முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.092.திருக்கழுக்குன்றம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.092.திருக்கழுக்குன்றம்
6.092.திருக்கழுக்குன்றம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதகிரீசுவரர்.
தேவியார் - பெண்ணினல்லாளம்மை.
2993 | மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப் காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக் |
6.092.1 |
மூவிலை வேலாகிய சூலத்தைப் பிடித்த கையினனும், அழகிய கடவுளும், பிணமுதுகாட்டை உடையவனும், எல்லாவற்றிற்கும் அடியானவனும், தேவர்களுடைய அரசனும், ஆலகால விடத்தை மகிழ்ந்துண்ட தலைவனும், தாமரைமேல் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் வணங்குதற்கு நெருங்க முடியாத பெருமானும், புனிதனும், எல்லாவற்றையும் காப்பவனும், கழுக்குன்றில் அமர்ந்தவனும் ஆகிய கற்பகத்தை நான் கண்ணாரக்கண்டேன்.
2994 | பல்லாடு தலைசடைமே லுடையான் தன்னைப் சொல்லோடு பொருளனைத்து மானான் தன்னைச் அல்லாத காலனைமுன் னடர்த்தான் தன்னை கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக் |
6.092.2 |
பற்கள் வெளியே தோன்றுகின்ற வெண் தலையைச் சடைமேல் தரித்தவனும், பாயும் புலியை உரித்துக்கொண்ட தோலாகிய உடையினனும், சிறந்த ஆறு குணங்களை உடையவனும், சொற்களும் பொருள்கள் எல்லாமும் ஆனவனும், என்புஅணி நீங்கப்பெறாத தோற்றத்துடன் ஒளிவிட்டுத் திகழ்பவனும், முறையல்லாத செயலை மேற்கொண்டகாலனை முன் ஒறுத்தவனும், ஆலின் கீழ் இருந்தவனும், அமுதமானவனும், கல்லாடை புனைந்தருளும் காபாலியும் ஆகிய கற்பகத்தை நான் கண்ணாரக் கண்டேன்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 90 | 91 | 92 | 93 | 94 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கழுக்குன்றம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கண்ணாரக், கண்டேன், கற்பகத்தை, உடையவனும், நான்முகனும், திருமுறை, திருச்சிற்றம்பலம், திருக்கழுக்குன்றம்