முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.081.திருக்கோடிகா
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.081.திருக்கோடிகா
6.081.திருக்கோடிகா
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோடீசுவரர்.
தேவியார் - வடிவாம்பிகையம்மை.
2890 | கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய் மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய் விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய் கொண்டலஞ்சேர் கண்டத்தெங் கூத்தன் கண்டாய் |
6.081.1 |
திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே, நெற்றியிடத்துக் கண் சேர்ந்த இளங்காளையாய், பக்கமலைகளான மதில்கள் சூழ்ந்த கந்தமாதனத்துறைவானாய், பலவகைப் புவனங்களிலும் சென்று பிறத்தற்குக் காரணமாகிய மயக்கத்தை அறுக்கும் மருந்தாய், மதிலாற் சூழப்பட்ட காஞ்சி மாநகரத்து ஏகம்பத்தைமேவியவனாய், தேவருலகிற் சென்று எறிக்கும் விளக்கொளியாய், மீயச்சூரில் நிலைத்து நிற்கும் வேறுபடு தன்மையனாய், மேகத்தினது அழகு சேர்ந்தகண்டத்தனாய் எம் கூத்தனாய் விளங்குவான் ஆவான்.
2891 | வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய் பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய் செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய் கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய் |
6.081.2 |
திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே வண்டுகள் மொய்க்கும்பூக்களணிந்த குழலையுடைய உமாதேவியின் பாகனாய், திருமறைக் காட்டில் வாழும் அழகினனாய், பண்டு செய்த வினையான் வரும் துன்பத்தைத் தீர்ப்பவனாய், வீட்டுலக வழியை யுணர்த்தும் பரமனாய், செண்டு கொண்டு ஆடும் ஆட்டம் போலஎவ்வகை வருத்தமுமின்றிப் பகைவர் புரங்களை அழித்தவனாய், திருவாரூர் மூலட்டானத்தினனாய் விளங்குவான் ஆவான்.
2892 | அலையார்ந்த புனற்கங்கைச் கடையான் கண்டாய் மலையார்ந்த மடமங்கை பங்கன் கண்டாய் இலையார்ந்த திரிசூலப் படையான் கண்டாய் கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய் |
6.081.3 |
திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே, அலைகளுடன் கூடிய நீரையுடையகங்கை தங்கும் சடையனாய், அடியார்களுக்கு ஆரமுதாய், மலையில் தோன்றிவளர்ந்த இளமங்கை பார்வதியின் பங்கனாய், வானோர்தம் முடிக்கணியாய்த்தன் திருவடிகளைத்தந்து நின்றவனாய், இலைபோன்ற திரிசூலப்படையினனாய், ஏழுலகுமாய் வியாபித்த எந்தையாய், கொலைத் தொழிலிற் பழகிய யானையது தோலைப் போர்த்துக் கொண்டவனாய் விளங்குவான் ஆவான்.
2893 | மற்றாருந் தன்னொப்பா ரில்லான் கண்டாய் புற்றா டரவணிந்த புனிதன் கண்டாய் அற்றார்கட் கற்றானாய் நின்றான் கண்டாய் குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தன் கண்டாய் |
6.081.4 |
திருக்கோடிகாவில் விரும்பி உறையும் அழகனே தனக்கு ஒப்பார் யாரும் இலனாய், மயிலாடுதுறையைத் தனக்குப் பொருந்திய இடமாகக் கொண்டு மகிழ்ந்தவனாய், புற்றில் வாழ் அரவுகளை அணிந்த புனிதனாய், பூந்துருத்தியில் பொய்யிலியாய், பற்றற்ற அடியார்க்கு மறைதலின்றி வெளிப்பட்டு நிற்பானாய், ஐயாறு அகலாத ஐயனாய், குற்றாலத்து விரும்பி உறையுங் கூத்தனாய் விளங்குவான் ஆவான்.
2894 | வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய் போரார்ந்த மால்விடையொன் றூர்வான் கண்டாய் நீரார்ந்த நிமிர்சடையொன் றுடையான் கண்டாய் கூரார்ந்த மூவிலைவேற் படையான் கண்டாய் |
6.081.5 |
திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அடிகளே கச்சுப் பொருந்திய அழகிய முலையாளின் பங்கனாய், மாற்பேற்றைத் தனக்குரிய இடமாகக் கொண்டு மகிழ்ந்தானாய், போர்ச் செயலில் பழகிய பெரிய விடை ஒன்றை ஊர்தியாக உடையானாய், புகலூரை நீங்காத புனிதனாய், கங்கைபொருந்திய நீண்ட ஒப்பற்ற சடையை உடையானாய், நினைக்கும் அடியாருடைய வினைச்சுமையை இறக்கிவைப்பானாய், கூர்மை பொருந்திய மூவிலை வேற்படையை உடையானாய் விளங்குவான் ஆவான்.
2895 | கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய் படிமலிந்த பல்பிறவி யறுப்பான் கண்டாய் அடிமலிந்த சிலம்பலம்பத் திரிவான் கண்டாய் கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய் |
6.081.6 |
திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே! மணம் கமழும் கொன்றை மலரை அணிந்து விளங்கும் சடையனாய், கண்ணை அப்பிய செயற்கு விண்ணைப் பொருந்துதலை ஈடாகக் கொடுத்தானாய், உலகில் நிறைந்த பல பிறவிகளிலும் பிறத்தலை அறுப்பானாய், பற்றற்ற அடியார்க்குத் துணை நின்றானாய், திருவடிகளில் தங்கிய சிலம்பு மிக்கு ஒலிப்பத் திரிவானாய், தேவர் கூட்டம் வணங்கிப் பரவும் தலைவனாய், மிகுதியான கொடிகள் கட்டப்பட்ட மதில்களையுடைய தில்லையில் கூத்தனாய் விளங்குவான் ஆவான்.
2896 | உழையாடு கரதலமொன் றுடையான் கண்டாய் கழையாடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய் இழையாடும் எண்புயத்த இறைவன் கண்டாய் குழையாட நடமாடுங் கூத்தன் கண்டாய் |
6.081.7 |
திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே, மான்கன்று பொருந்திய தொருகரதலத்தனாய், ஒற்றியூரைப் பொருந்தி நிற்கும் இடமாக உடையானாய், மூங்கிலசையும் கழுக்குன்றில் அமர்ந்தானாய், காளத்திக்கண் திகழும்கற்பகமாய், பூணூல் கிடந்தசையும் தோள்கள் எட்டுடைய இறைவனாய், என்நெஞ்சைவிட்டு நீங்கா எந்தலைவனாய், காதணி ஆட நடன மாடுங் கூத்தனாய் விளங்குவான் ஆவான்.
2897 | படமாடு பன்னகக்கச் சசைத்தான் கண்டாய் நடமாடி யேழுலகுந் திரிவான் கண்டாய் கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய் குடமாடி யிடமாகக் கொண்டான் கண்டாய் |
6.081.8 |
திருக்கோடிகாவில் விரும்புயுறையும் அழகனே படமெடுத்தாடும் பாம்பினைக் கச்சாகக் கட்டியவனாய், பராய்த் துறையிலும் பாசூரிலும் பொருந்தியவனாய், ஏழுலகுஞ் சென்று ஆங்காங்கே நடனமாடுவானாய், நான் மறையின் பொருளினனாய், எல்லார்க்கும் தலைவனாய் (நாததத்துவனாய்) மதநீர் ஒழுகுங் களிற்றினை உரித்த வீரனாய், கயிலை மலையில் விரும்பி உறைவானாய், குடமாடியாம் திருமாலை இடப்பாகமாகக் கொண்டானாய் விளங்குவான் ஆவான்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 79 | 80 | 81 | 82 | 83 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோடிகா - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருக்கோடிகாவில், அமர்ந்துறையுங், விளங்குவான், குழகன், கண்டாய்கோடிகா, விரும்பியுறையும், கண்டாய், நின்றான், கூத்தன், பொருந்திய, உடையானாய், விரும்பி, கொண்டு, கூத்தனாய், சென்று, திரிவான், பொய்யிலியாய், தலைவனாய், இடமாகக், பற்றற்ற, றுடையான், புனிதனாய், புனிதன், சடையனாய், நிற்கும், திருச்சிற்றம்பலம், மேயான், விளக்கொளியாய், திருமுறை, திருக்கோடிகா, பங்கனாய், மலையில், படையான், பங்கன், மகிழ்ந்தான்