்ளன; அவற்றை யெல்லாம் என்தலைமேல் வைத்துப் புகழ்ந்து, மயக்கமுந் தீர்ந்தேன்; வினையையும் ஓட்டினேன்; இங்குள்ள கோயிலைப் புகழ்ந்து, நீ இரந்து சோறிடப்பெற்றேன்.
418 |
விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய் கடையும் புடைசூழ் மணிமண் டபமுங் புடையும் பொழிலும் புனலுந் தழுவிப் அடையுங் கழனிப் பழனக் கச்சூர் |
7.041.4 |
இடப வாகனத்தையும், இடபக்கொடியையும், சடை முடியையும் உடையவனே, திருமேனியினது மின்னல்போலும் ஒளியையுடையவனே, எங்கும், அழகியவாயில்களையும், நிறைந்த மணிமண்டபங்களையும், அழிவில்லாத மாடங்களையும் கொண்டு, சூழ உள்ள இடங்களிலும் சோலைகளையும், நீர் நிலைகளையும் பெற்று விளங்குதலால், தாமரைமேல் இருக்கும் பெருமை வாய்ந்த திருமகள் நீங்காது பற்றி உறைகின்ற, வயல்களையுடைய பண்ணை சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள, ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, இஃது உன்கருணை இருந்தவாறேயோ!
419 |
மேலை விதியே விதியின் பயனே காலை யெழுந்து தொழுவார் தங்கள் மாலை மதியே மலைமேல் மருந்தே ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் |
7.041.5 |
மேம்பட்டதாகிய அறநெறியாயும், அதன் பயனாயும் உள்ளவனே, பகைவரது திரிபுரங்களை எரித்தவனே,காலையில் எழுந்து உன்னை வணங்குவாரது மனக்கவலையை அடியோடு நீக்குபவனே, நீலகண்டத்தை யுடையவனே, மாலைக் காலத்தில் தோன்றும் சந்திரன்போல்பவனே, மலைமேல் இருக்கின்ற மருந்து போல்பவனே, வயல்கள் நிறைந்த, கரும்பாலையை உடைய இடங்களைக் கொண்ட பண்ணையை உடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, அடியேன் உன்னை மறவேன்.
420 |
பிறவாய் இறவாய் பேணாய் மூவாய் துறவாய் மறவாய் சுடுகா டென்றும் ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் அறவே யொழியாய் கச்சூர் வடபால் |
7.041.6 |
பிறவாதவனே, இறவாதவனே, யாதொன்றையும் விரும்பாதவனே, மூப்படையாதவனே. இடபத்தை ஏறிப் பேயாற் சூழப்படுதலை விடாதவனே, மறதி இல்லாதவனே, என்றும் சுடுகாட்டையே இடமாகக்கொண்டு நடனம் ஆடுபவனே, திருக்கச்சூரில் வடபால் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீ, உடைந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால், உன் அடியவர் மனம் வருந்தமாட்டாரோ? இதனை அறவே ஒழி.
421 |
பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் மெய்யே எங்கள் பெருமான் உன்னை மையார் தடங்கண் மடந்தை பங்கா ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் |
7.041.7 |
மை பொருந்திய பெரிய கண்களையுடைய மங்கை பங்காளனே, கங்கையையும், ஆத்திப் பூவையும், சந்திரனையும் சடையில் வைத்துள்ள தலைவனே, செம்மைநிறம் உடையவனே, வெண்மைநிறம் உடையவனே, திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, உன்னைப் புகழ்கின்றவர்கள் பொய்யாகவே புகழ்ந்தாலும், அதனையும் மெய்யாகவே கொண்டு அருள்செய்கின்றவனே, எங்கள் பெருமானாகிய உன்னை மெய்யாகவே நினைக்கின்ற அடியவரை நீ நினை.
422 |
ஊனைப் பெருக்கி உன்னை நினையா கானக் கொன்றை கமழ மலருங் மானைப் புரையு மடமென் னோக்கி ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய் |
7.041.8 |
காட்டில் உள்ள கொன்றை மலர், மணங் கமழ மலரும் புதுமணம் வீசுதலை உடையவனே, மானை நிகர்த்த இளைய மெல்லிய பார்வையை யுடையவளாகிய உமையவள் அஞ்சும்படி போர்த்துள்ள யானைத்தோலை உடையவனே, உயிர்களுக்கு ஞானக்கண்ணாய் விளங்குபவனே, திருக்கச்சூரில் உள்ளவனே, ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, கீழ்மையுடையேனும், அறிவில்லாதேனும் ஆகிய யான், உடம்பை வளர்க்கும் செயலில் நின்று, உன்னை நினையாது விட்டேன்.
423 |
காதல் செய்து களித்துப் பிதற்றிக் ஆதல் செய்யும் அடியார் இருக்க ஓதக் கண்டேன் உன்னை மறவேன் ஆதற் கழனிப் பழனக் கச் சூர் |
7.041.9 |
உமையம்மைக்குக் கணவனே, உனது தன்மைகளைப் பெரியோர் சொல்ல அறிந்து உன்னை மறவாதேனாகிய என்னையும் அடியாருள் வைத்து ஆள்கின்றவனே, விளைதலையுடைய கழனிகளையுடைய பண்ணையையுடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, உன்பால் பேரன்புகொண்டு, அதனால் இன்பம்மீதூரப்பெற்று, தம்மையறியாது வரும் சொற்களைச் சொல்லி, மணம்பொருந்திய மலர்களைத் தூவி உன்னைப் போற்றி உயர்வடைகின்ற அடியவர்கள் உனக்கு வேண்டும் பணிகளைச் செய்ய அவாவியிருக்க, நீ சென்று பிச்சை ஏற்பது அழகிதாமோ? ஆகாதன்றே?
424 |
அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர் உன்ன முன்னு மனத்தா ரூரன் மன்னு புலவன் வயல்நா வலர்கோன் பன்னு தமிழ்நூல் மாலை வல்லா |
7.041.10 |
அன்னங்கள் நிலைத்து வாழும் வயல்கள் சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவனது கருணையையே நினைகின்ற மனத்தினால், 'ஆரூரன்' என்று, திருவாரூர் இறைவனது பெயரைத் தலையில் வைத்துள்ள மிக்க புலமையுடையவனும், செவ்விய சொல்லால் அமைந்த பாடல்களைப் பாடவல்ல நாவன்மையுடையவனும், வயல்களை உடைய திருநாவலூருக்குத் தலைவனும் வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய, தமிழ் இலக்கணம் அமைந்த இப்பாமாலையைப் பாடவல்லவர், என் தலைமேல் எப்பொழுதும் இருத்தற்கு உரியராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 39 | 40 | 41 | 42 | 43 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கச்சூர் ஆலக்கோயில் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கோயில், பெருமானே, அம்மானே, கச்சூர், திருக்கச்சூரில், எழுந்தருளியிருக்கின்ற, ஆலக்கோயிலில், கண்டால், உடையவனே, கொண்டு, வடபால், எங்கள், அடியார், பிச்சை, திருக்கச்சூர், கழனிப், உன்னைப், அடியவர், கோயிலில், ஆலக்கோயில், நிறைந்த, அமைந்த, நிழற்கீழ், புகழ்ந்து, சூழ்ந்த, மலைமேல், மெய்யாகவே, மறவேன், வயல்கள், கல்லால், கொன்றை, உள்ளவனே, வைத்துள்ள, நின்று, வாயையுடைய, ஓட்டில், சென்று, மலையான், கொள்ளக், தலையிற், ஏற்றலைக், உருகாரே, திருமுறை, தலைமேற், திருச்சிற்றம்பலம், அன்னம், பெருமான், எனையாள்வாய், தீர்ந்தேன்