முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.020.திருநள்ளாறு
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.020.திருநள்ளாறு
6.020.திருநள்ளாறு
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியர்.
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
2286 | ஆதிக்கண் நான்முகத்தி லொன்று சென்று சேதித்த திருவடியைச் செல்ல நல்ல மாதிமைய மாதொருகூ றாயி னானை நாதியை நம்பியை நள்ளாற் றானை |
6.020.1 |
ஆதி அந்தணன் எனப்படும் பிரமனுடைய முகங்களில் ஒன்று உண்மை அல்லாத சொல்லினைக் கூற அம்முகத்தைத் தன் கையையே வாளாகக் கொண்டு போக்கிய வயிரவனாய், அடியார்கள் அடைவதற்கு மேம்பட்ட சிவலோகம் அடையும் வழியைக் காட்டுவானாய், விரும்பத்தக்க பார்வதி பாகனாய், தாமரை மலர் மேல் உள்ள பிரமனும், திருமாலும் காணமுடியாத தலைவனாய்க் குண பூரணனாய்த் திருநள்ளாற்றில் உகந்தருளியிருக்கும் பெருமானை அடியேனாகிய நான் தியானம்செய்து துன்பங்களிலிருந்து நீங்கிய செயல் மேம்பட்டதாகும்.
2287 | படையானைப் பாசுபத வேடத் தானைப் அடையாமைக் காப்பானை யடியார் தங்கள் சடையானைச் சந்திரனைத் தரித்தான் தன்னைச் நடையானை நம்பியை நள்ளாற் றானை |
6.020.2 |
பலபடைக்கலங்களை உடையவனாய்ப் பாசுபதமதத்தில் கூறப்படும் வேடத்தனாய், முற்காலத்தில் மன்மதன் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக்கண்ணால் நோக்கியவனாய், அடியவர்களுக்கு அமுதமாய் அவர்கள் நிலைக்க ஐயோ என்று இரங்கி அருள் செய்பவனாய்ச் சடையை உடையவனாய்,காளையில் செல்பவனாய்க் குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.
2288 | படஅரவ மொன்றுகொண் டரையி லார்த்த அடலரவம் பற்றிக் கடைந்த நஞ்சை மடலரவம் மன்னுபூங் கொன்றை யானை நடலரவஞ் செய்தானை நள்ளாற் றானை |
6.020.3 |
படமெடுக்கு பாம்பு ஒன்றனை இடையில் இறுகக்கட்டிய, மேலும் கீழுமாய் நிற்பவனை, பைஞ்ஞீலி என்ற தலத்தை உகந்தருளியவனை, வலிய பாம்பினைக்கொண்டு கடைந்தபோது தோன்றிய விடத்தை அமுதம்போல் உண்டவனை, எல்லோருக்கும் முற்பட்டவனை, இதழ்களிலே வண்டுகளின் ஒலிநிறைந்த கொன்றைப் பூவினை அணிந்தவனை, சிறந்த இரத்தினம் போன்றுகண்ணுக்கு இனியவனை. மார்க்கண்டேயன் என்ற பிரமசாரியைக் காத்தற்பொருட்டுக் காலனைத் துன்புறுத்தத் தன் கால் சிலம்பு ஒலிக்க அவனை உதைத்தவனை, நள்ளாற்றில் உகந்தருளியிருப்பவனை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.
2289 | கட்டங்க மொன்றுதங் கையி லேந்திக் சுட்டங்கங் கொண்டு துதையப் பூசிச் பட்டங்க மாலை நிறையச் சூடிப் நட்டங்க மாடியை நள்ளாற் றானை |
6.020.4 |
கட்டங்கம் என்ற படையைக் கையில் ஏந்திக் கங்கணம் அணிந்து, காதில்தோடு அணிந்து, உடம்பை எரித்த சாம்பலைத் தன் திருமேனியில் நிறையப் பூசி அழகனாய்த்தன் கையில் சூலம் ஏந்தி எலும்பு மாலையை நிறையச் சூடிப் பூதக்கூட்டமும் தானுமாய்ப் பரந்து சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.
2290 | உலந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம் சிலந்திதனக் கருள்செய்த தேவ தேவைத் கலந்தார்தம் மனத்தென்றுங் காத லானைக் நலந்தாங்கும் நம்பியை நள்ளாற் றானை |
6.020.5 |
இறந்தவர்களுடைய எலும்பு மாலையை அணிந்து உலகமெல்லாம் ஒரு நொடிநேரத்தில் சுற்றிவருகின்றவனாய், அழிவில்லாத பெருஞ்செல்வத்தைச் சிலந்திப்பூச்சிக்கு அருளிய தேவதேவனாய்ச் சிராப்பள்ளியில் உகந்தருளியிருக்கும் சிவலோகனாய்த் தன்னைக் கூடிய அடியவருடைய உள்ளத்தைத் தான் என்றும் விரும்புபவனாய்க் காஞ்சியில் ஏகம்பத்து உறைவானாய், நறுமணம் கமழும் கொன்றைப் பூவினால் செயற்கை அழகு கொண்ட குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.
2291 | குலங்கொடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னைக் மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட சலங்கெடுத்துத் தாயமூல தன்ம மென்னுந் நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை |
6.020.6 |
அடியவர் குடி என்ற பெருமையைக் கொடுத்துத் துன்பத்தை நீக்க வல்லவனாய், பார்வதியை இடப்பாகனாய், உயிர்களைப் பற்றியுள்ள அழுக்குகளை நீக்கித்தன் திருவருளாகிய புனித நீரில் அவற்றை மூழ்குவிப்பவனாய், வேதத்தை ஓதுபவனாய், பிறை சூடிய சடையினனாய், நடுக்கத்தைப் போக்கி இரக்கத்தையே அடிப்படையாகக் கொண்டு அறம் என்னும் உண்மைப் பொருளின் வழியில் வாழ்ந்து தன்னை வழிபடுபவருக்கெல்லாம் நன்மையை நல்கும் குணபூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.
2292 | பூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானைப் மாவிரியக் களிறுரித்த மைந்தன் தன்னை தேவிரியத் திகழ்தக்கன் வேள்வி யெல்லாஞ் நாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானை |
6.020.7 |
பூவாய் விரியும் கொன்றை மலரைச் சூடிய சடையினனாய்ப் புறம்பயம், புகலூர், மறைக்காடு, வலிவலம் என்ற திருத்தலங்களை உகந்தருளிய பெருமானாய், மற்றைய விலங்குகள் அஞ்சி ஓடுதற்குக் காரணமான வலிமையை உடைய களிற்றின் தோலை உரித்த வலிமையை உடையவனாய், ஏனைய தேவர்களும் அஞ்சி ஓடுமாறு தக்கனுடைய வேள்வி முழுதையும் அழித்தவனாய், அவனை ஒறுத்து அவன் தலையை நீக்கினவனாய், நாவினின்றும் வெளிப்படுமாறு வேதத்தை ஓதுபவனாய் உள்ள நள்ளாற்றானை நான்அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.
2293 | சொல்லானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத் வில்லானை யெல்லார்க்கும் மேலா னானை கல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானைக் நல்லானை நம்பியை நள்ளாற் றானை |
6.020.8 |
வேதங்களை ஓதுபவனாய், ஒளி வீசும் பவளம் போன்ற செந்நிறத்தானாய்ப் பழைய அசுரருடைய மூன்று மதில்களையும் எரியச் செய்த வில்லினை ஏந்தியவனாய், எல்லாருக்கும் மேம்பட்டவனாய்ப் பார்வதி பாகனாய்க் கல்லாலின் கீழே அமர்ந்து நால்தேவதங்களின் அறத்தையும் மௌன நிலையில் நால்வருக்கு உபதேசித்தவனாய்க் காளத்தியையும், கயிலை மலையையும் உகந்தருளிய பெரியவனாய்க் குணபூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே.
2294 | குன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக் அன்றாக அவுணர்புரம் மூன்றும் வேவ சென்றாது வேண்டிற்றொன் றீவான் றன்னைச் நன்றாகும் நம்பியை நள்ளாற் றானை |
6.020.9 |
மேம்பட்ட முனிவனான மார்க்கண்டேயனுடைய குறை வாழ்நாள் ஆகிய சாபம் தீருமாறு திருவடியால் கூற்றுவனை வருத்திய பெருமானாய்ப் பகைமை உண்டாயினமையின் அசுரர் பின் அவன் உறவாகி இசைத்த இன்னிசை கேட்டு இரங்கி அவன் துயரைத் துடைத்தவனாய்த் தன்னை மறவாத அடியவர் மனத்து என்றும் நிலைபெற்றிருப்பவனாய்க் கொன்றை, வன்னி, ஊமத்தம் பூ இவற்றின் தேன் நிறைந்த செஞ்சடையில் பிறையைச் சூடியவனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே.
2295 | இறவாமே வரம்பெற்றே னென்று மிக்க உறவாகி யின்னிசைகேட் டிரங்கி மீண்டே மறவாதார் மனத்தென்றும் மன்னி னானை நறவார்நெஞ் சடையானை நள்ளாற் றானை |
6.020.10 |
தான் சாகா வரம் பெற்றானாகச் செருக்கிய இராவணனை அவன் தோள்கள் இருபதும் நசுங்குமாறு திருவடி விரலை ஊன்றியவனாய்ப் உடைய மும்மதில்களையும் தீயிட்டுக் கொளுத்தி அழித்தவனாய்த் தன்னை அடைந்து வேண்டியவர் வேண்டியதை ஈவானாய்ச் 'சிவபெருமானே எம் இறைவன்' என்று அவனையே வழிபட்டுக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கு எல்லா நலன்களாகவும் விளங்கும் குண பூரணனாகிய நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநள்ளாறு - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - றுய்ந்த, நள்ளாற், நினைக்கப்பெற், றானைநானடியேன், நள்ளாற்றானை, உய்ந்தவாறே, அடியேன், நினைக்கப்பெற்று, நம்பியை, அணிந்து, கொண்டு, கொன்றை, ஓதுபவனாய், நினைக்கப், பெற்று, என்றும், மாலையை, எலும்பு, வல்லான், அடியவர், வேள்வி, குணபூரணனாய், வலிமையை, வேதத்தை, உகந்தருளிய, கொன்றைப், இரங்கி, உடையவனாய், அடியவர்களுக்கு, உகந்தருளியிருக்கும், மேம்பட்ட, பார்வதி, பூரணனாய், அல்லாத, பைஞ்ஞீலி, நிறையச், திருமுறை, திருநள்ளாறு, திருச்சிற்றம்பலம், கையில்