முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.060.திருக்கற்குடி
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.060.திருக்கற்குடி
6.060.திருக்கற்குடி
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முத்தீசர்.
தேவியார் - அஞ்சனாட்சியம்மை.
2686 | மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி றார்த்தவனை அக்கரவ மார மாக டேத்தவனை யிறுவரையில் தேனை ஏனோர்க் காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக் |
6.060.1 |
தேவர்களுக்கு எல்லாம் மூத்தவனாய், மூப்படையாத திருமேனியை உடைய முதல்வனாய், இடுப்பில் கொடிய பாம்பைச் சுற்றியவனாய், எலும்புகளையும், பாம்புகளையும் மாலையாக அணிந்தவனாய், அடியவர்களால் பணிந்து அன்போடு தோத்திரிக்கப்படுபவனாய், பெரிய மலையில் உள்ள தேன் போன்றவனாய், தேவர்களுக்கு இனிய அமுதம் வழங்கியவனாய், துயரங்களில் இருந்து எல்லோரையும் காத்தவனாய், கற்பகம் போன்றவனாய்க் கற்குடியில் மேம்பட்டவனாய் உள்ள பெருமானை அடியேன் கண்ணாரக் கண்டேன்.
2687 | செய்யானை வெளியானைக் கரியான் தன்னைத் ஐயானை நொய்யானைச் சீரி யானை மெய்யானைப் பொய்யாது மில்லான் தன்னை கையானைக் கற்குடியில் விழுமி யானைக் |
6.060.2 |
செம்மை, வெண்மை, கருமை என்ற நிறங்களை உடையவனாய், பிரமனாய், பெருந்திசையும் பரவியவனாய், அழகியவனாய், நன்மையனாய், புகழுடையவனாய், அண்மையில் உள்ளவனாய்த் தீயவர்களுக்குத் தொலைவில் இருப்பவனாய், பஞ்ச கவ்வியத்தில் நீராடும் திருமேனியனாய், பொய்யேதும் இல்லாதவனாய், காளை வாகனனாய், சடைமுடியுடையவனாய், மருண்ட மானைக் கையில் ஏந்தியவனாய், கற்பகமாய்க் கற்குடியில் உறையும் சிறப்புடையவனை நான் கண்ணாரக் கண்டேன்.
2688 | மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை விண்ணதனி லொன்றை விரிக திரைத் எண்ணதனில் எழுத்தைஏ ழிசையைக் காமன் கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக் |
6.060.3 |
மண்ணில் ஐந்து, நீரில் நான்கு, தீயில் மூன்று, காற்றில் இரண்டு, விண்ணில் ஒன்று என்ற பண்புகளுக்குக் காரணனாய், சூரியனாய், சந்திரனாய், விண்மீன்களாய், அவைகளிலும் எண்ணிறந்தனவாய் உள்ள பொருள்கள் மேல் நிகழும் சொற்களாய், ஏழிசையாய், மன்மதனுடைய அழகிய உடல் அழியுமாறு தீயை வெளிப்படுத்திய அதற்குமுன், திறக்கப்படாத நெற்றிக்கண்ணனாய், கற்பகமாய் உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.
2689 | நற்றவனைப் புற்றரவ நாணி னானை முற்றவனை மூவாத மேனி யானை பற்றவனைப் பற்றார்தம் பதிகள் செற்ற கற்றவனைக் கற்குடியில் விழுமி யானைக் |
6.060.4 |
மேம்பட்ட தவத்தினனாய்ப் பாம்பை வில் நாணாகக் கொண்டவனாய் வெட்கப்படாமல் மண்டையோட்டில் இடப்படும் பிச்சையை விரும்பியவனாய், நிறைவுடையவனாய், மூப்படையாத உடம்பினனாய், கடல் நஞ்சை விரும்பி உண்டவனாய், எப்பொருட்கும் பற்றுக்கோடாய் உள்ளவனாய், பகைவருடைய மும்மதில்களையும் அழித்த படையை உடையவனாய், தன்னை அடைந்த அடியவருடைய பாவத்தைப் போக்கக் கற்றவனாய், கற்பகமாய் கற்குடியில் உள்ள விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.
2690 | சங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன் தன்னைச் அங்கையனை அங்கமணி ஆகத் தானை மங்கையனை மதியொடுமா சுணமுந் தம்மின் கங்கையனைக் கற்குடியில் விழுமியானைக் |
6.060.5 |
ஐயத்தைப் போக்கி அடிமை கொண்ட தலைவனாய், நன்மை செய்பவனாய், கைப்பிடியை உடைய நெருப்பைப் போன்ற கொடிய மழுப்படையைத் தாங்கும் கையனாய், எலும்பை அணிந்த மார்பினனாய், பார்வதி பாகனாய், பிறையும் பாம்பும் நட்புடன் பழகும் தன் சடைமுடிமேல் ஆகாய கங்கையை வைத்தவனாய், கற்பகமாய், உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.
2691 | பெண்ணவனை ஆணவனைப் பேடா னானைப் விண்ணவனை விண்ணவர்க்கு மேலா னானை பண்ணவனைப் பண்ணில்வரு பயனா னானைப் கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக் |
6.060.6 |
பெண்ணாய், ஆணாய், அலியாய்ப் பிறப்பு இறப்பு அற்றவனாய், ஓசை நீங்காத விண்ணாய், விண்ணவர்க்கு மேம்பட்டவனாய், வேதியனாய், வேத கீதம் பாடும் பண்ணாய்ப் பண்ணில் வரும் பயனாய் அமைபவனாய், நில உலகமாய், அவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் பற்றுக்கோடாய், கற்பகமாய் உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.
2692 | பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் தன்னைப் உண்டானை உமிழ்ந்தானை உடையான் தன்னை விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும் கண்டானைக் கற்குடியில் விழுமி யானைக் |
6.060.7 |
பண்டையனாய், உலகத்தோற்றத்தில் பரந்து நிற்பவனாய், உலக ஒழுக்கத்தில் குவிந்து இருப்பவனாய், இவ்வுலகாய், தேவருலகாய், இவ்வுலகமெல்லாம் உண்டவனாய்ப் பின் வெளிப்படுத்தியவனாய், அவற்றிற்கு உரிமையாளனாய், ஒருவரும் தன் பெருமையை அறிய முடியாதபடி சேயனாய், பகைவர் முப்புரமும் தீயில் வெந்து பொடியாகி விழச் செய்தவனாய், கற்பகமாய், உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.
2693 | வானவனை வானவர்க்கு மேலா னானை தேனவனைத் தேவர்தொழு கழலான் தன்னைச் கோனவனைக் கொல்லை விடை யேற்றி னானைக் கானவனைக் கற்குடியில் விழுமியானைக் |
6.060.8 |
வானவனாய், தேவர்களுக்கு மேம்பட்டவனாய், தன்னை வணங்கும் அடியவர் மனத்துள் விரும்பிப்புகுந்த தேன் போன்றவனாய், தேவர்கள் தொழும் திருவடிகளை உடையவனாய், பலவாகி நின்ற தன் செயல்கள் யாவினும் வெற்றி காணும் தலைவனாய், முல்லை நிலத்தெய்வமாம் திருமாலாகிய காளையை உடையவனாய், குழலும் முழவும் ஒலிக்கச் சுடுகாட்டில் கூத்தாடவல்ல, கற்பகம் போன்ற கற்குடியில் விழுமி யானைக் கண்ணாரக் கண்டேன் நானே.
2694 | கொலையானையுரிபோர்த்த கொள்கை யானைக் சிலையானைச் செம்மைதரு பொருளான் தன்னைத் தலையானைத் தத்துவங்க ளானான் தன்னைத் கலையானைக் கற்குடியில் விழுமி யானைக் |
6.060.9 |
தன்னால் கொல்லப்பட்ட யானையின் தோலைப் போர்த்த செயலினனாய், மலையாகிய வில்லில் திருமாலைக் கூரிய அம்பாகக் கோத்தவனாய், எல்லோருக்கும் நன்மை செய்பவனாய், திரிபுர அசுரருள் சுதர்மன், சுசீலன், சுமாலி என்ற மூவருக்கு நலன் செய்த மேம்பட்டவனாய், மெய்ப்பொருள்கள் ஆகியவனாய், பார்வதி பாகனாய், கையில் மானை ஏந்தியவனாய், கற்பகமாய், கற்குடியில் உள்ள விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.
2695 | பொழிலானைப் பொழிலாரும் புன்கூ ரானைப் எழிலானை இடைமருதி னிடங்கொண் டானை அழலாடு மேனியனை அன்று சென்றக் கழலானைக் கற்குடியில் விழுமி யானைக் |
6.060.10 |
உலகமாக உள்ளவனாய், சோலைகள் நிறைந்த புன்கூர், புறம்பயம், அறத்தை விரும்பிச் செய்கின்ற புகலூர், இடைமருது, ஈங்கோய் இவற்றில் அழகாக இடங்கொண்டு நீங்காது தங்கும் தலைவனாய், தீயில் கூத்தாடும் திருமேனியை உடையவனாய், ஒரு காலத்தில் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தோள்கள் நெரியுமாறு ஊன்றிய திருவடியை உடையவனாய்க் கற்பகமாய் உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 58 | 59 | 60 | 61 | 62 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கற்குடி - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கற்குடியில், கண்டேன், கண்ணாரக், விழுமி, யானைக்கற்பகத்தைக், விழுமியானைக், கற்பகமாய், உடையவனாய், மேம்பட்டவனாய், தேவர்களுக்கு, தலைவனாய், தீயில், சடைமுடிமேல், பற்றுக்கோடாய், திருமுறை, விழுமியானைக்கற்பகத்தைக், உள்ளவனாய், திருச்சிற்றம்பலம், பலவாகி, விண்ணவர்க்கு, பாகனாய், பார்வதி, செய்பவனாய், நீரில், போன்றவனாய், திருமேனியை, மூப்படையாத, எல்லாம், கற்பகம், செம்மை, ஏந்தியவனாய், கையில், இருப்பவனாய், திருக்கற்குடி, வானவர்க்கு