முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.048.திருவலிவலம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.048.திருவலிவலம்
6.048.திருவலிவலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மனத்துணைநாதர்.
தேவியார் - வாளையங்கண்ணியம்மை.
2564 | நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண் வில்லான்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண் சொல்லான்காண் சுடர்மூன்று மாயி னான்காண் வல்லான்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் |
6.048.1 |
பெரியவனாய், நான்கு வேத சொரூபனாய் நம்மால் விரும்பப்படுபவனாய்ப் பகைவருடைய மும்மதில்களையும் எய்தவில்லை உடையவனாய்த் தேவர்களுக்கும் மேம்பட்டவனாய்ப் பார்வதி பாகனாய், மந்திர வடிவினனாய்ச் சந்திரன் சூரியன் தீ என்ற மூஒளிகளின் உருவனாய்த் தொண்டராகி வழிபடுபவர்களுக்கு வீட்டுலகை ஈய வல்லவனாய்த் தேவர்கள் வணங்கித் துதிக்கும் வலிவலத்தை உகந்தருளியிருக்கும் பெருமான் என் உள்ளத்தில் உள்ளான்.
2565 | ஊனவன்காண் உடல்தனக்கோர் உயிரா னான்காண் தேனவன்காண் திருவவன்காண் திசையா னான்காண் கானவன்காண் கடலவன்காண் மலையா னான்காண் வானவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் |
6.048.2 |
வலிவலத்துப் பெருமான் எல்லோருக்கும் உடம்பாய், உயிராய், அருளாளாகளுக்கு அநுபவப் பொருளாய், உலகியலில் திளைப்பார்க்கு அநுபவம் ஆகாதவனாய்ப் பார்வதிக்குத் தேன் போன்று இனியனாய்ச் செல்வமாய்த் திசைகளாய்த் தூயவனாய், அருச்சுனனுடைய போர்த்தொழிலை அநுபவித்த வேடனாய், கடலாய், மலையாய், மதயானையைக் கொன்று அதன் உதிரப் பசுமை கெடாத தோலைப் போர்த்திய தேவனாய், தேவர்களும் வணங்கித் துதிக்கப்படுபவனாய் என் உள்ளத்தில் உள்ளான்.
2566 | ஏயவன்காண் எல்லார்க்கு மியல்பா னான்காண் தாயவன்காண் உலகுக்கோர் தன்னொப் பில்லாத் ஆயவன்காண் அண்டத்துக் கப்பா லான்காண் வாயவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் |
6.048.3 |
எப்பொருளையும் நடத்துபவனாய், எல்லாருக்கும் இயக்கத்தை வழங்குபவனாய்த் துன்பக்கலப்பற்ற இன்பம் உடையவனாய்த் தாயாய், உலகில் தன்னை ஒப்பார் இல்லாத மெய்ப் பொருளாய், உத்தமனாய்த்தானே எங்கும் பரவியவனாய், அண்டங்களுக்கும் அப்பாற்பட்டவனாய், மனம் உருகி மெய் மயிர் பொடித்து அழும் அடியவர்களுக்குத் தன்னை அழைக்கும் அவர்கள் வாயிலுள்ளவனாய்த் தேவர்கள் வணங்கித் துதிக்கும் வலிவலத்தில் உறைபவன் என் உள்ளத்தில் உள்ளான்.
2567 | உய்த்தவன்காண் உடல்தனக்கோர் உயிரானான்காண் வித்தவன்காண் விண்பொழியும் மழையா னான்காண் பொய்த்தவன்காண் பொழிலேழுந் தாங்கி னான்காண் வைத்தவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் |
6.048.4 |
வலிவலத்துப் பெருமான் உடலுக்கு உயிராய் அதனைச் செலுத்துபவனாய், ஓங்காரத்தால் குறிப்பிடப்படும் எப்பொருட்கும் தலைவனாய், உலகுக்கெல்லாம் காரணனாய், வானத்து மழையாய், மழையின் விளைவாய்த் தன்னை விரும்பாதார் மனத்துத் தோன்றாதவனாய், ஏழுலகையும் தாங்குபவனாய்த் தலையில் கங்கை பிறை பாம்பு இவற்றை அணிந்தவனாய்; வானவர்கள் வணங்கித் துதிக்கப்படுபவனாய் என் உள்ளத்தில் உள்ளான்.
2568 | கூற்றவன்காண் குணமவன்காண் குறியா னான்காண் நீற்றவன்காண் நிழலவன்காண் நெருப்பா னான்காண் ஏற்றவன்காண் ஏழுலகு மாயி னான்காண் மாற்றவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் |
6.048.5 |
தேவர்கள் வணங்கித்துதிக்கும் வலிவலத்துப் பெருமான் சொற்களாகவும், சொற்பொருளின் பொதுத் தன்மையாகவும், சிறப்புத் தன்மையாகவும், எல்லாக் குற்றங்களாகவும், நீறணிந்தவனாகவும், நிழலாகவும், வெப்பமாகவும், மேல்நோக்கிய சிவந்த சடையின் மேல் கங்கை நீரை ஏற்றவனாகவும், ஏழுலகும் ஆகியவனாய் இமை நேரத்தில் மன்மதனைச் சாம்பலாக்கியவனாய், என் உள்ளத்து உள்ளான்.
2569 | கோவணமோ தோலோ உடை யாவது பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான் தீவணத்த செஞ்சடைமேல் திங்கள் சூடித் ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம் |
6.048.4 |
தலைவராகிய பெருமான் உடுப்பது கோவணமோ தோலோ? ஊர்வது காளையோ, யானையோ? அவர் இருக்குமிடம் பூவணமோ புறம்பயமோ? அவர் பொருந்தாதார் வாழ்க்கையாகிய ஐயமேற்றுண்டல் அழகோ அழகன்றோ? தீப்போன்ற செஞ்சடை மேல் பிறை சூடி நான்கு திசைகளையும் தம் இருப்பிடமாகக் கொண்ட செந்நிறத்து எம்பெருமானார் இப்பொழுது இருக்குமிடம் ஒற்றியூரோ ஆரூரோ அறியேன். அவர்திருவுள்ளம் எவ்வெவற்றில் எவ்வாறாகி உள்ளதோ?
2570 | பெண்ணவன்காண் ஆணவன்காண் பெரியோர்க் கென்றும் எண்ணவன்காண் எழுத்தவன்காண் இன்பக் கேள்வி கண்ணவன்காண் கருத்தவன்காண் கழிந்தோர் செல்லுங் மண்ணவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் |
6.048.7 |
தேவர்கள் வணங்கித்துதிக்கும் வலிவலத்துப் பெருமான் பெண்ணாய், ஆணாய், அரியாய்ப் பிரமனாய்ப் பெரியோரில் பெரியோனாய், எண்ணாய், எழுத்தாய், இயலாய்ச் செவிக்கு இன்பம் தரும் இசையாய்க் கண்ணாய்க் கருத்தாய், இறந்தோர் செல்லும் வழியாய், ஞானமாய், ஏழ்கடல் சூழ்ந்த நிலமாய் என் உள்ளத்து உள்ளான்.
2571 | முன்னவன்காண் பின்னவன்காண் மூவா மேனி அன்னவன்காண் அடியார்க்கும் அண்டத் தார்க்கும் மின்னவன்காண் உருமவன்காண் திருமால் பாகம் மன்னவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் |
6.048.8 |
வானவர்கள் வணங்கித் துதிக்கும் வலிவலத்துப் பெருமான் முன்னவனாய்ப் பின்னவனாய், என்றும் ஒரே நிலையிலிருக்கும் முதலும் முடிவுமாய் இருப்பவனாய்த் திங்கள் ஞாயிறு தீ என்ற மூவொளியாய், அடியார்க்கு அணியனாய், உலகியலில் மூழ்கியவர்களுக்குத் தொலைவில் உள்ளவனாய், எல்லையற்ற ஒளியை உடைய மின்னலாய், இடியாய்த் திருமாலை உடலின் ஒருபாகமாகக் கொண்டவனாய்க் கங்கையைச் சடையில் நிலைபெறச் செய்தவனாய் என் உள்ளத்து உள்ளான்.
2572 | நெதியவன்காண் யாவர்க்கும் நினைய வொண்ணா கதியவன்காண் காரவன்காண் கனலா னான்காண் பதியவன்காண் பழமவன்காண் இரதந் தான்காண் மதியவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் |
6.048.9 |
வானவர்கள் வணங்கித்துதிக்கும் வலிவலத்துப் பெருமான் செல்வமாய், யாரும் மனத்தால் அணுக இயலாத நீதியனாய் வேதியனாய்த் தன்னை விருப்புற்று நினைக்கும் அடியவர் சென்று சேரும் கதியாய், நீராய்த் தீயாய்ப் பல ஊழிக்காலங்களாய், எல்லாருக்கும் தலைவனாய்ப் பழமாய்ப் பழத்தின் சாறாய்ப் பாம்பையும் பிறையையும் பழகுமாறு அருகில் வைத்த ஞானமுடையவனாய் என் உள்ளத்து உள்ளான்.
2573 | பங்கயத்தின் மேலானும் பால னாகி தங்கைவைத்த சென்னியரா யளக்க மாட்டா கொங்கலர்த்த முடிநெரிய விரலா லூன்றுங் மங்கையர்க்கோர் கூறன்காண் வானோ ரேத்தும் |
6.048.10 |
தேவர் வழிபடும் வலிவலத்தான் தாமரையில் உறையும் பிரமனும் வாமனனாய் உலகை அளந்த திருமாலும் கைகளைத் தலைமிசைக் குவித்து முன்னின்று துதித்து முடியையும் அடிகளையும் எளிமையில் காணமாட்டாது, தம் முயற்சியால் காண முற்பட்டமையின் காணமுடியாத தீப்பிழம்பாக நின்றவனாய் இராவணனுடைய பூக்களைச் சூடிய தலைகள் நெரியுமாறு விரலால் அவனை அழுத்திய இளையனாய், அழகனாய், அழகிய பார்வதி பாகனாய் என் உள்ளத்தில் உள்ளான்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 46 | 47 | 48 | 49 | 50 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவலிவலம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வானவர்கள், காணவனென், மனத்து, உள்ளான், வணங்கி, யேத்தும்வலிவலத்தான், பெருமான், வலிவலத்துப், வணங்கித், உள்ளத்தில், உள்ளத்து, தேவர்கள், வணங்கித்துதிக்கும், துதிக்கும், திங்கள், தன்மையாகவும், இன்பம், விரும்பாதார், ஊர்வது, இருக்குமிடம், புறம்பயமோ, எல்லாருக்கும், கோவணமோ, பொருளாய், திருமுறை, பாகனாய், பார்வதி, உடையவனாய்த், திருவலிவலம், உடல்தனக்கோர், உலகியலில், நான்கு, உயிராய், திருச்சிற்றம்பலம், துதிக்கப்படுபவனாய்